Sunday, 29 April 2018

வகுப்பறை உளவியல் _ 8

வகுப்பறை உளவியல் - 8
************************

சமூகப் பொருளாதார -ஆண் பெண்அரசியல் பேசுவோம்
******"""**""""""************"""""""**********"""******"""""""""

வகுப்பறை எப்போதும் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு நாளும் திட்டமிடுகிறோம். சில நாட்களில் எந்தவிதத் திட்டமிடலுமின்றி அது மிக அதிக உயிரோட்டமாக அமைந்து விடுகிறது. அது போன்ற ஒரு நல்ல நினைவை இங்குப் பகிர்கிறேன்.

இப் பள்ளிக்கு வந்த இந்த 4 மாதங்களில் என்னை 3 அமைப்புகளிலிருந்து (அமுதசுரபி , வட சென்னை பகிர்வு ,DYFI ) சிறந்த சமூக செயல்பாட்டாளர் , கல்விக்  களப்பணியாளர் , பெண் சாதனையாளர் என கெளரவித்துள்ளனர் . எங்கு எது நடந்தாலும் அது வகுப்பறைக்குத் தேவைப்படும் எனத் தோன்றினால்  எனது மாணவருடன் பகிர்வது வழக்கம். இது ஒரு ஆயத்தப் பயிற்சி எனது மாணவருக்கு .

DYFI அமைப்பின் சிறந்த மகளிர் சாதனையாளர் விருதுக் கேடயத்தினை எனது மாணவிகளின் கைகளில் கொடுத்தேன் .....
ஓ.... மிஸ் என்னங்க மிஸ் இது ?
யாரு தந்தா ?
எதுக்கு உங்களுக்குக் கொடுத்தாங்க
யார் இவங்க ? உங்கள எப்படித் தெரியும் இவங்களுக்கு ?
என்ன செஞ்சா இப்படி நாங்களும் வாங்கலாம் ? இப்படி எக்கச்சக்கக் கேள்விகள்  ,

ஓரளவிற்கு எல்லோரும் சமாதானம்  ஆகி திருப்தி படும் வரை அவர்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்தேன். 4 வகுப்புக்  குழந்தைகள்  இதனைத் தொட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டு என்னுடன் அந்த விருதுடன் ஃபோட்டோ  எடுத்துக் கொண்டனர்.

இதில் ஒரு  வகுப்பு மாணவிகள் தமிழ் வழி பயில்பவர்கள் 7 ஆம் வகுப்பு ஆபிரிவு  , பொதுவாகவே பள்ளிகளில் ஆங்கில வழி யில் படிக்கும் குழந்தைகளுக்கும் தமிழ் வழியில் படிப்போருக்கும் இடையே பாகுபாடு பார்க்கும் வழக்கம் எல்லா இடங்களிலும் உண்டு , இங்கும் அப்படித்தான், அந்த மாணவிகள் மன வயதில் மற்றவரோடு சமமானவர்களே , ஆனால் பல விஷயங்களில் அதே 7 ஆம் வகுப்பில்  ஆங்கில வழி பயிலும் மாணவிகளுடனான ஒப்பிடுதவில் முரண்பட்டு இருக்கின்றனர். ஆகவே இவர்களிடம் நிறைய பேச வேண்டி இருக்கிறது.

அவர்களை மனம் திறக்க இந்த DYFI விருதை ஒரு வலுவான கருவியாகப்  பயன்படுத்தினேன். யார் இவர்கள் என்ற அவர்களின் சந்தேகத்திற்கு  இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தை அறிமுகம் செய்ய வேண்டியதாயிற்று. அதோடு தமிழக அரசியல் கட்சிகள் இன்றைய நாட்டு நிலைமை என எங்கள் கலந்துரையாடலும் சிரிப்பும் என ஆழமான ஒரு தாக்கம் அவர்களிடம்  ஏற்பட்டது.

மிஸ் .... யார் யாருக்கு மிஸ் இது குடுத்தாங்க ...?
நான் என்னோடு சேர்த்து பெருமைப்படுத்தப்பட்ட மற்ற 4  பெண்களைப் பற்றியும் குறிப்பிட , அதில் கௌசல்யா சங்கர் பற்றி பேச , மிஸ் நான் அந்த நியூஸ டிவில பார்த்தேன் என்று ஒரு 4 மாணவிகள் கைதூக்கி மிகத் தெளிவாக அந்த சாதியப் பிரச்சனையை தாங்கள் செய்திகளில் பார்த்ததை   விளக்கினர்.

அதோடு காதல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் குடும்பத்தில் எதிர்வினை , எப்போது அதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் , கொலை செய்யுமளவிற்கான வெறித்தனமான அதீத உணர்ச்சி வெளிப்பாடு எல்லாம் பேசப்பட்டது.

ஆனால் பள்ளி வயதில் ஏற்படும் காதல் உணர்விற்கு முக்கியத்துவம் தரக்கூடாது. அது அறிவியல் ரீதியாக ஹார்மோன்ஸ் பிரச்சனை என்பதையும் கலந்துரையாடல் வழியே அவர்கள் புரிந்து கொண்டனர்.

4 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை குரோம்பேட் ரயில் நிலையத்தில் காலை 10 மணிக்கு மேல் நான் அலுவலகம் (அன்று அனுமதி பெற்று தாமதமாக செல்கிறேன்) செல்ல, ரயில் நிலையத்தில் பள்ளி சீருடை அணிந்த பதின்ம வயது மாணவிகள் 4 பேர்  வயதொத்த பாலிடெக்னிக் மாணவர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர் , அதைப் பார்த்து நான் பள்ளிக்கூடம் போகாம இந்த நேரத்தில் இங்க என்ன செய்யறீங்க ? எனக் கேட்டேன்.

சற்றே பயந்தனர். உடனே போகலன்ன பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தகவல் சொல்வதாகக் கூற , மாணவிகள்  மாயமாய் மறைந்தனர். தொடர்ந்து அந்தப் பையன்களிடம் கேட்டேன். ஏன்ப்பா இப்படி பொண்ணுகள பள்ளிக்கு போகாம நிக்க வச்சு பேசறீங்க ? என்றேன். அதற்கு அந்த விடலைகள் வேறு மாதிரியாகப் பேச ,நேரமில்லை என நான் மின்சார ரயிலுக்கு செல்லும் படிகளில் இறங்கி மீண்டும் மேலே பார்த்தால் அந்த மாணவிகள் மீண்டும் அங்கே ..!!!

எனக்கா செம கோவம் , இது சரிப்படாது என எண்ணி பயணச்சீட்டு அலுவலர்களிடம் சென்று, இதை விளoக்கி ரயில்வே காவலர் எங்கே எனக்  கேட்டேன், இவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எனக் கூற , அதில் ஒரு பெண் ஊழியர் வருத்தப்பட்டார். மேலும் ரயில்வே காவலர் இங்கு தான் எங்கோ இருப்பர் எனக் கூற, ஆண் ஊழியரோ பணி நேரங்களில் , கேட்க நீங்க யார் எனக் கேட்க, எனக்கும் கோபம் வந்து விட்டது.

நீங்கள் கூட ஒரு பெற்றோர் தானே , உங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு அவர்கள் அங்கு தான் சென்றிருப்பர் என்ற நம்பிக்கையில் தானே இங்கு வந்து நிம்மதியாகப் பணி புரிகிறீர்கள் , அதே போலத்தான்  இந்தப் பெண்குழந்தைகளைப் பெற்றவர்களும் நம்பிட்டு இருப்பாங்க எனக் கூறி கொஞ்ச நேரம் காரம் சாரமா விவாதம் நடத்துச்சு.

அப்புறம் அது பயனில்லை என நினைத்து எனது அலைபேசியிலேயே காவல் துறை 100க்கு அழைத்து விபரம் கூறி  ரயில்வே காவலர் எண்ணை வாங்கி விஷயத்தைக் கூறி தாம்பரத்திலிருந்து அவர்களை வரவழைத்துப் பள்ளிக்கு அனுப்பிய பிறகே நான் அலுவலகத்திற்கு செல்ல ரயிலில் ஏறினேன்.

அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு விட , மணி 12.30 ஆச்சு , எனக்கு காலை அரை நாள் விடுப்பாயிற்று. இருந்தாலும் பரவாயில்லை என எண்ணி மகிழ்ந்த போது அடுத்த ரயில் நிலையம் பல்லாவரம் வந்தது. அங்கும் சீருடை மாணவிகள் , மறுபடியும் அதே காவலருக்கு அழைத்து விபரம் கூறிச் செல்ல , என்ன கொடுமை மீனம்பாக்கம் , சைதாப்பேட்டை என அனைத்து நிறுத்தங்களிலும் பள்ளிச் சீருடை அணிந்த மாணவர்கள் . இந்த நிலையை எனது மாணவிகளிடம் இந்த வகுப்பறையில் சொல்ல , இது போன்ற செயல்களால் என்னென்ன இழப்பு , தீமை என அவர்களே மனம் திறந்து பேசினர்.

மேலும் எதற்காக இந்த விருதுகளை உங்களுக்குத் தருகின்றனர் எனக் கேட்ட மாணவிகள் , அவர்களுள் ஒரிருவர் ஏதோ கொஞ்சம் புரிய , இது மாதிரில்லாம் மிஸ் செய்யறதால தான் விருது தராங்கடி எனவும் கூறினர்.

தொடர்ந்து அன்றைய DYFI  விழா பெண்களுக்களுக்கானது எனவும் அங்கு வைத்த மையக் கருத்துகள்  Neet தேர்வு ரத்து , ஆண் பெண் சம உரிமை இவை பற்றியும் பேச , மேலும் எங்கள் பேச்சு வலுப்பெற்றது. வீட்டில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறோம் , நம் சமுதாயம் பெண்கள் வேலைக்குச் சென்று வந்து வீட்டில் வேலை செய்வது , குடும்பங்களில் ஆண் பெண் குழந்தைகள் வளர்ப்பில் பாகுபாடு , என எல்லாம் பேசினோம்.

Good touch , Bad Touch , பெண்கள் எப்படிப் பாதுகாப்பா தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள விழிப்படையணும் என அவர்களுக்குள்ளேயே பேசப்பட்டது.

உங்களை யாராவது அழகா இருக்காங்கன்னு சொன்னா சந்தோஷப்பட்டு உணர்ச்சிவசப்படக் கூடாது , பெண்கள அப்படி சொல்லி சொல்லி தான் அடிமையாக்கி வச்சுருக்கு  வீடும் , நாடும் .
ஆமாமிஸ் , எங்க வீட்ல கூட என்ன அப்படி சொல்லிதான்  வீட்டு வேலை  வாங்குவாங்க எங்க அம்மா ,

மிஸ் நான் ஸ்கூல் முடிஞ்சு போன உடனே வீட்ல நிறைய வேல செய்யலன்னா எங்க அம்மா திட்டு வாங்க , எங்க தம்பிய மட்டும் ஆம்புள புள்ள ன்னு சும்மா உட்கார வைப்பாங்க ... இது என்னங்க மிஸ் நியாயம் ??

நம்ம சமுதாயம் அப்படிப் பழகி விட்டது கண்ணுங்களா , எல்லார் வீட்டிலும் பிரச்சனை இருக்கு. நம்ம வீடுகளில் பெண்கள் தான் சமையல் , வீட்டு வேல செய்யணும்னு காலம் காலமாப் பழக்கி வச்சுருக்காங்க ,

அம்மாவுக்கு நீங்களும் வேல செய்யலன்னா அவங்க கஷ்டத்த நினைச்சுப் பாருங்க ... ஏறத்தாழ உங்களுக்கு 13 வயது இப்போ ... அப்படின்னா 15 வருஷமா சமச்சு , வீட்டு வேல , பாத்திரம் கழுவி  துணி துவச்சு ன்னு தொடர்ந்து உழைக்கிறாங்க ....

எல்லா வேலைக்குச் செல்லும் பெண்களின் வீடுகளிலும் விட்டிலும் வெளியிலும் அவர்களே தான் வேலை செய்யும் சூழல் உள்ளது. ஆனா அதக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தனும்  , பெண் உரிமை பற்றி பெரியார் சொன்னதில் முக்கியமா அடுப்பங்கரையை விட்டு பெண்கள் வெளிய வரணும் என்கிறார். அதப் படிச்சுட்டு சமைக்க மாட்டோம்ஸ் ஸ்டிரைக் பண்ண முடியுமா ? முடியாதில்ல .அதுக்காக நாம சண்டை போட முடியாது. .ஒரேடியா சண்டை போட்டா எல்லா குடும்பங்களிலும் டைவர்ஸ் தான் வாங்கணும்  .

முதல்ல அவங்கவங்க வீட்ல போய் அம்மாகிட்ட 5 நிமிஷம் பேசுங்க , அவங்க சின்னதில இருந்து எப்படி வளர்ந்தாங்க எவ்வளவு ஆசையா, செல்லமா  பெத்தவங்க வளர்ந்தாங்க அல்லது எப்படிக் கஷ்டப்பட்டாங்கன்னு நிறையக் கதைகள் சொல்வாங்க ... இன்னும் நிறைய சொல்வாங்க ... இப்படி எங்கள் உரையாடல் 2 மணி நேரம் நீடிக்க ,

இறுதியில் ....நானும் உங்களைப் போல் அரசுப் பள்ளியில் உங்களைப் போலவே சூழலில் இருந்துதான் வந்து இருக்கேன்.  இது மாதிரி எல்லா சூழலையும் கடந்து தான் இது போன்ற விருதுகள் வாங்கியிருக்கேன். அதனால் நீங்களும் எல்லாவற்றையும் கடந்து இது போன்ற சாதனைகளை அடைவீர்கள்  .... ஓ.... என பெருங்கோஷம் . வாங்குகிறார்களோ இல்லையோ அதற்கான சிந்தனையை விதைத்த நிறைவுடன் ....

தொடரும்
அன்புடன்
உமா

Friday, 27 April 2018

மாணவர் மதிப்பீடு 6

தினம் ஒரு (மாணவர்) மதிப்பீடு : 6
**********************************

எத்தனைக் கல்விக் கொள்கைகள்  வந்தாலென்ன  ? எத்தனைக் கல்விக் கமிஷன்கள்  கல்வியை எளிமைப்படுத்த வந்தாலும் பள்ளியின் மாணவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று நம்மை நாமே கேட்டுக் கொண்டால் இல்லை என்பதே உண்மையான பதிலாக இருக்கும். அவர்களை இயல்பாக அணுகவிடுவதில்லை நாம் எவரும். இதன் விளைவு குழந்தைகள் மனதில் ஏக்கம் பிறந்து விடுகிறது. அன்பிற்கு , சந்தோஷத்திற்கு , தங்களுக்காக நேரம் ஒதுக்குவதற்கு என எல்லாவற்றிற்கும்  ஏங்குகின்றனர்.

இந்த 6 ஆம் வகுப்பு மாணவியைப் பற்றி  , 3 மாதங்களுக்கு முன்னால்  எனக் காலக்கோட்டுப்  பதிவில் "எனக்குக்  கணக்குப்  பிடிக்காது " என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். அவரது இந்த feed back கடிதம் ஒற்றை வரியை ஒட்டுமொத்த மாணவிகளின் குரலாக  கல்வித் துறைக்கும் ஆசிரியர்களுக்கும்  பெற்றோர்களுக்கும்  அறிவுறுத்துகிறது. இனியாவது "சந்தோஷம் " என்ற அந்த ஒற்றை வார்த்தையை இக்குழந்தைகளுக்குத் தர முயற்சிப்போம் .( பிழைகளைத்  திருத்தாமல்  மாணவியின் கடிதம் அப்படியே உங்களுக்காக)

(இதில் என்னை அவர் குழந்தையோடு குழந்தையாக பாவித்து செல்லக்குட்டி என  அழைப்பது பேரானந்தமாய்  உணர்கிறேன்.)

My Chellakutty Miss Feed back to letter Uma mageshwari Miss. எனக்கு கணக்கு பிடிக்காது நீங்க வந்துனால் எனக்கு கணக்கு ரோம்ப ரோம்ப பிடிக்கும் இந்த மாதிரி Miss  எங்கமே  பார்க்க முடியாது ஆனால் எங்க பள்ளியிலும் நல்லா பாத்து பாங்க அந்த பள்ளியில் 6,7 ,8 , 9 , 10 , 11 , 12 ஆம் வகுப்பு இல்லை அங்க இருக்கர ஒரு ஒரு Miss உங்கள மாதிரி இருப்பாங்க ,Miss நீங்க இருக்கர வரிக்கும் எங்க Class ரோம்ப மகிழ்ச்சியாக இருபோம் Miss உங்கள எல்லா Student க்கு ரோம்ப பிடிக்கும் நீங்க எங்கல good habits கத்துக் குடுக்கிறங்க Miss ஒரு ஒரு Sum எங்களுக்கு புரிந்து சொல்லி கொடுக்கிறங்க Miss , உங்கள நான் எப்போமே பார்க்கனும் Miss , I LOVE You Miss  , உங்கள மாதிரி Missங்க இருக்கர வரிக்கும் நான் ரோம்ப சந்தோஷமாயிருப்பேன்  Miss ..
By E .Priya VI A1

இந்தக் கடிதத்தின் இறுதியில் வரும் ஒற்றை வரியே என்னை கவலையுறச் செய்கிறது. இன்றைய பள்ளி குழல், பொதுவாக...  சந்தோஷமில்லாமல் இருப்பதையே இது உணர்த்துகிறது.
தொடரும்
அன்புடன்
உமா

Wednesday, 11 April 2018

தினம் ஒரு (மாணவர்) மதிப்பீடு : 5

ஒரு ஆறாம் வகுப்புக் குழந்தையிடமிருந்து இவ்வளவு அழகானக் கடிதத்தை நான் எதிர்பார்க்கவில்லை. மிக மிக நேர்த்தியாக பொன்னிறத் தாளில் நட்சத்திரங்களை வெட்டி ஆங்காங்கே ஒட்டி அதில் வெண்ணிறத் தாளில் I Love​ you Miss,I like you miss , I mess you miss -by we all students என அழகாக எழுதி ,

அதைப் பிரித்தால் இன்னொரு வெள்ளை நிறத் தாளில் உறை தயாரித்து அதில் miss you are the best best friend of me , என எழுதி அருகே ஒரு ஆரஞ்சு நிற இரப்பர் பொம்மையை ஒட்டி this is you என எழுதி , மற்றொரு புறத்தில் மற்றொரு பறவைப் படத்தை வைத்திருக்க ,

அதையும் பிரிக்க உள்ளே வண்ண எழுத்தில் I 💟 U எனவும் , first you read the English Next you read the Tamil எனவும் எழுதி மிக அழகிய பூ வேலைப்பாடுள்ள ஒரு பாசியை ஒட்டி  உறையாகத் தயாரித்திருக்க ,

உள்ளே பிரித்தால் முழு நீள வெள்ளை நிறத் தாளில் ஆங்கிலத்திலும் வலது மேல் ஒரு இருதய வடிவத் தாளை வெட்டி அதில் வெளிர் சிவப்பு நிறம் தந்து அதற்குள் சில வரிகள் தமிழில் .... ( அப்படியே மாணவியின் எழுத்துகளைத் தருகிறேன் )

Good Habit
                  Maths miss you are the great miss you are the best miss you are lessoning the maths I am study well.miss you come to this class the will change totally and study well you Will not beet anther you always smiling and congrats me an anther. I like your smili. I prayed of you.I like your service.you have proved as a had India girl.You are the Achimemt girl.
You don't have the Bad habit keep it up.
I love you so much to you.   
Thank you
                   Yours loving friend
                     R.Saranya vi A1

தமிழில் ...
நீங்கள் இந்த வகுப்பறைக்கு ஒரு நல்ல கணக்கு ஆசிரியர் படிப்பை விட மரியாதை தான் முக்கியம் என கூறியது நீங்கள் தான் எனவே இந்த பள்ளிக்கு நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர் ...

மாணவர் மதிப்பீடுகள் தொடரும்
அன்புடன்
உமா