Thursday, 18 March 2021

தலைமையாசிரியர் சந்திரா


சந்திரா தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி , 


1995 இல் ராமநாதபுரத்தில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்

பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்த இவர் கற்பித்தல் முறையில் சில வேறுபட்ட மாணவர் கவரும் முறைகளைக் கையாண்டதோடு தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளிக் கட்டிடங்கள் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆசிரியராக இருக்கும் போது மாணவரது கற்றல் திறன் சார்ந்து மட்டுமே தனது செயல்பாடுகள் இருந்தது , தலைமை ஆசிரியராக மாறிய பின்புதான் ,

பள்ளியின் மொத்த மாணவர்களின் கற்றல் திறன் சார்ந்தும் பணி புரிய வேண்டியுள்ளது. அது தவிர   பல்வேறு சிக்கல்களை சந்திக்க வாய்ப்புகளையும் சூழல்களையும் உருவாக்கி விடுகிறது தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு என்று கூறியதோடு அதன் தாக்கங்களை நம்முடன் பகிர்கிறார்.



 10 வருடங்களுக்குப் பிறகு 2005 இல் தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் ஒன்றியத்தில் எஸ் குமாரபுரம் என்ற ஊருக்கு , தலைமை ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார். அந்த உளரோ சாலை வசதியோ பேருந்து வசதியோ இல்லாத  மிகவும் பின்தங்கிய குக்கிராமம். அங்கு பள்ளிக்கூடம் என்ற அமைப்பே கிடையாது, மரத்தடியில் தான் வகுப்பெடுக்கும்  பழக்கம் , ஊர்ப் பிரச்சனையைக் கேட்கவும் ஆள் இல்லை , பள்ளிப் பிரச்சனையைப் பார்க்கவும் யாருமில்லை. மரத்தடி வகுப்புகளை மாற்ற மக்களின் ஆதரவு, கிராமக் கல்விக் குழுவின் உதவி பெற்று , அரசிடம் மன்றாடி இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.


 20 வருடமாக கட்டிடமே இல்லாமல் இயங்கிய அந்தப்  பள்ளிக்கு புத்துயிர் தந்ததோடு குழந்தைகளிடம் கற்பித்தலையும் சரியாகக் கொண்டு சேர்த்துள்ளார் நமது தலைமை ஆசிரியர் சந்திரா . சீருடை இருந்தாலும் அவ்வூரின் பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கு அணிந்து வரும் வழக்கமின்றி இருக்க அதில் மாற்றம் ஏற்படுத்தி பள்ளிக்கு சீருடை அணிந்து வரும் பழக்கத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த பள்ளியிலிருந்து மாறுதல் அடைந்தாலும்  மக்கள் மனதில் இன்றளவும் பேசப்படும் தலைமையாசிரியராக வாழ்கிறார் ,இப்பள்ளியில் 4 வருடங்களே பணியாற்றிய இவர் நடுக்காட்டூர் என்ற பள்ளிக்கு மாறுதல் பெற்று செல்ல , அங்கும் வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்ட முயற்சி மேற்கொள்கிறார்  , நடுக்காட்டூர் பள்ளி விடுமுறை காலத்தில் இடிந்து விழ , கட்டிடம் இல்லாமல் கோவிலில் வைத்து பள்ளியை நடத்தியிருக்கிறார்  .மக்கள் சமயச் சடங்கு நடத்தும், நெற்களமாக பொது மக்கள் பயன்படுத்தும்  இடம் எனக் கூறி  கட்டிடம் கட்ட விடாமல்  செய்ய  , பெரிய போராட்டம் நடத்தியே கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார். அதோடு இந்தக் குழந்தைகளுக்கு சீருடை அணியும்  பழக்கம்  , ஷூ , ஷாக்ஸ் , அடையாள அட்டை என 2007-08 கல்வியாண்டிலேயே கொண்டு வந்ததோடு கற்பித்தலையும் சிறப்பாக்கியிருக்கிறார். தான் செல்லும் எல்லாப் பள்ளிகளிலும் வாசித்தலை முன்னெடுப்பதும் , பாடநூல்களை தமிழ் , ஆங்கிலம் இரண்டிலும் சரளமாக வாசிக்கப் பழக்கப்படுத்துதலும் இவரது மற்றொரு சிறப்பு. கடந்த 2014 இல் ரெட்டியபட்டி என்ற பள்ளிக்கு மாற்றலாகிட எப்போதும் போல் கட்டிடப் பிரச்சனை , ஏற்கனவே அபாயத்தில் இருந்த பள்ளிக் கட்டிடம் ,புதியதாக சென்ற போது மாணவர்களின் தலைமேல் கட்டிடம் இடிந்து விழுந்திட , அவர்களைக் காக்க 108 உதவியுடன் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வைத்து , மீண்டும் மக்களோடு இணைந்து போராட்டம் , கிராமக் கல்விக் குழுவின் உதவியுடன் இந்தப் பள்ளிக்கும் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்து வெற்றி பெற பெரிய பொறுமை தேவைப்பட்டிருக்கிறது. , சமீபத்தில் வேறொரு பிரச்சனை , 5 வகுப்புகளைக் கொண்ட ஆங்கில வழியான இவரது பள்ளியில் இவர் மட்டுமே ஒராசிரியராக இருக்க , கற்பித்தல் மட்டுமன்றி நிர்வாகப் பணிகளும் சுமையாக , மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்தி அரசை நிர்ப்பந்தித்து கடந்த சில நாட்களுக்கு முன் மாற்றுப் பணியில் ஓராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்படியான போராட்டங்களுடனேயே பல பள்ளிகளில் கிராமங்களில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது பதிவு செய்யப்பட வேண்டும். இப்படியான சூழலில் நம் தமிழக அரசின் சமீபத்திய அரசாணை 5 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு என்பது. தேர்வு குறித்த பல விதமான கருத்துகள் நிலவினாலும் தேர்வுக்கு குழந்தைகளை தயார் செய்ய ஒரே ஆசிரியர் உள்ள பள்ளிகள் என்ன செய்யும் ? சந்திரா போன்ற தலைமை ஆசிரியர்கள் பல வித போராட்டங்களுக்கிடையே தேர்வு குறித்த தேவைகளுக்கும் போராட வேண்டுமெனில் அரசுப் பள்ளிகள் மக்கள் பள்ளிகளாக மாற வேண்டும் .மக்களிடமிருந்து கேள்விகள் பிறக்க வேண்டும் .அரசுக்கு புரிய வைக்க வேண்டும். 


உமா

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்


ஆசிரியர் - மாணவர் உறவு முறை

குழந்தைகளுடன் உரையாடுவோம் - 5


மெல்ல நழுவுகின்ற கல்வி . 


உளவியல் கல்வி அவசியமாக அவசரமான தேவை 


ஆசிரியர் - மாணவர் உறவு முறை 


கட்டமைப்பு , பாடப்பொருள் தாண்டிய அணுகுமுறையே முதல் தேவை .. 


வீட்டை விட்டு வெளியில் வந்தறியாத கிரிகிஸ் குழந்தைகளுக்கு ஒரு குன்றின் மீதிருந்த குதிரைக் கொட்டடியை அவர்களுக்கான ஒரு  பள்ளிக் கூடமாக மாற்றுகிறார் தூய்ஷன். அப்பள்ளிக்குத்  தானே ஆசிரியராக மாறுகிறார். அவர் கல்வி அறிஞருமில்லை , ஆசிரியர் பயிற்சி பெற்றவருமில்லை , இலக்கணம் தெரிந்தவருமில்லை. ஆனால் அவர் அந்த கிராமத்துக் குழந்தைகளுக்கு ஆரம்ப எழுத்தறிவையும் கல்வியறிவையும் கற்றுத் தருகிறார். அவரிடம் குதிரைக் கொட்டகையில் பயின்ற அல்டினாய் என்ற மாணவி அந்த மாகாணத்தின் மிகப் பெரும் கல்வி அறிஞராக உருவெடுக்கிறார். சிங்கிஸ் ஐத் மாதவ் எழுதிய முதல் ஆசிரியன் என்ற குறு நாவலில் இடம் பெறும் காட்சிகள் இவை. அல்டினாய் மட்டுமல்ல அந்த கிராமத்தின் அத்தனைக் குழந்தைகளுக்கும் நடத்தை மாற்றத்தை நல்ல எழுத்தறிவை வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை தனது அணுகுமுறையால், மாணவருடனான நல்லுறவால்   தூய்ஷேன் வழங்குகிறார்.  .


நம்மில் பலரும் இந்நாட்களில் கூறுவது , நாங்கள் எல்லாம் அந்த நாட்களில் மரத்தடியில் தான் படித்தோம்..  அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளிக்கூடங்களில் கூட ஆசிரியர்களின் அணுகுமுறையால்  வெற்றி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். 


இன்றுள்ள பள்ளிகள் அனைத்தும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஓரளவிற்கு முழுமையாகப்  பெற்றுள்ளன .இன்றைய நவீன வகுப்பறைகள் ஆங்காங்கே உருவாகி புத்தாக்கம்  பெறும் பள்ளிகளை எல்லா இடங்களிலும் காணலாம் . அதே போல அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். பயிற்சியும் பாடப் பொருள் அறிவும் நிரம்பப் பெற்றவர்களாக இருக்கின்றனர்.  ஆனால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே உருவாகும்  உறவு முறை , பாடப் பொருள் தாண்டிய அணுகுமுறையை ஆய்வு செய்தால்  உவப்பானதாக இருக்கிறது என நம்மால் அறுதியிட்டுக் கூறிட முடியாது. 


நமது  வகுப்பறையில் அமர்ந்திருக்கும்  ஒவ்வொரு குழந்தையும் வேறு வேறு சூழலிருந்து வந்தவர்கள். குடும்ப சூழல் ,  தனியாள் வேறுபாடுகள் ,  மன உணர்வுகள், அடைவுத் திறன்கள்  என எல்லாவற்றிலும் வேறுபட்டு இருப்பவர்களே . அதோடு பொருளாதார சூழல் , சமூக சூழல் இவற்றிலும் வேறுபட்டே வந்திருப்பார்கள். ஒரு குழந்தையின் இத்தனை வேறுபாடுகளையும் மனதில் கொண்டு தான் ஒரு ஆசிரியர் அவர்களை அணுக வேண்டிய சூழல் உருவாகிறது. ஆகவே தான் ஆசிரியர் பணியும் சவாலான பணியாகிறது. 


இன்றைய நம் வகுப்பறை சூழலோ தேர்வுக்கு முக்கியத்துவம் தருவதாக இருப்பதால் ஆசிரியர்கள் அணுகுமுறைக்கு பதிலாக பாடத்திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவே முன் வருகின்றனர். பல்வேறு சூழல்களிலிருந்து சீரற்ற மனநிலையில் வகுப்பறையில் அமர்ந்துள்ள ஒரு குழந்தைக்கு பாடத்தின் மீது கவனம் குவிவதே இல்லை. ஆசிரியர்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பதும் அவர்களுக்கு கிடைப்பதும் ஒரே நேர்க்கோட்டில் அமையாததால் சிக்கல்கள் உருவாகின்றன. விளைவு மாணவர்கள் மனதில் பாடங்கள் பதிவதில்லை , கற்றல் என்பது  நல்ல அனுபவங்களாக மாறாமல் வடுக்களின் கீறல்களாக மாறி விடுகின்றன. 


வீட்டில் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் விருப்பங்கள் , மனச் சிக்கல்கள் எவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் அவர்களைப் படிக்க மட்டுமே வற்புறுத்துகின்றனர். அதற்கு இன்றைய சமூகத்தில் கல்வி படிப்பு என மாறியதும் வேலைக்கான தயாரிப்புப் பணியாக பள்ளிக் கல்வி மாறி விட்டதும் தான் காரணம் .இதன் தொடர்ச்சியாக  பெற்றோர்களும் புரிந்து கொள்ளாமல் பள்ளிகளிலும் தங்கள் மன அழுத்தங்கள் புறக்கணிக்கப்படுவதால்   குழந்தைகள் தங்கள் இயல்பை மீறி உளவியல் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடுகின்றனர். 


கடந்த ஆண்டு பள்ளியில் 6 ஆம் வகுப்பில் புதியதாக சேர்ந்த மாணவி ரித்திகா , அழகான கையெழுத்தும் நன்கு படிக்கும் திறனும் பெற்றவராக இருக்கிறார் . வரைதல் , கதை சொல்லுதல் முதலிய படைப்பாற்றல்களில்   திறனும்  பேச்சுப் போட்டி கட்டுரை போட்டி போன்ற பள்ளியளவில் நடக்கும் போட்டிகளில் சிறப்பாகப் பங்காற்றும் ஆற்றலும் பெற்றவராக இருக்கிறார். ஆனால் 6 மாதங்களுக்குப் பிறகு  மாணவரது நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்படுவதை வகுப்பாசிரியர் கவனிக்கிறார். படிப்பதில் சுட்டியான ரித்திகாவின் ஆர்வம்   குறைகிறது , எப்போதும் சிரித்த முகத்துடன் வகுப்பில் வளைய வரும்  குழந்தையை முகவாட்டமும் சோகமும்  சூழ ஆரம்பிக்கின்றன  . ஆசிரியர் அவரை கவனிக்க ஆரம்பித்ததோடு அவரது இந்த நடத்தை மாற்றத்திற்கான காரணம் அறிய முற்படுகிறார் .காரணம் அவரது  வீட்டு சூழல் எனத் தெரிய வருகிறது.அவரது தந்தையின் நடத்தை மாறுதல் தாயை பாதிக்க , அதைப் பார்த்த ரித்திகாவின் மன நிலையில் பயம் , பதற்றம் சூழ்ந்திருக்கிறது. இதைப் புரிந்து கொண்ட ஆசிரியர் , அவரது பெற்றோரை அழைத்து குழந்தையின் மனநிலையைப் புரிய வைக்கிறார் .குழந்தையை இயல்பு நிலைக்கு வர வைக்க நான்கு மாதம் ஆனது. இதற்கு பெற்றோர் துணை தேவைப்பட்டது. இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் மீண்டும் பழைய நிலையை அடைகிறார் ரித்திகா . இங்கு ஆசிரியர் ரித்திகாவின் நடத்தை மாறுதலை அசட்டையாக விட்டிருந்தால் அந்தக் குழந்தையின் கற்றல் அனுபவம் என்றுமே  மகிழ்ச்சியாக அமைந்திருக்காது.  ஒரு ரித்திகா மட்டுமல்ல , ஓராயிரம் ரித்திகாக்களுக்கு ஆசிரியரது மனவியல் சார்ந்த ஆலோசனைகளும் கூடுதல் கவனிப்பும் உரிய அணுகுமுறையும் தேவைப்படுகிறது. சரியான அணுகுமுறை  இருக்க வேண்டுமெனில் ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு பலப்பட வேண்டும் .மாணவருக்கு ஆசிரியர் மீது நம்பிக்கை வர வேண்டும் .ஆசிரியர் மாணவர் உறவு பலப் பட்டிருந்ததால் தான் ஆசிரியர் மீது ரித்திகாவிற்கு நம்பிக்கை ஏற்படுகிறது .

நம்பிக்கை வந்ததால் தான் ரித்திகா மனம் திறக்கிறார். அதன் பிறகு ஆசிரியரது அணுகுமுறை மாணவியையும் பெற்றோரையும் சூழ்கிறது .உளவியல் கல்வி கொடுக்கப்படுகிறது. மாணவியின்  மன நலம் மீட்டெடுக்கப்படுகிறது. அவரது அறிவுசார் செயல்கள் மீண்டும் பழைய நிலையை அடைகின்றன. என்றால் ஆசிரியர் பணியின் பொறுப்பும் செயல்பாடுகளும் இந்த ஒரு உதாரணம் வழியே நமக்குப் புலனாகிறது .


இந்த அணுகுமுறை இருந்திருந்தால் சில வருடங்களுக்கு முன்பு சென்னை பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியர் உமாமகேஸ்வரி அவரது வகுப்பு மாணவனாலேயே கத்தியால் குத்தப்பட்டு இறந்திருக்க மாட்டார். 


மதிப்பெண்களைப் பெற்றும் மன அழுத்த நெருக்கடி தான் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஒரு ஆசிரியர் கூடவா அந்த மாணவியின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள இருந்திருக்க மாட்டார் என்ற கேள்வியே என்னை கடந்த 3 வருடங்களாகவே துளைத்தெடுத்து வருகிறது.

பாடம் தாண்டிய அணுகு முறையும் ஆசிரியர் மாணவர் நல்லுறவும்  வகுப்பறைகளில் முக்கியத்துவம் பெறும் பொழுது இது போன்ற இழப்புகள் நிச்சயம் நிகழ்ந்திருக்காது .


வெறும் தகவல்களை மாணவர்க்குக் கடத்தும் வகுப்பறைகள் அவர்களது வாழ்க்கையை செம்மைப்படுத்தவோ நெறிப்படுத்தவோ உதவுவதில்லை. பாடத்திட்டத்தை மட்டும்  மையமாக வைத்து நகரும் வகுப்பறைகளும் இயற்கையாக மலர்வதேயில்லை . தகவல்களைக் கொட்டித் தரும் வகுப்பறைகள் கூகுள் வகுப்பறைகளே . ஆகவே  உயிரோட்டமான வகுப்பறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு அடிப்படை தான் மாணவர் மைய வகுப்பறைகள். 


ஆகவே ,ஒரு பள்ளியில் புறக் கட்டமைப்பு தளவாடங்கள் கற்பித்தல் உபகரணங்கள் இன்ன பிற அனைத்து வசதிகள் தேவை தான். இவை அனைத்தும் இருந்தாலும்  ஆசிரியர் அணுகுமுறை குழந்தைகள் விரும்பும்படியாக இருக்க வேண்டும் .அப்போது தான்  குறைந்த பட்ச கற்றல் அடைவுகளுடன் ஒரு ஆசிரியரால் 

கற்பித்தலை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் .பள்ளிக்கல்வி என்பது நாம் எப்போதும் பேசுவது போல பாடம் , தேர்வு , மதிப்பெண்கள் தேர்ச்சி ஆகியவற்றை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டதல்ல. அவற்றுடன்  உளவியல் அணுகுமுறைகள் தான்  அழுத்தமாகத் தேவைப்படும் உள்ளீடுகள் .


தொடர்ந்து பேசுவோம் 



பொதுத் தேர்வு ரத்து - மகிழ்ந்த தருணம்

பொதுத் தேர்வு ரத்து - மகிழ்ந்த தருணம் 


5 , 8 ஆம் வகுப்புகளுக்கு தமிழக அரசு பொதுத் தேர்வு அறிவிப்பை ரத்து செய்துள்ளது. தமிழகமெங்கும் இது குறித்து மகிழ்ச்சி மனநிலை நிலவி பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இயல்பு மனநிலைக்குத் திரும்பியுள்ளது வரவேற்கத் தக்கது. கல்வித் துறையில் வெளியான பொதுத் தேர்வு  ஆணையை ரத்து செய்த நமது முதல்வர் கல்வி அமைச்சர் உள்ளிட்டோருக்கு தமிழகக் குழந்தைகள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் அனைவரது சார்பாகவும்  நன்றியை உரித்தாக்குகிறேன்.


ஏன் இந்த சூழல் ?


கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு  2019 ஐத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதற்கான எதிர்ப்பலைகள் பரவலாக உருவானதை நாம் அறிவோம் . வேறெந்த மாநிலமும் முன்னெடுக்காத வரைவு தேசியக் கல்விக் கொள்கையின் உட்கூறுகளை நம் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தத் தொடங்கி விட்டதாக பல்வேறு தரப்பிலும்  குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த வரைவுக் கொள்கையின்

வரைவு விளக்கத்தில் பள்ளிக் கல்வி என்ற தலைப்பின் கீழ்  கொடுக்கப்பட்டிருந்தவற்றுள் 

 3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற ஒரு முக்கியமான முடிவும் எதிர்ப்பலைகளுக்கு ஒரு காரணமாகப் பார்க்கலாம்.


சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு வெளியிட்ட  5 , 8 வகுப்புக்கு பொதுத் தேர்வு என்ற ஒரு அறிவிப்பால் மாணவர் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் பயம் நிலவி வந்ததும் சமூக செயல்பாட்டாளர்கள்  கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்ததும் நாம் அறிவோம் .அதே நேரம் ஆசிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பால் பலவித மன அழுத்தங்களும் குழப்பமான சூழலும் உருவானதும் உண்மையே இது குறித்து ஊடகங்களும் பொது மக்களும் அக்கறையுள்ள மனிதர்களும் அவரவர் நியாயத்தை முன் வைத்தனர் .


பொதுத் தேர்வு அறிவிப்புக்கான காரணமாக எவற்றை எடுத்துக் கொள்ளலாம்  ?


தமிழகப் பள்ளிகளில் ஏற்கனவே 10 , 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்பது 30 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. சமீப காலமாக 3 வருடங்களாக 11 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.பொதுத் தேர்வு அறிவிப்பால் அது தற்போது 5 , 8 வகுப்புகள் என நீண்டிருக்க வேண்டிய சூழலாக மாற இருந்தது. 


கல்வியின் தரத்தை உயர்த்த தேர்வு  மதிப்பீடு ஒரு முறையாகக் கொள்ளாமல் தேர்வு மதிப்பீட்டின் மதிப்பெண்கள் மட்டுமே ஒரே முறை என்ற சிந்தனை நம்மிடையே வேரூன்றிவிட்டதாகவே பார்க்கிறேன். 


பல புள்ளி விபரங்கள் , நம்  குழந்தைகளுக்கு அடிப்படை  வாசிப்பில் திறன் இல்லை என்பதாக அவ்வப்போது அச்சு , காட்சி ஊடகங்கள் வெளியிடுவதைக்  காண முடிகிறது. ஆனால் ஒரு குழந்தையால் முதல் இரண்டு வகுப்புகளிலேயே தடுமாற்றம் இல்லாமல் வாசிக்க முடியும் .இந்த வாசிப்பு உயர் வகுப்புகள் 

வரும் போது குழந்தைகளுக்கு எளிதில் கைவர வேண்டும். அப்படிக் கைவரவில்லை எனில் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அறிந்து களைய முற்பட வேண்டுமே தவிர எழுத்துத்  தேர்வையே ஒரே அளவீடாகக் கொள்ளக் கூடாது. 


சாதகமாகப் பார்ப்பவரின் நியாயங்கள் என்ன ?


இங்கு எல்லாவற்றுக்கும் தேர்வு , 10 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதும் போதும் மாணவன் பயப்படுகிறான் என்றால் அது 5 ஆம் வகுப்பிலேயே பயிற்சி தந்து விடலாமே என்கின்றனர் சிலர். 


10 , 11 , 12 வகுப்புகளில் பொதுத் தேர்வு . 12 ஆம் வகுப்பு முடித்ததும் மருத்துவத்துக்கு நீட் நுழைவுத் தேர்வு , மற்ற உயர் கல்வி எதுவாயினும் நுழைவுத் தேர்வு . ஆசிரியர் வேலைக்குச் செல்ல டெட் தேர்வு , மற்ற எல்லாப் பணிகளுக்கும் போட்டித் தேர்வு என்ற நிலை இருப்பதால் இந்த 5 , 8ஆம் வகுப்புகளுக்கான தேர்வையும் சாதகமாகப் பார்க்கின்றனர் பெற்றோர் தரப்பு உள்ளிட்ட சிலர் .


சில ஆசிரியர்களோ , 10 ஆம் வகுப்பில் வந்து 35 மதிப்பெண்களுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டியுள்ள அவலம் . எழுத்தே தெரியாமல் 9 ஆம் வகுப்பு வரை வந்து விடுவதால் எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு எழுதட்டும் என்கின்றனர். 5 ஆம் வகுப்பு குறித்து ஆசிரியர்கள் தரப்பில்  பொதுத் தேர்வு எதிர்பார்ப்புகள் காண முடியவில்லை. 


பாதகமாக எவற்றைப் பார்க்கலாம் ?


குழந்தைகளது மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க வேண்டும் . 10 வயதில் தேர்வு என்பது குழந்தை உளவியலுக்கு எதிரான வன்முறை எனலாம் .


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியக் கூறான கல்வி உரிமைச் சட்டத்தில் 14 வயது  வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாயத் தேர்ச்சி தர வேண்டும் என்ற கூறுக்கு முரணாக உள்ளது. 

அதே போல கல்வி உரிமைச் சட்டத்தின் 29 ஆம் விதியை ,தொடக்கக் கல்விக்கான பாடத் திட்டம்,  தேர்வு முறைகளை வகுக்கும் போது கல்வித் துறை கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி , குழந்தைகளின் உடல் , மனத் திறன்களை வளர்ப்பது உள்ளிட்ட சில .இதன்படி பொதுத் தேர்வு என 10 வயது குழந்தையை நிர்ப்பந்திக்கும் போது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். 


நம் சமூகத்தில் முதல் தலைமுறை குழந்தைகள் கல்வி கற்பது என்பது ஏற்கனவே  சவாலாக உள்ளது. அவர்கள் தேர்வு குறித்து அச்சப்பட்டு வழிகாட்ட ஒருவரும் இல்லாமல் இடைநிற்றல் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக பெண் குழந்தைகள் நிச்சயமாக பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டு வேலைக்கு அனுப்பும் அபாயமும், திருமணம் செய்து வைக்கும் கொடுமைகளும்  தொடரும். 


நமது ஊரில் தேர்வு என்றாலே பெற்றோர் முதலில் பயப்பட்டு குழந்தைகளை பயப்பட வைப்பர். அவர்களைப் பொறுத்த வரை தன் குழந்தை முதல் மதிப்பெண் பெற வேண்டும். அல்லது 100க்கு நூறு பெற்றுவிட வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட அதிக  சதவிகித பெற்றோரின் மன நிலை . இவர்களது வீடுகளில் 5 ஆம் வகுப்பு தேர்வு என்றால் 3 ஆம் வகுப்பிலிருந்து படி படி , மார்க் வாங்கு என்ற அழுத்தங்கள் குழந்தைகளுக்கு உருவாகும் .


அதே போல மூன்று பருவ பாட நூல்களா ? மூன்றாம் பருவம் மட்டுமா என்பதில் ஆசிரியர்களுக்கும்  மாணவர்களுக்கும் பெரும் குழப்பம். நிர்வாக அளவில் நிறைய பாதகங்கள் மாணவரைப் பாதிக்கும் . ஏனெனில் தமிழகம் முழுவதிலும் தொடக்கப் பள்ளிகள்  பெரும்பாலும் ஓராசிரியர் , ஈராசிரியர்  பள்ளிகளே .எல்லாப் பள்ளிகளையும் தேர்வு மையங்களாக அறிவிக்க இயலாது. ஒரு பள்ளியை தேர்வு மையமாக அறிவித்து குறிப்பிட்ட தொலைவில் சுற்றிலும் அமைந்துள்ள பள்ளிகளில் குறைந்தது 5 பள்ளிகளில் உள்ள 5 ஆம் வகுப்பு குழந்தைகளை அழைத்து வந்து தேர்வு எழுத வைத்தால் கூட மையமாக அறிவிக்கப்பட்ட பள்ளியில் கட்டமைப்பு ,கழிப்பிட வசதி இருக்கிறதா என்பது கேள்விக்குறி. மற்றொரு புறம் தேர்வு எழுதும் குழந்தைகளை ஒரு ஆசிரியரும்  அழைத்து வந்து விட்டால் அந்த ஈராசிரியர் / ஓராசிரியர் பள்ளியில் மற்ற குழந்தைகளின் கற்றல் பரிதாபமே .


குழந்தைகளைப் பொறுத்த வரை அவர்களாக இயல்பாக தேர்வு எழுதுவதில் சிக்கல் எதுவுமில்லை. ஆனால் பொதுத் தேர்வு என்ற பெயரில் கடந்த சில மாதங்களாகப்  பேசுவதை வீடுகளில் பெற்றோரும் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் வலியுறுத்துவதைக் கேட்டு  அச்சப் பட்டது அதிகம்.


பொதுவாக அரசுப் பள்ளிகளில் எல்லா வகையான குழந்தைகளும் படிக்கின்றனர் .சமூகப் பொருளாதாரப் பின்னணியில் நலிவுற்ற குடும்பக் குழந்தைகள் , தாய் தந்தையற்றவர்கள் , மாற்றுத் திறனாளி குழந்தைகள் , 3ஆம் வகுப்பு படிக்காமல் நேரடியாக 13 வயது என்றால் 8 ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்கும் குழந்தைகள் (கல்வி உரிமைச் சட்ட விதி ) என அனைவரையும் அரவணைத்து ஆசிரியர் கற்பிக்க வேண்டும். இந்த பொதுத் தேர்வு குறித்து குழப்பமான சூழலில் அனைவரையும் ஆசிரியர் தயார் படுத்த முடியுமா என்பதும் நாம் முன் வைக்கும் ஐய வினா .


என்ன செய்யலாம் 


எல்லாக் குழந்தைகளும் பாடநூலில் உள்ள அனைத்து பாடங்களையும் படிக்க முடியும் என்று கூற முடியாது .அதே போல படிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களது பல் திறன்களுக்கும் வாய்ப்பு தந்து தரமான கல்வியைக் கொண்டு வர வேண்டுமெனில் ,தொடக்கப் பள்ளிகளில்  வகுப்புக்கு  ஒரு ஆசிரியர் நியமித்து சரியான கற்பித்தல் - கற்றல் நிகழ்வுகளை உறுதிப்படுத்திட வேண்டும் .ஆசிரியர்கள் , கல்விஅலுவலர்களின் சரியான வழிகாட்டலும்  தங்களுக்கான கற்பித்தல் சாரா பணிகள் குறித்த நடைமுறை சிக்கல்களை உயர் அலுவலர்களிடம் உரையாடி தீர்வு கண்டாலே குழந்தைகள் காப்பாற்றப்படுவர் . சரியான வயதில் கற்றலுக்கான சூழலை ஒவ்வொரு குழந்தையும் பெறும் போது பொதுத்தேர்வுக்கான அவசியமே இருக்காது. 

கல்வி என்பது தேர்வை மையமாக வைத்து அளிக்கப்படும் போக்கு மாற வேண்டும். 


உமா

மாநில ஒருங்கிணைப்பாளர்

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (A3)










கொரோனா கற்றுத் தரும் பாடம் - தேர்வுகளுக்கு மாற்றைக் கண்டு பிடிப்போம் .



கடந்த மார்ச் மாத  இறுதியில் ஊரடங்கு போடப்பட்டு இன்று வரை தொடரும் கதைகளை நாம் அறிவோம் . 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முடித்த கையோடு இந்த ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஏற்கனவே பத்தாம் வகுப்புகளுக்குத் தேர்வு கால அட்டவணை அறிவித்து மாணவர்களும் தங்களைத் தயார் செய்து , பள்ளிகளில்  தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்வு பொறுப்புகளில் இருந்த  ஆசிரியர்கள் தயாராக செய்து வைத்தும் தேர்வு திட்டமிட்ட தேதிகளில் நடத்தப் படாத காரணத்தையும்  நாம் அறிவோம். 


தொற்று நோய் பரவல்: 


இந்தத் தொற்று நோய்ப் பரவல்  உலக அளவில் மனிதர்களை  அச்சுறுத்தி வருகிறது என்பதை ஒவ்வொரு நாளின் நோய்ப் பரவல் வரைபடங்களும் செய்திகளும் நமக்கு உறுதி செய்கின்றன. இந்த நோய் எவ்வளவு நாள் நீடிக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஏனெனில் முதலில் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை போடப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது.  இனிமேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்புகள் தான் நம் கண் முன்னே தெரிகிறது. 


பொதுத் தேர்வு :


இப்படியான  நோய் பாதிப்பு , பரவல் , இறப்பு அனைத்தும் குறையாமல் அதிகமாகிக் கொண்டே போகும் சூழலில் பொதுமக்களிடமும்  மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த கேள்விகளும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கின்றன. 


 தேர்வு கட்டாயமாக நடத்தப்படும் என்று சமீபத்தில்  நமது முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் பேட்டியளித்ததை நாம் செய்திகளில் கவனிக்கிறோம். 


ஆசிரியர்களில் ஒரு பகுதி தேர்வு கால தாமதமானாலும் நடத்தி விடுதலே சிறந்தது என்றும் இன்னொரு பகுதி இந்த அபாய காலத்தில் தேர்வு எதற்கு ? இந்த வருடம் தேர்வு நடத்த வேண்டாம் என்றும் தங்கள் வாதத்தை முன் வைக்கின்றனர். 


9ஆம் வகுப்பு வரை தேர்ச்சி 


ஏற்கனவே கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை  மாணவர்களை ஒரே வகுப்பில் தேக்கி வைக்கக் கூடாது என்ற விதி பத்தாண்டுகளாகவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் ஒரு முறையான தேர்வு நடக்கும். ஆனால் இந்த அபாய காலத்தில்  9 ஆம் வகுப்பு வரை தேர்வுகளின்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கதே. 


10 ஆம் வகுப்புத் தேர்வு 


நம் கல்வி முறையில் தேர்வுகளைத் தவிர வேறொன்றும் முறைப்படுத்தி மாணவர்களை வழி நடத்துதல் , மதிப்பீட்டு முறைகள் கிடையாது.10 ஆம் வகுப்பு தேர்வு  என்பது வாழ்வின் முக்கிய அடுத்த கட்ட  நகர்வாகத் தான் நமது  கல்வி முறையிலும் , எல்லோர் மனது அறிவு நிலை சார்ந்தும்  பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச அடிப்படைக் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்புத் தேர்ச்சியைத் தான் அரசுப் பணிகளுக்கும் விதிகளாக இருக்கும் பட்சத்திலும் உயர் கல்வி பயில அடிப்படைத் தகுதியாக இந்த பத்தாம் வகுப்புத் தேர்வு இருப்பதாலும் இதை நடத்த வேண்டிய கட்டாயத் தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 


தொற்று பரவாமல் தேர்வு நடத்துவது சாத்தியமா 


இயல்பு நிலைக்கு சமூகம் திரும்புவது எப்போது எனத் தெரியவில்லை , அப்படியே ஓரிரு மாதங்களில் திரும்பினாலும் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு உண்டு. லட்சக்கணக்கான குழந்தைகளும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் இதில் ஈடுபடும் போது தோய்த் தொற்று பரவாது என 100% உத்தரவாதம் தர இயலாது. சமூகப் பரவல் அதிகமாகிக் கொண்டே போகின்ற இந்த சூழலில் முகக் கவசம் , போதுமான இடைவெளி எல்லாமும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. 


உளவியல் சிக்கல் 


அதோடு குழந்தைகள் அனைவருமே மிகுந்த பீதியில் தான் இருப்பார்கள். ஒரு புறம் பல மாதங்களாக ஊரடங்கில் இருக்கும் குடும்பங்கள் உணவுக்கே வழியின்றி துன்பப்படும் நிலையில் இருப்பதோடு, பொருளாதாரத்தில் மிகுந்த நலிவுற்ற சூழலில் இருக்கின்றன. அங்கிருந்து வரும் குழந்தைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். 


மன ரீதியாக தேர்வு எழுத அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை சிந்தித்தால் பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது. அது மட்டுமன்றி தேர்வுக்கு முன் சில  மாதங்களாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அவரவர் பாடங்களில்பயிற்சி தந்து தான் தயார் படுத்தியிருந்தனர்.  தற்போதைய நிலையில் இவ்வளவு சிக்கல்களுக்கிடையே திடீரென தேர்வு அறிவித்து எவ்வித பாடப் பயிற்சியும்  , உளவியல் அணுகுமுறைகளும் அற்ற நிலையில் மாணவர்கள் தேர்வை அணுகுவது அவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சவாலான பிரச்சனையே . ஆசிரியர்களும் கூட பலவாறு இந்த மனச்சிக்கலில் இருப்பதும் கண்கூடு . 


நீண்ட காலத் தேர்வு நடைமுறை :


தேர்வு என்றாலே வடிகட்டுதல் தான் , மாணவர்களது திறன்களை  கணக்கில் கொள்ளாமல் மனப்பாடம் செய்து எழுத்துத் தேர்வுக்கு அவர்களைத் தயாரித்து மதிப்பெண்கள் தந்து  தேர்ச்சி அட்டைகள் வழங்கும் நடைமுறை தான் நமது கல்வி அமைப்பில் நீண்ட காலமாக இருந்து வருகிறது . ஆனால் உலகம் முழுவதிற்குமே இந்த நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்காத சூழல் , லட்சக்கணக்கில் உயிரிழப்பு எனத் தொடர் வதை தேர்வு முறைகளுடன் இணைத்துப் பார்த்தால் ஒரு புள்ளியிலாவது தேர்வு முறைகளின் அபத்தம் புரியும். 


என்ன செய்யலாம் ?


(CCE -Continuous and Comprehensive Evaluation) 

இந்த நேரத்தில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை நாம் கவனத்தில் கொண்டு அதை மறுபரிசீலனை செய்யலாம் .ஆம் இந்த மதிப்பீட்டு முறையை பொதுத் தேர்வுகளுக்கு மாற்றாக 12 ஆம் வகுப்பு வரைக் கொண்டு வருவதற்கு திட்டமிடலாம். 


கொரோனா பாதிப்பு இது நமது மாநிலத்திற்கு  மட்டுமல்ல , உலகம் முழுவதும் இருக்கிறது.

இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை குறித்து புதிய தேசியக் கல்விக் கொள்கை கடந்த 10 மாத காலங்களாக மத்திய அரசால் திட்டமிடப்பட்டது. அதன் ஒரு கூறாக இந்த தேர்வுகளற்ற மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிடலாம். 


நமது மாநிலத்தில் கல்வித்துறை அமைச்சர், துறை  உயர் அலுவலர்கள் , துறை சார்ந்த இயக்குநர்கள் , மூத்த கல்வியாளர்கள் , தகுந்த  ஆசிரியர்கள் இவர்களைக் கொண்ட ஒரு குழுவை அரசு அவசரமாகக் கூட்டி இது குறித்து விவாதித்து தேர்வுகளுக்கான மாற்றைக் கண்டு பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 


இங்கு கல்வியாளர் ச .மாடசாமி தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததை கவனத்தில் கொள்ளலாம். 


இந்தக் கொரோனா காலத்தில் - மரணங்களும் பசிக் கூக்குரல்களும் அதிகரித்திருக்கும் வேளையில்- தகுதி என்ற பெயரில் பிள்ளைகளைப் பலி கொடுப்பதா?

மேல்படிப்புக்கான மாணவரின் தகுதியைத் தீர்மானிக்க தேர்வு ஒன்றுதான் வழியா? 

தேர்வு ஒரு சௌகர்யம். அவ்வளவுதான். 

நுட்பம் ஏதுமற்ற சௌகர்யம்.

மிகவும் வித்தியாசமான தருணம் இது. இந்த நேரத்திலும் புதிய ரூபம் எடுக்காவிட்டால் கல்வித்துறை எதற்கு? கல்விக்கூடங்கள் எதற்கு?

. ச. மாடசாமி


இவ்வளவு காலம் தேர்வு அளவீடாக இருந்திருக்கலாம். ஆனால் இது பேரிடர் காலம் , ஆகவே பாதுகாப்பாக தேர்வு நடத்துவதில் உள்ள சிக்கலைப் புரிந்து கொண்டு , இதைத்  தகுந்த தருணமாகக் கொண்டு  பொதுத் தேர்வுகளுக்கு மாற்று வழிகள் கண்டுபிடிப்பதே சாலச் சிறந்தது. நமது கல்வி வரலாற்றில் புதிய பக்கத்தைத் தொடங்க கொரோனா நமக்குப்  பாடம் கற்பித்துள்ளது. 


சுற்றுச் சூழல் சார்ந்த , உள்ளுர் சார்ந்த, செயல்பாடுகள் நிறைந்த தற்சார்பு வாழ்க்கைக் கல்வியை புதியதாகத் துவங்க இந்த பேரிடர் காலத்தில் அனைவரும் சிந்தித்தால் பொருளுள்ள கல்வி முறை உருவாகும் .


உமா

( கல்வியாளர்)



பள்ளி திறக்கும் நாளில் …..



சென்ற கல்வியாண்டின் மறக்க முடியாத சம்பவமாக கொரோனா ஊரடங்கு காலம் அமைந்து விட்டது. கல்வியாண்டின் இறுதியில் சமூகத்திற்கு திடீரென வந்த அபாயம்  பள்ளி சூழல்களை அடியோடு மாற்றி விட்டது. மே மாதம் வரை ஊரடங்கு நீடித்த சூழலில்  ஜூன் மாதம் வழக்கமாக பள்ளி செயல்பட ஆரம்பிக்குமா என்பதில் பல்வேறு வேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. வரும் கல்வி ஆண்டை எவ்வாறு வரவேற்கலாம் என்றும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 


மாணவர் உளவியல் பேணுதல் அடிப்படை 


மார்ச் மாத இறுதியிலிருந்து பள்ளிக்கும் தங்களுக்குமான தொடர்பை விட்டுத் தவிக்கும் மாணவர்கள் இயல்பான நாட்கள் என்றால் விடுமுறைக் கொண்டாட்டமாக மகிழ்வுடன் விடுமுறை நாட்களைக் கழித்திருப்பர். ஆனால் கடந்த 3 மாத கால விடுமுறை நாட்களோ அபாயகரமான அச்சத்தை அவர்களுக்குள் உருவாக்கி வைத்துவிட்டது  என்பதில் ஐயமில்லை. 


தொலைக்காட்சி செய்திகளும் இணையங்களும் அன்றாடம் தரும் கொரோனா அப்டேட் செய்திகளைக் கண்டும் கேட்டும் பெரியவர்கள் மட்டுமல்ல , மாணவர்களும் உயிர் பயம் கொண்ட காலச் சூழல் . 


இது மட்டுமன்றி , பல்வேறுபட்ட சமூகப் பொருளாதார அமைப்பிலிருந்து பள்ளிக்கு வரும்  குழந்தைகள், இயல்பாகவே வறுமை நிலையிலிருந்து வரும் குழந்தைகள்  , ஊரடங்கால் வருமானமில்லா குடும்பங்களில் வாழும் குழந்தைகள், புலம் பெயர்ந்து வாழ்ந்த குடும்பங்களின் குழந்தைகள் ஆகியோர்  பள்ளி திறந்த பின்பும் மனஅழுத்தமான  சூழ்நிலையில் தான் இருப்பர். 


அரசுப் பள்ளிக்கு வரும் 90% குழந்தைகள் மேற்கூறிய குடும்ப சூழலின் பின்னணியிலிருந்து தான் வருகிறார்கள் . சாதாரண விடுமுறைக் காலங்களில்  உறவினர்களது  அரவணைப்பில் மகிழ்ந்து உற்சாகமாக,  விடுமுறைக் காலம் முடிந்து   பள்ளிக்கு வரும் குழந்தைகளாக இருப்பர். ஆனால்  இந்தக் கல்வியாண்டில் இவை எதுவுமின்றி வறண்ட மனநிலை , பயம் மிகுந்த மனநிலை , வீட்டில் வேலையில்லாத சூழலில் நலிவுற்ற பெற்றோரின் வருத்தங்களைப் பார்த்து பாதிக்கப்படும் குழந்தைகள் என 

உளவியல் சிக்கல்களால் நிறைந்த மணவர்களாகவே இவர்கள் பள்ளிக்கு வர ஆரம்பிப்பர். அதோடு பள்ளியில் தரும் சத்துணவை ஆதரமாகக் கொண்டு வாழும் லட்சக்கணக்கான குழந்தைகள் சரியான உணவின்றி இந்தக் கால கட்டத்தைக் கடந்து வந்ததால் உடல் ஆரோக்கியமும் அவ்வளவு சீராக இருக்க வாய்ப்பில்லை. 


இவர்களை அணுகுவதற்கு முதலில் ஆசிரியர்கள் தங்கள் மனநிலையை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது.இந்த உளவியல் ரீதியான மாணவர் அணுகுமுறையை வலுவாக்க , பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி துறை வழியாக வழிகாட்டு நெறிமுறைகள்  தருவது வரவேற்கத்தக்கது. 


பாடங்களின் / தேர்வுகளின்   அழுத்தம் கூடாது 


2019 - 2020 , கடந்த கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்  நடந்து முடிந்து இருந்தாலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்தான பல சந்தேகங்கள் மாணவர்களோடு , ஆசிரியர்களுக்கும் சேர்த்தே இருக்கின்றது. இந்தக் கல்வியாண்டுக்கான பாடங்கள் , புதிய பாடநூல்கள் , எப்போதும் போல நடத்தி முடித்திட , வேலைகளைத் திட்டமிட , தேர்வுகள் என  இருந்தாலும்  பாடங்கள் /தேர்வுகளுக்கான அழுத்தங்களை மாணவர்களிடையே ஏற்படுத்தி விடாமல் அவர்களை கவனமாகக் கையாள வேண்டியது அவசியமாக உள்ள நாட்களாக இந்நாட்களைப் பார்க்கலாம் .


பெற்றோர் சந்திப்பு முக்கியம் 


பேரிடர் தொற்று நோயின் எல்லா முகங்களையும் சந்தித்த நமது பள்ளிக் குழந்தைகள் இந்தக் கல்வியாண்டில் தொடர்ந்து தங்களை கற்றவில் ஈடுபடுத்த வேண்டுமானால் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரையும் பள்ளிக்குள் ஆசிரியர்கள் சந்திக்க வேண்டும். வர இயலாத பெற்றோர்களை அவர் தம்  வீடுகளுக்கே  சென்று ஆசிரியர்கள் சந்திக்க வேண்டும். அவர்களுக்கும்  குழந்தைகளுக்கு மான உறவு முறை , பெற்றோரின் தேவைகள் , பெற்றோர்களின் மன அழுத்தம் இவை குறித்து பேசி , வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான நம்பிக்கையை அவர்களிடம் விதைக்க வேண்டியதும் உறுதுணையாக இருப்பதும் ஆசிரியர்களின் தலையாய கடமை. 


அதோடு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மாதமொரு முறை கட்டாயமாகக் கூட்டி எப்போதும் எடுக்கப்படும் பள்ளித் தேவைகளுக்கான முடிவுகளுடன் , சிறப்பு கவனமாக கொரோனா குறித்தான காலத்தின் பெற்றோர்கள் , குழந்தைகள் நலன் சார்ந்த 

மீட்பு வழிகள் குறித்தும் இந்த பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில்  முடிவுகள் எடுக்கப்பட்டால்  மிகுந்த பயனளிக்கும்.


 மாற வேண்டிய வகுப்பறைகள் 


ஏட்டுக் கல்வியும் , தேர்வும் மதிப்பெண்ணும்  வெற்று பாட போதனைகளும் இன்றைய அபாய காலத்தை , பேரிடரை எந்த வகையிலும் மாற்றிவிடவோ , அதன் வீரியத்தைக் கூட சற்றேனும்  குறைத்து விடவோ இல்லை.  

நீட்டுக்குத் தயார் ஆனாலும் , பொதுத் தேர்வுக்கு தயார் ஆனாலும் எதுவுமே இந்த தொற்றை துரத்த வழி சொல்லித் தரவில்லை .

என்றால் ,  வகுப்பறைகள் தங்கள் முகத்தை மாற்றிக் கொள்ள நாம் திட்டமிட வேண்டும் . உரையாடலும் சிந்தனையுமான வகுப்பறைகள் மலர வேண்டும்.  மாணவர்களிடையே  

 பேரிடர் குறித்த உலகம் தழுவிய சூழலைக் குறித்து கட்டாயம் ஆசிரியர்கள் உரையாட வேண்டும். 


இந்த கொரோனாக்கால பாடங்களாக மனிதம் நிறைந்த மக்கள் , நகரவாசிகளாக மாறி வேலையை இழந்து சொந்த ஊரை நடந்தே சென்று சேர்ந்த குழந்தைகள் உட்பட அனைவரது உண்மைக் கதைகளையும் விவாதிக்கும் வகுப்பறைகளாக மாற வேண்டும். எதார்த்தத்திற்கும் ஏட்டுக் கல்விக் கல்விக்கு மான இடைவெளியிலிருந்து 

உள்ளூர் வளங்கள் சார்ந்த தற்சார்பு கல்வியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் திட்டங்கள் பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும். உண்மையான சுற்றுச் சூழல் கல்வி , உடலுழைப்பு சார்ந்த கல்வி இவற்றை உருவாக்கும் விவாதங்கள் வெளிப்படையாக உருவாகும் வகுப்பறைகளை இனிமேலாவது ஆசிரியர்கள் கையிலெடுக்க வேண்டும். 


அனுபவக் கல்வி தருதல் 


அது மட்டுமன்றி அவரவர் இந்த தொற்றின் போது பணியாற்றிய மருத்துவர்கள் , காவலர்கள் , துப்புரவுத் தொழிலாளர்கள் , தன்னார்வலர்கள் ஆகியோரை அழைத்து வந்து மாணவர்களுடன் உரையாட வைத்து நம்பிக்கை தரலாம். பேரிடர்கள் இதற்கு முன் நடந்தவை குறித்தும் தற்போது வந்த பேரிடரான கொரோனா குறித்தும் மாணவர் மத்தியில் ஒரு ஆய்வு மனப்பான்மையை உருவாக்க வாய்ப்புகள் வழங்கலாம். 


மகிழ்ச்சியான கற்றலுக்கு வழிவகுத்தல் 


மாணவர்கள் தங்கள் கடந்த கால மன உளைச்சல் , பயம் இவற்றைத் தூர எறிந்து மகிழ்ச்சியான கற்றலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள என்னவெல்லாம் இயலுமோ அவற்றையெல்லாம் பள்ளி திட்டமிட வேண்டும். 

ஆசிரியர்களும்   மாணவர்களுக்கு சுதந்திரமான மகிழ்ச்சியான கற்பித்தலைத் தர திட்டமிட வேண்டும். ஆம் , வார இறுதியில் விழாக்கள் , மன்றங்களைத் திட்டமிட்டு நடத்தி இந்த குழப்பமான பயம் மிகுந்த மனநிலையிலிருந்து வெளிவர மாணவர்களுக்கு வழிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். திரும்பவும் அழுத்தமாக நான் கூற நினைப்பது நினைவு படுத்துவது என்னவென்றால் பாடங்களை சற்றே தூரமாக வைத்து மேற்சொன்ன செயல்பாடுகளுக்கு வகை செய்தால் கற்றல் - கற்பித்தல்  மகிழ்ச்சியாக அமையும். அதோடு எல்லாவற்றிலும் கொரோனா மீட்புக் கருத்துகள் மையமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  


பாதுகாப்பான சூழல்

பள்ளிகளில் மாணவர்களுக்கான மன உடல் நலப் பாதுகாப்பு குறித்து ஏற்கனவே பல தளங்களில் பேசி வருகிறோம். ஆனால் இன்றைய சூழலில் கொரோனா ஒப்பிட இயலாத மாற்றமான பாதுகாப்பை நமக்குக் கற்பித்துள்ளது. முகக் கவசமும், தனி நபர் இடைவெளியும் , கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க சோப்பு போட்டு கழுவுதலும் ஆகியன மிகவும் இன்றியமையாதவையாக பாதுகாப்பு சூழலில் பார்க்கப்படுவதால்  இவை அனைத்தும் பள்ளிக்குள் ஏற்படுத்துதல் அவசியம் . நடைமுறையில் வகுப்பறைக்குள் இவை எல்லாம் 100 சதவீதம்   சாத்தியமா என்ற வினா நம் முன் எழுத்தாலும் சாத்தியப்படுத்துதலின் அவசியம் உள்ளது. இதையும் பள்ளிகள் கவனத்தில் கொண்டு திட்டமிட வேண்டும் .



தேர்வுகளுக்கான மாற்றைத் திட்டமிடலாம் 


நமது கல்வி வரலாற்றில் நெடிய பயணம் கல்வியின் இறுதி நிலை தேர்வுகளின் முடிவுகள் , தேர்ச்சி அட்டைகள் என்ற நிலையிலேயே இருக்கின்றன. இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்தை எந்த நாட்டிலும் கண்டறியாத நிலையிலிருந்து தேர்வுகள் எத்தனை அபத்தமானவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆகவே இந்த நேரத்திலாவது தேர்வுக்கான மாற்று மதிப்பிட்டு  வழிகளை  அனைத்து தரப்பிலிருந்தும் அரசு , கல்வி அலுவலர்கள் , கல்வியாளர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் கூட்டுதவியுடன் முன்மொழிந்து இந்தக் கல்வியாண்டின் நாட்களுக்குப்  பொருத்தமாக இருக்கும் என எதிர் பார்க்கலாம்.


உமா

ஆசிரியர் 



பேரிடர் துன்பம்



உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும்  மேலாக அச்சம் கொண்டு தவித்து வரும் கொரோனா  பேரிடர் கால கட்டம் இது என்பதை அனைவரும் அறிவோம் . ஊரடங்கு ஒன்றே நோய் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தனிமைப்படுத்துதலே நோய் தொற்றைத்  தவிர்க்கும் வழிமுறையாகவும் மாதக் கணக்கில் நடைமுறையிலிருந்து வருகிறது.  நோய் வந்த பிறகு சிகிச்சை என்பது மருந்து கண்டு பிடிக்காத நிலையில் தான். இது உலக அளவில் பொதுமைப் படுத்தப்பட்டுள்ள இன்றைய நிலை. 


பள்ளிகள்  திறப்பு 


இந்த அபாயகரமான சூழலில் நமது தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளிகள்  திறப்பு நடைமுறைகள் குறித்து பல வித  கருத்துகள் நிலவி வருகின்றன.  ஏற்கனவே பல காலகட்டங்களில் வழக்கமாக

 நிலவிய பேரிடர்களைக் காட்டிலும் இந்த நோய்த் தொற்று பிரச்சனை  அனைவரையும்

வேறுபட்ட  மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது . 


சூழ்நிலை சரியாகி வழக்கம் போல் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுமா என்று சிந்திக்கையில் , ஒரிரு மாதம் தள்ளிப் போக  வாய்ப்புகளிருப்ப

தாக அன்றாட நோய்  பாதிப்பு பரவல் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன. 


தொடக்கப் பள்ளிக் குழந்தைகள்  


இந்த மிகச் சிக்கலான சூழலில் , மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளைக் காட்டிலும் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளை நாம் மிகுந்த  கவனத்தில் கொள்ள வேண்டும். வயதில் சிறுவர்களாக , குழந்தை இயல்புகளுடன் இருக்கும் இவர்கள் பள்ளிக்கு வருவது குறித்தும் நாள் முழுவதும் இவர்களைக் கையாள்வது உட்பட நிறைய திட்டமிடல்கள் தேவைப்படுகின்றன. 


பள்ளி திறந்த பிறகும் இந்நோய் தொற்றுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவது அவசியமாகவே உணரப்படுகிறது. தொடக்கப் பள்ளி வயது  குழந்தைகள் எப்போதும் தனித்து இருக்க வாய்ப்புகளில்லை.வளர்ந்த குழந்தைகளை விட தொடக்கப் பள்ளிக்கு வரும்  குழந்தைகள்  தனிநபர் இடைவெளி , முகக் கவசம் அணிதல்  போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எந்த அளவிற்கு உள் வாங்கி புரிந்து கொள்வார்கள் , கடைபிடிப்பார்கள்  என்பதெல்லாம் கேள்விக்குரியவை. அவற்றைப் பயிற்றுவிப்பதும் பழக்கப்படுத்துவதும் சற்று சிக்கலாக இருந்தாலும் அவசியமான பின்பற்றுதல்கள் . குழந்தைகளின்  பெற்றோர்களுக்கும்  இந்தப் புரிதல்களைத் தர வேண்டிய கூடுதல் பொறுப்பில் இருக்கிறோம். 


மழலையர் கல்வி  


இந்த நாட்களில் மழலையர் வகுப்புக்கான  கல்வி குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 

புதிய தேசியக் கல்விக் கொள்கை 2019 இன் ஒரு கூறாக  வெளிவந்துள்ள  மழலையர் கல்வி என்பது , தமிழகத்தில் பல ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் நடைமுறையில் இருக்கின்றது .ஆனால்  கடந்த கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளிலும்  இந்த மழலையர்  கல்வியை அரசே செயல்படுத்தத்  தொடங்கியுள்ளது.  ஆனால் இட வசதி உட்பட குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆசிரியர்கள் இல்லாமை , ஏனைய அடிப்படை வசதிகள் பற்றாக்குறை எனஏராளமாக இடர்களை  எதிர்கொண்டனர் தலைமையாசிரியர்கள் . இவற்றுடன் வரும் கல்வியாண்டில் கொரோனா சவால்களையும் சேர்த்து கையாளத் தயாராக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. மேலும் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறந்தாலும் மழலையர் கல்விக்கான அவகாசம் சற்று தாமதமானாலும் பரவாயில்லை. குழந்தைகள் பெற்றோருடன் வீடுகளில் இருப்பதே உகந்தது .சில மாதங்கள் கழித்து இவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கலாம். 


பள்ளிகளில் பாதுகாப்பு சூழல் உறுதிப்படுத்துதல்


முதல் வகுப்புக் குழந்தைகள் முதல் தனிநபர் இடைவெளியைக் கடைபிடிப்பது பெரும்பாலும் தொடக்கப் பள்ளிகளில் ஏற்புடையதே . அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை  மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இடைவெளி விட்டு அமர்வது சிரமமான காரியம் அன்று. ஆனால் பெரும்பாலும் தொடக்கப் பள்ளிகள்  ஈராசிரியர் பள்ளிகளாக இருப்பதால் ஐந்து வகுப்புகளையும் பாடம் நடத்தி கவனித்துக் கொள்வதை விட நோய்த் தொற்று குறித்து மாணவர்களை கவனிப்பது சவாலான காரியம். ஆசிரியர்கள் கூடுதலாக தேவைப்படுவர். அதற்குரிய ஏற்பாடுகளை செய்யலாம் .


அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைக் கழுவுவது என்ற பாதுகாப்பு முறையும் பின்பற்றப் பட வேண்டும். அடிப்படையான  நீர் வசதியை பள்ளிகளில் செய்து தர வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும். முகக் கவசம் அணிந்து வருதல் முறையும் தவறாமல் பின்பற்ற வலியுறுத்த வேண்டும். 


உளவியல் அணுகுமுறைகள் 


பள்ளிகளில் வெளிப்புறப் பாதுகாப்பு மட்டுமல்ல, ஏற்கனவே தங்கள் வீடுகளில் பல்வேறுபட்ட சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுடன் போராடி வரும் குழந்தைகளின் மன அழுத்தங்கள்  கொரோனா துயரத்தினால் கூடுதல் உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகியிருப்பதை நாம் மறுக்க முடியாது. ஆசிரியர்கள் இதை மனதில் கொண்டு குழந்தைகளை அணுகுதல் மிகவும் இன்றியமையாதது. குறைந்த பட்சம்  "கால் ஆண்டுக்குரிய நாட்கள் " குழந்தைகள் வீட்டிற்குள் முடங்கி தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்து பகிர்ந்து கொள்ள முடியாத அறிவு நிலையில் இருப்பர்.  அவர்களது குழந்தைப் பருவத்தை மீட்டெடுப்பது என்பதிலிருந்து ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைக் குழந்தைகளை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 


சாதாரண விடுமுறைக் காலங்களில்  உறவினர்களது  அரவணைப்பில் மகிழ்ந்து உற்சாகமாக,  விடுமுறைக் காலம் முடிந்து   பள்ளிக்கு வரும் குழந்தைகளாக இருப்பர். ஆனால்  இந்தக் கல்வியாண்டில் இவை எதுவுமின்றி வறண்ட மனநிலை , பயம் மிகுந்த மனநிலை , வீட்டில் வேலையில்லாத சூழலில் நலிவுற்ற பெற்றோரின் வருத்தங்களைப் பார்த்து பாதிக்கப்படும் குழந்தைகள் என 

உளவியல் சிக்கல்களால் நிறைந்த மணவர்களாகவே இவர்கள் பள்ளிக்கு வர ஆரம்பிப்பர். அதோடு பள்ளியில் தரும் சத்துணவை ஆதரமாகக் கொண்டு வாழும் லட்சக்கணக்கான குழந்தைகள் சரியான உணவின்றி இந்தக் கால கட்டத்தைக் கடந்து வந்ததால் உடல் ஆரோக்கியமும் அவ்வளவு சீராக இருக்க வாய்ப்பில்லை. 


இவர்களை அணுகுவதற்கு முதலில் ஆசிரியர்கள் தங்கள் மனநிலையை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது.இந்த உளவியல் ரீதியான மாணவர் அணுகுமுறையை வலுவாக்க , பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி துறை வழியாக வழிகாட்டு நெறிமுறைகள்  தருவது வரவேற்கத்தக்கது. 


சமமான கல்வி வாய்ப்பு


நம்மிடம் வரும் குழந்தைகள் பலதரப்பட்ட  சூழலிருந்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் பொருளாதாரம்  அடிப்படைக் காரணியாக இருக்கிறது. மாத சம்பளம் , வார சம்பளம், தினக்கூலி என்ற வரிசையில் உள்ள குடும்பங்களிலிருந்து பள்ளிக்கு  வரும் மாணவர்கள் ஒரு பக்கம் என்றால் கல்வி இன்னும் கிடைக்காத  மலைவாழ் ஆதிவாசிப் பழங்குடியினர் குழந்தைகள் , நரிக்குறவர் என்ற ஓரிடத்தில் நிலையாக வாழாத  மக்களின் குழந்தைகள் , வேலை வாய்ப்புக்காக  புலம் பெயரும் குடும்பங்களின் குழந்தைகள் , பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் , இன்னும் தெருவோரக் குழந்தைகள் என ஏற்றத்தாழ்வு மலிந்த ஒரு சிக்கலான சூழலையுடைய குழந்தைகளைக் கொண்டது நமது பள்ளிகள் . அரசுப் பள்ளிக்கு வரும் 90% குழந்தைகள் மேற்கூறிய குடும்ப சூழலின் பின்னணியிலிருந்து தான் வருகிறார்கள்


 கொரோனா காலகட்டத்தில்   இணைய வகுப்புகள்  (ON LINE TEACHING) கல்வித் தொலைக்காட்சி வகுப்புகள்  என பல்வித முயற்சிகளும் நடந்தேறின. ஆரம்ப வகுப்புகளைப் பொறுத்தவரை இந்த வகுப்புகள் அவசியமற்றவையும் சமமற்ற கல்வி வாய்ப்புகளைத் தரக்கூடியதாகவும் அமைந்து விடுகிறது. இவையெல்லாம் குழந்தைகளிடம்  ஏற்றத் தாழ்வு மனப்பான்மையை ஆரம்ப வகுப்புகளிலேயே உருவாக்கி விடும் , ஆகவே கல்வியாண்டின் பாடப் புத்தகங்கள் , பாடங்கள் விடுமுறை கால கட்டங்களை ஈடுகட்டும் நோக்கில்  இது போன்ற கற்றல் வழிமுறைகளை ஆரம்ப வகுப்புக் குழந்தைகளிடம் கட்டாயப் படுத்தக் கூடாது.  


வகுப்பறைகளை மாற்றலாம்


வழக்கமான கற்பித்தலும் வகுப்பறையும் கற்றுக் கொடுத்த அனைத்தும் இன்று பயனற்றுப் போய் விட்டன. நமது மண் சார்ந்த ஊர் சார்ந்த தற்சார்புக் கல்விக்கான வகுப்பறைகளை மறந்ததன் விளைவும் இன்றைய அனைத்து சூழல்களுக்கும் ஒரு காரணம். எப்பேர்ப்பட்ட கல்வி முறையும் ஒன்றுமில்லாததாகி ஆதரவற்ற நிராயுதபாணிகளாக மனிதர்கள் வாழும் நிலை. இவற்றை ஆரம்பக் கல்வியிலிருந்து மாற்றி நமது வாழ்வியல் கல்வியை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்  வகுப்பறைகளை உருவாக்கலாம். 


எழுத்து , சொல் , தேர்வு , கட்டளைகள் , கொஞ்சமாகக் கதைகள் , பாடல்கள் என்பவற்றை மாற்றி அதிகமான பாடல்கள் , அதிகமான கதைகள் , ஓவியம் வரைதல், காய்கறி பூச்செடி வளர்ப்பு , கொஞ்சம் பாடம் என மாற்றம் செய்து பிறகு சொற்களையும் எழுத்துகளையும் அவர்களே கற்றுக் கொள்ள வழி வகுக்கும் உயிருள்ள வகுப்பறைகளை நடைமுறைப்படுத்தலாம். 


சமூகத்தின் அடிப்படை மாறிப் போனதற்கும் வகுப்பறைக் கல்வி முறைக்கும் நெருங்கியத் தொடர்புள்ளது. ஆகவே ஆரம்பப் பள்ளி வகுப்பறையை மாற்றினாலே மற்றொரு கொரோனா போன்ற எந்தப் பேரிடரும் வருங்காலத்தில் நம்மைத் தாக்காது. 


மகிழ்ச்சியான கற்றலுக்கு வழிவகுத்தல் 


மாணவர்கள் தங்கள் கடந்த கால மன உளைச்சல் , பயம் இவற்றைத் தூர எறிந்து மகிழ்ச்சியான கற்றலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள என்னவெல்லாம் இயலுமோ அவற்றையெல்லாம் பள்ளி திட்டமிட வேண்டும். 

ஆசிரியர்களும்   மாணவர்களுக்கு சுதந்திரமான மகிழ்ச்சியான கற்பித்தலைத் தர திட்டமிட வேண்டும். ஆம் , வார இறுதியில் விழாக்கள் , மன்றங்களைத் திட்டமிட்டு நடத்தி இந்த குழப்பமான பயம் மிகுந்த மனநிலையிலிருந்து வெளிவர மாணவர்களுக்கு வழிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். திரும்பவும் அழுத்தமாக நான் கூற நினைப்பது நினைவு படுத்துவது என்னவென்றால் பாடங்களை சற்றே தூரமாக வைத்து மேற்சொன்ன செயல்பாடுகளுக்கு வகை செய்தால் கற்றல் - கற்பித்தல்  மகிழ்ச்சியாக அமையும். அதோடு எல்லாவற்றிலும் கொரோனா மீட்புக் கருத்துகள் மையமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  கல்விக் கொள்கைகள் , கல்விக் குழுக்கள் ஆகியன வழிகாட்டும் மகிழ்ச்சியான கற்றலையே குழந்தைகளுக்குத் தர வேண்டும். 


பெற்றோர் சந்திப்பு முக்கியம் 


பேரிடர் தொற்று நோயின் எல்லா முகங்களையும் சந்தித்த நமது பள்ளிக் குழந்தைகள் இந்தக் கல்வியாண்டில் தொடர்ந்து தங்களை கற்றவில் ஈடுபடுத்த வேண்டுமானால் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரையும் பள்ளிக்குள் ஆசிரியர்கள் சந்திக்க வேண்டும். வர இயலாத பெற்றோர்களை அவர் தம்  வீடுகளுக்கே  சென்று ஆசிரியர்கள் சந்திக்க வேண்டும். அவர்களுக்கும்  குழந்தைகளுக்கு மான உறவு முறை , பெற்றோரின் தேவைகள் , பெற்றோர்களின் மன அழுத்தம் இவை குறித்து பேசி , வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான நம்பிக்கையை அவர்களிடம் விதைக்க வேண்டியதும் உறுதுணையாக இருப்பதும் ஆசிரியர்களின் தலையாய கடமை. 


அதோடு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மாதமொரு முறை கட்டாயமாகக் கூட்டி எப்போதும் எடுக்கப்படும் பள்ளித் தேவைகளுக்கான முடிவுகளுடன் , சிறப்பு கவனமாக கொரோனா குறித்தான காலத்தின் பெற்றோர்கள் , குழந்தைகள் நலன் சார்ந்த 

மீட்பு வழிகள் குறித்தும் இந்த பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில்  முடிவுகள்

எடுக்கப்பட்டால்  மிகுந்த பயனளிக்கும்.



கொரோனாவால் பெற்றோர் உணர வேண்டியது 


எல்லா வகையான பள்ளிகளும் இன்று மூடப்பட்டு பொதுப் பிரச்சனையாகியுள்ளது. தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தாய் மொழிவழிக் கல்வியில் சேர்க்க முன்வர வேண்டும். முதல் வகுப்பிற்கே லட்ச ரூபாய் கல்வி நிதி கொடுத்து படிக்கும் குழந்தையின் மனநிலையும் அரசுப் பள்ளியில் ஒரு ரூபாய் செலவின்றி கல்வி கற்கும் குழந்தையும் ஒரே மனநிலையில் தான் இருக்கின்றனர். கல்வி

கற்பது அவர்களது அடிப்படை உரிமை , அவ்வளவே. எல்லாக் குழந்தைகளுக்கும்  மேற்குறிப்பிட்டவையே வரும் கல்வியாண்டின் தேவைகள். ஆகவே மக்களின் பார்வை கொரோனாவிற்குப் பிறகு அரசுப் பள்ளிகளின் பக்கம் திரும்ப வேண்டும் . வரும் கல்வியாண்டு சவாலான ஆண்டாக இருந்தாலும் ஆரம்பப் பள்ளிகளை நடத்துவதில் மேற்கூறிய கருதுகோள்களை  மனதில் கொண்டால் எளிதாகக் கடக்கலாம் 


உமா

( கல்வியாளர்)


இந்த அபாயகரமான சூழலில் நமது தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளிகள்  திறப்பு நடைமுறைகள் குறித்து பல வித  கருத்துகள் நிலவி வருகின்றன.  ஏற்கனவே பல காலகட்டங்களில் வழக்கமாக

 நிலவிய பேரிடர்களைக் காட்டிலும் இந்த நோய்த் தொற்று பிரச்சனை  அனைவரையும்

வேறுபட்ட  மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது . 


கொரோனாவால் பெற்றோர் உணர வேண்டியது 


எல்லா வகையான பள்ளிகளும் இன்று மூடப்பட்டு பொதுப் பிரச்சனையாகியுள்ளது. தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தாய் மொழிவழிக் கல்வியில் சேர்க்க முன்வர வேண்டும். முதல் வகுப்பிற்கே லட்ச ரூபாய் கல்வி நிதி கொடுத்து படிக்கும் குழந்தையின் மனநிலையும் அரசுப் பள்ளியில் ஒரு ரூபாய் செலவின்றி கல்வி கற்கும் குழந்தையும் ஒரே மனநிலையில் தான் இருக்கின்றனர். கல்வி

கற்பது அவர்களது அடிப்படை உரிமை , அவ்வளவே. எல்லாக் குழந்தைகளுக்கும்  மேற்குறிப்பிட்டவையே வரும் கல்வியாண்டின் தேவைகள். ஆகவே மக்களின் பார்வை கொரோனாவிற்குப் பிறகு அரசுப் பள்ளிகளின் பக்கம் திரும்ப வேண்டும் . வரும் கல்வியாண்டு சவாலான ஆண்டாக இருந்தாலும் ஆரம்பப் பள்ளிகளை நடத்துவதில் மேற்கூறிய கருதுகோள்களை  மனதில் கொண்டால் எளிதாகக் கடக்கலாம் 








ஆன் லைன் கல்வி - கல்வி முறையின் மறுமலர்ச்சியா ? மாயையா ?




கோவிட் - 19 வைரஸின் தாக்கம் உலகெங்கும் பரவலாகி அச்சுறுத்தி வரும் வேளையில், நம் தமிழகத்தையும் குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களில் தன் தாக்கத்தை வலுவாகக் காட்டி வருகிறது. 


கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்று வரை நீடித்து பள்ளி , கல்லூரிகளை வழக்கமாக செயல்படாத சூழலுக்குத் தள்ளி இருக்கிறது. இது ஒரு அசாதாரண சூழல். 


கொரோனாவினால் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும்  குழந்தைகளுக்கு ஆன் லைன் கற்பித்தல் வழியே ஆசிரியர்கள்  உதவுவதாக ஏறத்தாழ உலகின் பல நாடுகளிலிருந்தும் செய்திகள் வந்து கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. 


கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தின் பள்ளிக் கல்வி குறித்தும் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் தொடர்ந்து ஊடக செய்திகள் வெளிவந்து கொண்டும் அதையொட்டிய  விவாதங்கள்  உருவாகிக் கொண்டும் வந்த வண்ணம் உள்ளன. கொரோனா பாதிப்பின் கூடுதலாக இன்று கல்வித்துறையின் தலைப்புச் செய்திகளாக 'ஆன் லைன் டீச்சிங் ' இடம் பெற்றுள்ளது. 


சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 


ஜூன் மாதம் பிறந்த உடன் ஊடகங்கள் தந்த செய்தி , சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 10 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு 5000 ஆன்ட்ராய்டு அலைபேசிகளை ( ரெட் மி5) கல்வி கற்பதற்காக வழங்கியுள்ளதாகவும் , தொடர்ந்து 11 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும்  விரைவில் வழங்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர் என்பதே. 


கேரள மாணவி தற்கொலை


அதே நேரம் கடந்த தினங்களில் ,  கேரளாவில் ஆன் லைன் வசதி கிடைக்காத 14 வயதுள்ள பத்தாம் வகுப்பு மாணவி தேவிகா தற்கொலை செய்து கொண்ட செய்தி நம்மை நெஞ்சம் பதற வைக்கிறது. 


இங்கிருந்து சிந்திக்கத் தொடங்கலாம் , ஆன் லைன் கல்வி முறையின் தேவை என்ன ? இந்த மாற்றங்களைக் கல்வி முறையில் கொண்டு வந்தால் ஏற்படும் சிக்கல்கள் என்னவாக இருக்கும் ? மாணவர்கள் உண்மையிலேயே கற்றலில் ஈடுபடுகின்றனரா ? பலதரப்பட்ட பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிலவும் நமது சமூக அமைப்பில் ஆன் லைன் கல்வி என்பது சாத்தியமா ? இப்படி ஏராளமான சந்தேகங்கள் நம்மிடையே உருவாகியுள்ளன .


 ஆன் லைன் கல்வியின் அவசியம் என்ன ?


கொரோனா ஊரடங்கில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் கல்வி கற்றல் முற்றிலும் தடைபட்டுள்ளது என்ற எண்ணம் ஒரு சில பெற்றோர்கள் மனதில் உதயமானது .ஏனெனில் அவர்கள்  எல்லோருமே தங்கள் குழந்தைகளை கல்விக் கட்டணம் அதிக அளவில் செலுத்தி தனியார் பள்ளிக்கு அனுப்புபவர்கள் . ஏற்கனவே பெரிய பெரிய தனியார் கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கும் கார்ப்பரேட் பள்ளிகள் ஏற்கனவே கற்பித்தலை  பேக்கேஜ் முறையாக ஆன் லைனில் வெறும் பாடப்பொருளை வழங்கும் சடங்கு நிகழ்வாக செய்து வருகின்றனர். இது நீட் நுழைவுத் தேர்வு போன்ற இன்ன பிற தேர்வு முறைகளுக்கான கோச்சிங் சிஸ்டமே . இந்த வழிமுறைகளை கல்விக் கட்டணம் பெற்று பள்ளிகள் நடத்தும் அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியதன் விளைவு , கல்வித் துறையில் ஆன் லைன் கல்வி குறித்து விவாதப் பொருள் மையப்படுத்தப்பட்டு இன்று சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளின் கைகளில் பாடம் கற்பிக்கும் கருவிகளாக ஆன்ட்ராய்டு அலைபேசிகள் வந்துள்ளன என்றால் அது மிகையாகாது. 


கல்வி முறையின் மறுமலர்ச்சியா ? மாயையா ?


ஆன் லைன் கல்வியில் கற்பித்தலும் நடப்பதில்லை , கற்றலும் நடப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவாகிய ஒரு டிவைஸ் வழியே தகவல்கள் கடத்தப்படுகின்றன. அங்கே உண்மையான ஜீவனுள்ள உயிரோட்டமான ஆசிரியர் - மாணவர் உறவு நிலவுமா ? மாணவர் மனதில் தோன்றும் சந்தேகங்கள் வினாக்களுக்கு தீர்வு கிடைக்குமா ? வகுப்பை கவனிக்கிறார்களா , விரும்பி ஆர்வமாகக் கற்றுக் கொள்கிறார்களா என்பதை ஆசிரியர் உற்று நோக்க முடியுமா ? ஒரு மாணவன் உடல் நலக் குறைவால் அவதிப்படுகிறான் எனில் ஆசிரியர் ஆறுதல் படுத்தி தைரியம் தர முடியுமா ? ஒரு மாணவி தன் மாதவிடாய் கால நாட்களில் படும் வேதனையை கவனித்து அவளை அருகில் அழைத்து ஆற்றுப்படுத்தி ஓய்வு எடுக்கத்தான் ஒரு ஆசிரியரால் சொல்ல முடியுமா ? இந்த ஆன் லைன் வகுப்புகளில் . உயிருள்ள ஜீவன்களை தனிமைப்படுத்தி உயிரற்ற ஊடகத்தின் வழியே எந்த கற்பித்தல் - கற்றல் செயல்பாடுகளை நிறைவேற்ற முடியும் கூறுங்கள். 


கல்வியின் கோட்பாடுகள் , காலம் காலமாக நூற்றுக்கணக்கான கல்வியாளர்களால் விவாதிக்கப்படும் கல்வி கற்பதற்கான சூழல்,  மாணவர் கருத்துக்கு இடமளிக்கும் ஜனநாயக வகுப்பறைகள் இவற்றை எல்லாம்  அடித்து நொறுக்கி ஒரு மாயையை உருவாக்கத் தயாராகி வருகின்றன  ஆன்லைன் வகுப்பறைகள் . 


கற்பித்தல் படிநிலைகளாக வரையறுக்கப்பட்டுள்ள , ஒரு பாடப் பொருளின் நோக்கம் , ஆயத்தப் படுத்துதல்  , மாணவருடன் உரையாடுதல் , செயல்பாடுகள் , கேள்வி கேட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்தல் , உற்று நோக்கி உள்வாங்கி கற்றல் என்று எதற்கும் இங்கு இடமில்லை. 


ஏற்றத் தாழ்வுகள்  மிகுந்துள்ள கல்வி முறையைக் கொண்டுள்ள நமது நாட்டில் சாதாரணக் கல்வியே என்றுமே எட்டாக் கனியாக விளங்கும் சூழலில் எல்லோருக்கும் ஆன்லைன் கல்வி சாத்தியமா என்பதையும் சிந்திக்க வேண்டும். சாத்தியம் என்ற நிலையை அடைந்தால் தானே நிறை குறைகளை ஆராய முடியும். 


ஒரு தனியார் நிறுவன மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் குழந்தைகள்  பாடத்தை கவனிக்க எந்த நிர்ப்பந்தமும் வழி முறைகளும் இல்லாமல் திரைப்படத்தைப்  பார்ப்பது போல பாடம் நடத்தும்  வகுப்பறைகளை டிவைஸ் வழியே  பொழுது போக்குக்காகக் கூட பார்க்க விரும்ப மாட்டார்கள் என்பது தான் எதார்த்தம் .எத்தனை மணி நேரங்கள் கண்களின் விழித்திரைகள் ஆசிரியரின் வெற்றுக் குரல்களைக் கேட்டு அவர்களது பாடம் நடத்தும் அபிநயங்களை  வெறிக்கும் என்று எண்ணிப் பார்த்தால் , குழந்தைகள் கற்றலையே வெறுத்து விடுவர். 


கல்வி என்பது பண்டமல்ல ,காசு கொடுத்து வாங்கிக் கொள்ள , அது ஒரு அனுபவம் , வாழ்க்கையை எதிர் நோக்கக் கற்றுக் கொள்ளும்  திறன் வளர்க்கும் வழிமுறை. அது ஒரு நாளும் ஆன்லைன் வகுப்புகளிலிருந்து விளையாது. 


உமா 


மேல்நிலைக் கல்விப் பிரிவுகள் குழப்பத்திற்கு வழி வகுக்கின்றனவா ?



தற்போதைய மேல்நிலைக் கல்விப் பாட அமைப்புகள் புதியதாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. இவை உயர் கல்வி வாய்ப்புகளில் சிக்கல்களை  விளைவிக்கும் வகையில் உள்ளன .


கோத்தாரிக் கல்விக் குழுவின் பரிந்துரையின் பேரில் நம் தமிழகப் பள்ளிக் கல்வியில்

1977- 1978  கல்வியாண்டு முதல்

 10+2 என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேல்நிலைக் கல்வியில் பகுதி 1 மற்றும் 2 இல் மொழிப் பாடங்கள் தரப்பட்டிருக்கும்  .இது  தவிர  பகுதி - 3 இல் சிறப்புப் பாடங்களாகக்  கணிதம் , இயற்பியல் , வேதியியல் , உயிரியல் , விலங்கியல் , தாவரவியல் , கணக்குப் பதிவியல் , விவசாயம் ,மனையியல் , பொருளியல் , வணிகவியல் , அரசியல் அறிவியல் , வரலாறு , புவியியல் 

இப்படி ஏறத்தாழ  30 பாடங்கள்  உருவாக்கப்பட்டன.  பகுதி 3 இல்

ஒவ்வொரு பாடப்பிரிவிலும் நான்கு பாடங்களை மாணவர் படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுடன் சேர்த்து அவர்கள் படிக்க வேண்டியது மொத்தம் 6 பாடங்கள் , 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் .

இதை அடிப்படையாகக் கொண்டே கல்லூரிகளில் உயர்கல்வி வாய்ப்புகளை மாணவர் பெறும் நடைமுறை இருந்து வருகிறது.


தமிழகத்தின் இந்த மேல்நிலைக் கல்வி முறை இந்திய மாநிலங்களிலேயே தனித்தன்மையுடன் திகழ்ந்து வருவதாகவும் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. ஏனெனில் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்தப் பாடப் பிரிவுகள் உயர்கல்வியில் வழங்கி வந்தன. 


புதிய அரசாணை 166


கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு புதியதாக  அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசானை  166 - பள்ளிக் கல்வித் துறை 18.09.2019 , இன் படி பகுதி 3 - இல் புதியதாக ஒரு முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஏற்கனவே ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஃபர்ஸ்ட் குரூப், செகன்ட் குரூப் என்ற வகையில்  நான்கு பாடங்களைப் படிக்கும் மாணவன் இந்தப் புதிய அரசாணையின் படி மூன்று பாடங்களை மட்டும் படித்தால் போதுமானது. மாணவர் மன அழுத்தத்தைக் குறைக்கும் பொருட்டும் , உயர் கல்வி வேலை வாய்ப்பு இவற்றை அதிகமாக்கும் வகையிலும் இந்தப் புதிய முறை மேம்படுத்தப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்  விருப்பப் பட்டால் மூன்று பாடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது பழைய முறையான  நான்கு பாடங்களுக்கான முறையையும் தேர்வு செய்து கொள்ளலாம்

எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


 இந்த அரசாணை நடப்புக் கல்வியாண்டிலிருந்து பின்பற்ற வழிகாட்டப்பட்டுள்ளது. இதன்படி மாணவன் 3 பாடங்களைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டிய மொத்தப் பாடங்கள் 5 மட்டுமே. இதில் 500 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும் . அல்லது மாணவன் 4 பாட முறையைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டியது 6 பாடங்கள் , மொத்த மதிப்பெண்கள் 600. 


உண்மையில் என்ன நடக்கிறது 


இந்தக் கல்வி ஆண்டில் கோவிட் - 19 பொது முடக்கத்தால் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்தாகி விட்டது என்பதை நாம் அறிவோம்.

தேர்ச்சி முடிவுகள் அரசின் வழிகாட்டலால் கிரேடு முறையில் தரப்படும் என்பதை விரைவில் எதிர் பார்க்கலாம். தனியார் பள்ளிகள் + 1 சேர்க்கையை தங்கள் வழியில் ஆரம்பித்து விட்டன. அரசுப் பள்ளிகளில் அரசின் முறையான வழிகாட்டலுக்காக தலைமை ஆசிரியர்கள் காத்துக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து விபரம் கேட்டு வரும் பெற்றோர்களுக்கு இந்தப் புதிய முறை குறித்த விளக்கங்களை அளித்து வருகின்றனர். 

 

தலைமை ஆசிரியர்களிடம் பேசும் போது  புதிய 5 பாட முறைகளைக் குறித்தே விளக்கி வருவதாகவும் , அதை அடிப்படையாகக் கொண்டு தான் சேர்க்கை நடைபெறும் என்று பரவலாகக் கூறுகின்றனர். அதற்கு நியாயமான காரணங்களையும்  முன் வைக்கின்றனர். அருகாமைப் பள்ளிகளில் ஒரு பள்ளியில் 5 பாடங்கள் இருந்து மற்றொரு பள்ளியில் 6 பாடங்கள் இருந்தால் குறைவாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்கள் 5 பாடமுறை உள்ள பள்ளிக்கே செல்கின்றனர். ஆகவே மாணவர் சேர்க்கைக் குறைவதால் நாங்களும் 5 பாடங்களைக் கொண்ட பாடப் பிரிவையே அறிமுகப்படுத்துகிறோம் என்கின்றனர். 


அதே போல 6 பாடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் இருந்தாலும் குறைந்த அளவில் மட்டுமே மாணவர் இருந்தால் அந்தப் பாடப் பிரிவை நடத்த பள்ளிகளால் இயலாது , கண் முன்னாலே காலாவதியாகும் பாடப்பிரிவுகளும் பள்ளிகளும் .


குறைவான பாடங்கள் உயர்கல்வி வாய்ப்புகளையும் குறைக்கும் 


நான்கு பாடங்களை உள்ளடக்கிய  முறையில் உதாரணமாக 

கணக்கு , இயற்பியல் ,வேதியியல் , உயிரியல் எனப் படிக்கும் போது ஒரு மாணவனுக்கு பொறியியல் , மருத்துவம் , விவசாயம் , உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர் கல்வியல்  வாய்ப்புகள் கிடைக்கும் . ஆனால் தற்போது  உயிரியல் பாடத்தை நீக்கி அது மூன்று பாடமாகக் குறையும் போது பொறியியல் துறை மட்டுமே படிக்க இயலும். வேறு மருத்துவம் சார்ந்த உயிரியல் பாடப் பிரிவை சார்ந்த நிறைய வழிகளை அடைத்து ஒரு வழிப் பாதையாக மாற்றும் போது அங்கும் மாணவன் தன் வாய்ப்புகளை இழக்கிறான் .


அதே போல இயற்பியல் , வேதியல் , உயிரியல் மட்டும் உள்ள பாடப் பிரிவை  புதியதாக அறிமுகம் செய்துள்ளது. இதில் கணக்குப் பாடமே இல்லாமல் ஒரு மாணவன் இயற்பியல் , வேதியியல் பாடங்களில் இடம்பெறும் கணக்குகளைத் தீர்ப்பது சவாலான ஒன்று. 

நீட் தேர்வு எழுதும் மாணவருக்காகவே இந்தப் பாடப் பிரிவு என்பது போல தோன்றுகிறது. நீட் தேர்வில்  சிபிஎஸ்ஸி பாடத்திட்டத்தில் தான் வினாக்கள் இடம்பெறும். அப்படி வினாக்கள்  அமையும் போது அதில் இடம் பெறும் இயற்பியல் , வேதியியல் வினாக்களைத் தீர்ப்பது என்பது ,ஒரு அரசுப் பள்ளிப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே அடிப்படைக்  கணக்குகள்  படித்த மாணவனுக்கு 

இயலாத காரியம் .


அதே போல அறிவியல் பாடப்பிரிவில் (science Group) மட்டுமே கணினி அறிவியலை தற்போதுள்ள பாட முறை தருகிறது . இவர்கள் மட்டுமே கணினி சார் கல்லூரிப் படிப்புக்கு செல்ல முடியும். கலைப்பிரிவு (ஆர்ட்ஸ் குரூப் ) மாணவர்களுக்கு கணினி பாடம் தற்போது இல்லை. எனில் ஆர்ட்ஸ் குரூப் தேர்வு செய்யும் மாணவர்கள் கணினி சார்ந்த உயர் கல்வியைக் கல்லூரிகளில் பெற முடியாது. அதே போல கணிணியும் இயற்பியல் வேதியல் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வியில் பொறியியல் , கணினி துறைகள் மட்டுமே வாய்ப்பு உண்டு. கணக்கே இல்லாமல் இவர்கள் மேல்நிலைக் கல்வி முடிப்பர். 


இவ்வாறு பல குழப்பங்களை இப்புதிய அரசாணை விளைவிப்பதோடு உயர்கல்வியில் மாணவர்களுக்கான எல்லா வழிகளையும் அடைப்பதற்கான ஆபத்துகளைத் தருகிறது. 


இது மட்டுமா ? இன்னும் விளைவுகள் 


நமது மாணவர்களை , கணக்கும் அறிவியலும் என இரண்டும் படிப்பதை நிறுத்தி நீ ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய் என அரசாணை  அவர்களது விருப்பத்தைத் தடை செய்கிறது. கணக்குப் பாடமே இல்லாமல் உயர்கல்விக்கு ஒரு அறிவியல் பாடப் பிரிவைப் பயின்ற மாணவன  அனுப்பும் முறை மாணவர்களிடம் தேக்கத்தையும் அச்சத்தையும் தான் உண்டு பண்ணும். 


இரண்டு வகையான முறைகளையும் தானே தருகிறோம் என்று ஒரு பதில் அரசு சொல்லலாம். ஆனால் இதே போலத்தான் தமிழ் வழி , ஆங்கில வழி எனக் கொண்டு வந்து விருப்பம் போல பாட வழிகளைத் தேர்வு செய்யலாம் என்ற நடைமுறை , இன்று தாய் மொழி வழிக் கல்வியை இல்லாமல் செய்து விட்டதை இங்கு பொருத்திப் பார்க்கலாம் .


அதோடு 15 வயது மாணவன் கணக்கை மட்டும் தேர்வு செய்து உயர் கல்வி செல்லும் போது புரிதல் வந்த பிறகு அறிவியலும் படிக்கலாம் என விருப்பப்படும் போது இது உதவாது. பழைய முறையில் +2 படித்து பாலிடெக்னிக் செல்ல விரும்பும் மாணவர் லேட்டரல் என்ட்ரியில் 2 ஆம் வருடம் சேர்வர். புதிய முறையில் இதுவும் கூட  தடைபடும் .


மூன்று பாடங்களை மட்டும் தேர்வு செய்யும் மாணவர் இழக்கும் உயர் கல்வி வாய்ப்புகளை வேறு மாநில மாணவர் எட்டிப் பிடிப்பர். இங்கு இந்த முறையில் படிக்கும் மாணவர்கள் வெளி மாநிலக் கல்லூரிகளில் சேர்வதற்குக் கூட வாய்ப்புகள் அற்றுப் போகலாம். 


தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை ஒன்று நீட் கோச்சிங் அல்லது ஜேஈஈ, ஐஐடி என குழந்தைகளை ஒற்றையடிப் பாதைக்கு அழைத்துச் செல்ல திட்டமிடும்  வழி இது. கோச்சிங் சென்டர் நடத்துபவர்களுடன் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் , பிரின்ஸ் பால் ஒப்பந்தம் செய்து கொண்டு மாணவர்களிடம் பணம் பறிக்கும் கொள்ளைக்கும் இது எதிர்காலத்தில் வழி வகுக்கும். 


மூன்று பாடம் வரும் போது ஆசிரியர் பணி இடங்கள் குறைக்கப்படும். அறிவியல் பிரிவில் தாவரவியல் , விலங்கியல் பிரிவுகளுக்கான ஆசிரியர்களில் யாரேனும் ஒருவர் இருந்தால் போதும் என ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்படும். கணினி பாடப்பிரிவுகள்  குறைவதால் கணினி ஆசிரியர்கள் 

எண்ணிக்கை குறைப்பதோடு ,நியமனமே எதிர்காலத்தில் இருக்க வாய்ப்புகளில்லை என்ற நிலை உருவாகும். .

இது மறைமுகமாக ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் நிலைக்கு வழிகோலும் . 


இவ்வாறு மக்கள் மத்தியில் குழப்பங்களை விதைப்பதோடு எதிர்கால சமுதாயத்தின் உயர்கல்வியை கேள்விக்குள்ளாக்கும் ஆபத்தை இந்த அரசாணை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. பன்முக வழிகளை அடைக்கும் இந்த அரசாணையை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. எப்போதும் போல 600 மதிப்பெண் பாட முறை தான் மாணவரது உயர் கல்வி , வேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டும் .


உமா




சோலைவனப் பள்ளியை உருவாக்கும் விவசாய ஆசிரியர்



ஈரோடு மாவட்டத்தின் அருகே  பெருந்துறை என்ற ஊரின் மையப்பகுதியில் அமைந்து அனைவரையும் தனது பசுமையான சூழலால் கவர்ந்து ஈர்க்கும் பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி . பழமையும் பெருமையும் வாய்ந்த இப்பள்ளியின் கற்பித்தல் செயல்பாடுகளும் ,  ஆசிரியர்கள் மாணவர் மீது கொண்டுள்ள அக்கறையும் சுற்று வட்டாரத்தில் பிரசித்தி பெற்றவை. அது அரசுப் பள்ளி போன்று இல்லாமல் பல்கலைக் கழகமாக மிளிர்வது குறித்தும் பல பத்தாண்டுகளாக அனைவரும் அறிவர். ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் பள்ளியின் மீது பெற்றோருக்கு நம்பிக்கை வளர்கிறது என்பார் பல வருடங்களாக உதவி தலைமை ஆசிரியராக இருந்து வரும் முதுகலை ஆசிரியர்  அருள்குமார். இவரோடு கை கோர்த்து நகரத்தின் நடுவே சோலைவனத்தை உருவாக்கி தமிழகத்தில் எந்த அரசுப் பள்ளியும் செய்திடாத பல முன்னெடுப்புகளை செய்து வருபவர் அப்பள்ளியின் விவசாயப் பிரிவு முதுகலை ஆசிரியர் கந்தன் .


விவசாயத் துறையில் பொறியியல் பட்டமும் கல்வியியல் பட்டமும்  படித்த இவர் இயற்கை உயிரி உரங்கள் விற்பனையாளராகத்  தனது வாழ்க்கையைத் துவங்கியுள்ளார். லாப நோக்கமின்றி ஆனால் மன நிறைவுடன் மக்களின் உடல் ஆரோக்கியத்தை மனதில் வைத்து இயற்கை உரத் தொழிலை மேற்கொண்டிருக்கிறார்.   2009 ஆம் ஆண்டு பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியின் விவசாய ஆசிரியராகப் பணி நியமனம் ஆகிய போது , மற்ற ஆசிரியர் பார்வையில் அந்தப் பாடப் பிரிவை ஒரு உதவாத குரூப் என்ற நிலையே இருந்திருக்கிறது. இது நாடு தழுவிய மக்களின் பொது புத்தி தானே .


ஆசிரியராக வந்த உடனே மாணவர் மத்தியில் , இந்த விவசாயப் பாடப் பிரிவும் (Agri Group) ஒரு ப்ரொபஷனல் கோர்ஸ் என்ற புரிதலை நிகழ்த்தியுள்ளார். ஒரு மாணவன் மேல் நிலைக் கல்வியில்  அக்ரி குரூப் எடுத்தால் என்னென்ன படிக்கலாம் , வேலை கிடைக்கும் என அவர்களுக்கு விளங்க வைத்திருக்கிறார்.  இந்த பத்தாண்டுகளில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியதில் அரசு வேலையில் இருப்பவர்கள் பலரும் அடங்குவர். அவரவர் குடும்ப சூழலுக்கு ஏற்ற டிப்ளமோ , விவசாயப் பிரிவு பட்டம் , மனித வள மேம்பாட்டுத்துறையின் இரு மாதம் பயிற்சிப் படிப்பு , வனத்துறை என மேற்படிப்பு விபரங்களைக் கூறுகிறார். மாத வருமானம் 25000 முதல் சில லட்சங்கள் வரை வருமானம் ஈட்டும் சுய தொழில் முனைவோரையும் உருவாக்கியிருக்கிறார். இத்துறையில் இவரது மாணவர் அரசுப் பணியின்  உயர்ந்த பதவி வரை ( AA0_- ) சென்றுள்ளதைக் குறிப்பிடுகிறார். இவையெல்லாம் ஒரு புறம் எனில் பள்ளியின் வளர்ச்சியில் இவரது பங்கு அளப்பரியது .


காய்கறித் தோட்டம் 

ஓட்டுக்கட்டிடத்தில் இயங்கும் இவரது வகுப்பு மாணவர்கள் தான் உண்மையான வாழ்க்கைக் கல்வியைப் பயில்கின்றனர் எனலாம் . தங்கள் வகுப்பின் முன்புறம்  ஏறக்குறைய 5 சென்ட் இடத்தில் காய்கறித் தோட்டம் போட்டு வெண்டை , கத்தரி ,வெங்காயம் , கீரை வகைகள் , மிளகு தக்காளி, கறிவேப்பிலை , புதினா , பீர்க்கை , சுரைக்காய்  என ஏராளமானவற்றை வளர்த்து வருகின்றனர். சத்துணவுக்கு வழங்குவதோடு பள்ளி மாணவர்கள் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கும் ஆசிரியர்களுக்கும்  வழங்கி விடுகின்றனர் .


மூலிகைப் பண்ணை


பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் கீழா நெல்லி ,தூதுவளை , துளசி , ஆடாதோடா , இன்சுலின் பிளான்ட் ,ரன கல்லி , கற்பூரவல்லி , நில வேம்பு , சிரியா நங்கை , நித்ய கல்யாணி , தவசிக் கீரை , நொச்சி , வெள்ளை எருக்கன் , வல்லாரை என்று பல வகையான மூலிகைச் செடிகளை மாணவர்கள் வளர்த்து வர வழிகாட்டுகின்றார் கந்தன் .இவற்றை ஊர்ப் பொதுமக்களுக்கு விற்று விடுகின்றனர் . முட்புதர்களாக இருந்த பள்ளியின் ஒரு பகுதியை இவ்வாறு மூலிகைப் பண்ணையாக மாற்றியுள்ளார் விவசாய ஆசிரியர் கந்தன். 


மியா வாக்கி அடர்வனமும் வளாக மரங்களும் 


பள்ளியின் பின்புறம் ஆசிரியப் பயிற்றுநர் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு 2800 சதுர அடியில் 1000 மரங்களை 3 வருடங்களாக வளர்த்து அதை அடர்வனமாக மாற்றியுள்ளார் .இது தவிர பள்ளியைச் சுற்றிலும் 1000 மரங்கள் ஆசிரியர்களால் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறதாம். புன்னை மரம் , நெட்டிலிங்க மரம் , தேக்கு மரம் , சொர்க்க மரம் , மலை வேம்பு என பல வகையான மரங்கள்  வளாகத்தை அழகுபடுத்துகிநது. சுமார் எட்டரை ஏக்கர் நிலப்பரப்பு கொண்டுள்ள விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் மரங்களை நட்டுப் பாதுகாக்கின்றனர். மற்றுமொரு சிறப்பு மரங்களின் பெயர்களோடு ஒவ்வொரு மரமும் ஒரு திருக்குறளைத் தாங்கி மாணவருக்கும் மற்றவருக்கும் வழி காட்டுகிறது. 


பூஞ்சோலை 


பள்ளியில் மாணவர் கழிப்பறைப் பகுதியை அழகிய பூஞ்சோலையாக மாற்றியிருக்கிறார் .ஆம் , கழிப்பறை நாற்றத்தை மாற்றி பூக்களின் மனம் அங்குள்ளவர்களை மகிழ்ச்சியாக்கத் தீட்டிய திட்டத்தை  ஆசிரியர் கந்தன் செயல்படுத்தியுள்ளார்.


நாற்றுப் பண்ணை 


மரக்கன்றுகளை வளர்த்து ஒரு மாணவனுக்கு ஒரு மரம் எனக்  கடந்த 5 வருடங்களாக நடைமுறைப்படுத்தி வரும் இம் முயற்சியில் இதுவரை இருபதாயிரம் மரக்கன்றுகளை உருவாக்கி மாணவருக்கு அதைக் கொடுத்து நட வைத்து  வளர்க்க வழிகாட்டி வரும் இவரது பணி சிறப்பு வாய்ந்ததே.


உயிர்வளிச் சோலை -


தமிழகத்திலேயே எங்கும் இல்லாத ஒரு முயற்சி என்கிறார். டிரைசினா , ஸ்பேத்தோபைலம் ,செப்புளோரா , சாங் ஆப் இன்டியா , பெப்ரோ மியா , சாமந்தி ,அடினியம் , துளசி , சோற்றுக் கற்றாலை போன்ற  32 வகையான செடிகளை இணைத்து உருவாக்கும் ஒரு வகையான சோலை .இதனால் பள்ளி வளாகத்தில் உள்ள நச்சு வாயுக்கள் ஈர்க்கப்பட்டு தூய ஆக்ஸிஜன் உருவாகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பல்லவா .


இவை மட்டுமன்றி வரும் வருடத்தில் ரோஸ் கார்டன் , செங்குத்துத் தோட்டம் அமைக்கும் திட்டங்களையும் செயல்படுத்துவதாகக் கூறுகிறார். வகுப்பறைக்குள் மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இன்டோர் பிளான்ட்ஸ் வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். 


பராமரிப்பு 

இவற்றைப் பராமரிக்க நீர் வேண்டுமே எனக் கேட்ட போது பள்ளிக்குள் 12 இடங்களில் மழை நீர் தொட்டிகள்  அமைத்துள்ளதாகக் கூறுகிறார் .  பள்ளிக்குள் நிறைய வேகத் தடைகளை அமைத்து மழை நீரை அவற்றின் வழியாக சேகரிக்கும்  முறை பற்றியும் கூறிட நாம் வியக்கிறோம். அதோடு 3 ஆழ்துளை நீர் வழிகள் ( Bore) இருப்பதைக் கொண்டும், அரசின்  மேல் நிலை நீர்த்தொட்டி வசதி கொண்டும் இத்தனை பசும் பரப்புகளைப் பராமரிப்பதாகக் கூறுகிறார். 


அதோடு அக்ரி பாடப் பிரிவு மாணவர்கள் மண்புழு உரம் , இயற்கை உரம் தயாரித்து தொடர்ந்து பராமரிப்பதும் முக்கியக் காரணம். இந்தக் கொரோனா ஊரடங்கு நாட்களிலும் கூட ஒரு வரை பணிக்கு அமர்த்தி அன்றாடம் செடி , மரங்களுக்கு நீர் ஊற்றும் பணி நடக்கிறதாம். 


பிளாஸ்டிக் ஒழிப்பு - புது முயற்சி 


இவை மட்டுமன்றி பள்ளி வளாகத்திலும் சுற்று வட்டாரத்திலும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிட இவர் எடுத்த முயற்சி ஒரு ப்ளாஸ்டிக் எடுத்து வந்தால் ஒரு சாக்லேட் கொடுப்பது . மாணவர்களிடையே நல்ல வரவேற்று பெற்று , சாக்லேட் கடலை மிட்டாயாக , பொரி உருண்டையாக மாற்றம் பெற்றுள்ளது .


ஊருக்குள் பசுமை முயற்சி 


கடந்த 4 ஆண்டுகளாக தனது  விவசாய பாடப் பிரிவு மாணவர்களின் பள்ளி இறுதி நாளில் ஊரின் சுற்றுப்புறப் பகுதிக்குச் சென்று 50 மரங்களை நட்டு விட்டு , அனைவரும் உணவு தயாரித்து ஒரே இடத்தில்  அமர்ந்து உண்ட பிறகு வீடு செல்லும் முறையை மாணவரிடையே விதைத்துள்ளார் . இது ஊரையே பசுமையாக்கும் முயற்சி எனலாம் .


கல்வி அலுவலர்கள் விரும்பும் பள்ளி 


பெற்றோர் , மாணவர் , ஊர் மக்கள் அனைவரும் விரும்புவதோடு  , மாவட்ட ஆட்சியர் , உயர் நீதி மன்ற நீதிபதிகள் உள்ளிட்ட நீதிமன்ற உயரதிகாரிகள் , மாவட்டக் கல்வி அலுவலர் ,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் , மாநில அளவிலான இணை இயக்குநர்கள் என அனைவரும் விரும்பி பள்ளியைப்  பார்வையிட்டு பாராட்டிச் செல்லும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. 


நகரின் மத்தியில் இரைச்சலின் நடுநாயகமாக, போக்குவரத்து புழுதிக்குள்  இருந்தாலும் பள்ளிக்குள் நுழைந்து விட்டால் காற்று மாசையோ ஒலி மாசையோ சற்றும் உணர முடிவதில்லை . அற்புதமான அரசுப் பள்ளியை உருவாக்கும் கந்தன் போன்ற விவசாய ஆசிரியர்கள் ஒவ்வொரு ஊருக்கும் தேவை. 


உமா








  






இன்றைய சூழலில் கல்வி - 3


இன்றைய சூழலில் கல்வி - 3 




ஜூன் மாதம் முடியப் போகிறது. வழக்கமான கல்வியாண்டு என்றால் பள்ளிகள் இயங்கி பாடநூல்கள் வழங்கப்பட்டு கற்றல் - கற்பித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால் பள்ளிகள் திறக்கப் படாமல் போனதால் , அதற்கு மாற்றாக ஆன் லைன் வகுப்புகளை  கையிலெடுத்தன    தனியார் பள்ளிகள் .


கடந்த ஏப்ரல் , மே மாதங்களிலேயே NEET வகுப்புகளுக்காகவும் , 12 ஆம் வகுப்புகளுக்காகவும் ஆன் லைன் வகுப்புகளை துவக்கி மாணவர் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் மன அழுத்தத்தை உருவாக்க ஆரம்பித்தன தனியார் பள்ளிகள் . 


தற்போது முதல் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை பள்ளி நடைமுறை போலவே காலை முதல் மாலை வரை ஆன் லைன் வகுப்புகள் ஊரெங்கிலும் பிரபலமாகி வருவது ஒரு புறம். 


கல்வி என்பதை ஒரு டிவைஸ் வழியே தர முடியுமா ? ஆசிரியர் - மாணவர் நேரடிக் கற்பித்தல் இல்லை என்றால் கற்றல் நடைபெறுமா ? இப்படி ஏராளமான கேள்விகள் ஒருபுறம். வீடுகளே குழந்தைகளுக்  பள்ளிக் கூடங்களாகவும்  பெற்றோருக்கு வேலை பார்க்கும் அலுவலகங்களாகவும் மாறிப் போய் மனதளவில் சிக்கல் உருவாகி இயல்பான உறவை சிதைக்கும் வன்முறை மறுபுறம். பெற்றோர்கள் புலம்பலையும் மாணவர் சலிப்புகளையும்  காது கொடுக்க முடியவில்லை. 


பல பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகளுக்கான இணைப்புகளைத் தராமல்  குழந்தைகளது கல்விக் கட்டணம் முழுமையாகக் கட்டப்பட்டால் தான் சேர்த்துக் கொள்ளும் நிலை , இதையொட்டிய செய்திகள் , புகார்கள் என ஒரு புறம் பூதாகரமாகப்  பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன .


இந்த ஆன் லைன் வகுப்புகளால் தொடர்ந்து பல விபரீதங்கள் , தனக்கு ஆன் லைன் வசதியில் கற்றல் சூழல் கிடைக்காததால் கேரளாவில் 14 வயது மாணவி தற்கொலையில் ஆரம்பித்து தமிழகத்திலும் இப்படியான நிகழ்வுகள் நம்மை பயமுறுத்தின. அது மட்டுமா , கோவையில் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் ஃபோனில் ஆன் லைன் வகுப்புகளை கவனிக்காமல் பாலியல் காணொளிகளைக் கண்டு நிஜ வாழ்க்கையில் பரிசோதிக்க அவர்கள் வீட்டின் மாடியில் குடியிருந்த குடும்பத்தில் ஒரு மாணவியை நாசம் செய்த செய்திகள் வரை நம்மை செய்வதறியாது திகைக்க வைக்கின்றன. 


கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் ஆன் லைன் வகுப்புகளைத்  தடை செய்த நீதிமன்ற வழக்குகளும் நாம் கவனிக்க வேண்டியவை .


ஓரளவு வசதி பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் கைகளில் அலைபேசி / கணினி வசதி இருப்பதால் பள்ளிகளுடன் மாணவர்கள் தொடர்பில் உள்ளனர் என்று இதை நேர்மறையாக எடுத்துக் கொள்வதா (அ) இதன் மோசமான விளைவுகளை வைத்து இணைய வகுப்புகளை ஆபத்து என எதிர்மறையாக அணுகுவதா என்று குழப்பத்தில் பெற்றோர்கள் இருக்கின்றனர். 


அரசுப் பள்ளிகளில் இணைய வழி வகுப்புகள்  சாத்தியமா 


தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் 90% குழந்தைகள் பெரும்பாலும் ஆன்ட்ராய்டு வசதியுள்ள அலைபேசி , கணினி என எந்த வசதியும் இல்லாதவர்கள். அப்படியே வைத்திருந்தாலும் 

இணைய வழிக் கல்விக்கு தினம் அவர்களது பெற்றோர்களால் ரீசார்ஜ் செய்ய பொருளாதார வசதி இருக்கிறதா என்பது கேள்விக்குறி. ஊரடங்கால் அன்றாடம் வேலையே இல்லாமல் வருமானமின்றி இருக்கும் குடும்பங்கள் இந்த வசதிகளை எப்படி ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது எல்லோரும் முன் வைக்கும் வினா. 


அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் பேசும் போது பெரும்பாலும் தங்களை குழந்தைகளிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருவதாகக் கூறுகின்றனர். வாட்ஸ் அப் வழியே பாடத் தொடர்புடையவற்றை அனுப்பி கற்றலில் ஈடுபடுத்தும் பணியைச் செய்து வருவதாகவும் கூறும் இவர்கள் , அந்த வசதி வெறும் 20% குழந்தைகளே பெற்றுள்ளனர் என்பதையும் வருத்தத்துடன் பகிர்கின்றனர். 


சத்துணவுக்காக பள்ளிக்கு வரும்  பல லட்சம் குழந்தைகள்  , மலைவாழ் பழங்குடியினப் பள்ளிகளில் படிக்கும் மலைப் பகுதி குழந்தைகள் , ஊரடங்கால் குழந்தைத் தொழிலாளராக மாறியுள்ள குழந்தைகள் என பல தரப்பட்ட குழந்தைகளை உள்ளடக்கிய அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன் லைன் கல்வி எப்படி சாத்தியம் என்பது திரும்பத் திரும்ப நம் முன் எழும் சந்தேகங்கள்.


உலக நாடுகளில் பின்லாந்து , கனடா , அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் தற்போதைய சூழலில்  ஆன் லைன் கல்வியை முன்னெடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் ஊரடங்கு சட்டம் போடுவதற்கு முன் திட்டமிட்டு  அதற்கான ஏற்பாடுகளை செய்து ஒரு நாளில் சில மணி நேரங்களில் மட்டும் ஆன் லைன் வழியே குழந்தைகளை கற்றல் - கற்பித்தலில் ஈடுபடுத்தியுள்ளனர். முக்கியக் காரணம் அங்கு ஒரே கல்வி முறை -பாடத்திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். அதனால் இணைய வழிக் கல்வி வெற்றி பெற்றுள்ளது. 


இந்தியாவில் கேரள மாநிலம் தொலைக்காட்சி முறை வழியே இணையவழிக் கல்வியை முன்னெடுத்துள்ளது. ஆனால் நமக்கு மாநில அரசுப் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் , மத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் , பன்னாட்டு பாடத்திட்டத்தைப்  பின்பற்றும்  பள்ளிகள்  என  பல பிரிவுகளானப்  பள்ளிகள் அங்கு பயிலும் குழந்தைகள் என வேறுபட்ட சூழலில் ஆன் லைன் கல்வி மிகப் பெரும் பிரச்சனையாக உள்ளது.


பள்ளி இல்லாக் குழந்தைகள் - இப்படியே விட்டு விடலாமா ?


தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் வீடு என்பது அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை . பள்ளிகளும் இல்லை , வீடுகளும் குழந்தைகளுக்கு பள்ளிகளாக மாற்றம் பெற முடியாது. இப்படியான சூழலில் குழந்தைகள் கல்வி பெற குறைந்த பட்சம் மகிழ்ச்சியாக வாழ ஏதாவதொரு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். 


கல்வி குறித்து தொடர்ந்து பேசி வருபவர்கள்  செயல்பாட்டாளர்கள் , தன்னார்வலர் அமைப்புகள் , இயக்கங்கள் போன்றவை குழந்தைகளது கல்விக்காக மாற்று வழிகளை முன்வைத்து வருகின்றனர். 


அரசு தன்னிடம் கல்வித் தொலைக் காட்சி ஒன்றை கல்வித் துறையில் சில வருடங்களுக்கு முன்பாகத் துவக்கியது - தற்போது  NCERT கல்வி நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி சேனல்கள் வழியாக ஒளிபரப்பி வருகின்றது. நம் தமிழகத்திலும் SCERT , மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இணைந்து NCERT ஐப் பின்பற்றலாம். பெரும்பாலான பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன .விர்ட்சுவல் வகுப்பறைகளையும் கொண்டுள்ளன. 


இவற்றை எல்லாம் வைத்து கற்பித்தல் செயலுக்கு ஷிப்ட் முறையில் மாணவரை வரவழைத்து பகுதி பகுதியாக பாதுகாப்பான முறையில் கற்றலில் ஈடுபடுத்த திட்டமிடலாம். அல்லது கிராமங்களில் நோய்த் தொற்று பரவல் இல்லாத இடங்களில் ஆசிரியர்கள் உதவியுடன் வீதிகளில் கூட திறந்த வெளி வகுப்பறைகளைத் திட்டமிடலாம். 


ஆசிரியர் , பெற்றோர் , கல்வி அலுவலர் , கல்வியாளர்கள்  ஊர் மக்கள் இணைந்து செயல்பட வேண்டிய காலமிது . பள்ளிக் கல்வியில் புதிய பரிமாணங்கள் பிறக்க வேண்டும். 


உமா 






ஆசிரியரும் மாணவர்களும்

ஆசிரியரும்  மாணவர்களும்   


கல்வி ஒரு அரசியல் செயல்பாடு , கற்பிப்பவரும் கற்றுக் கொள்பவரும் 50% ஆசிரியராகவும் 50% மாணவராகவும் தங்களை உணர வேண்டும் என்கிறார் ஃபாவ்லோ ஃபிரேயர் .


ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரமாக விளங்குபவை கல்வி , பொருளாதாரம் , சுகாதாரம். பின்னிரண்டின் வளர்ச்சிக்கும் மிக அடிப்படையாக அமைவது கல்வி மட்டுமே. அத்தகைய கல்வியை வழங்கும் பள்ளிக்கூடங்கள் முதல் கல்லூரிகள் வரை கணக்கில் கொண்டால் , அவற்றின் ஆதாரமாக இருப்பவர்கள் ஆசிரியரும் மாணவர்களும் தான். கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டில் சம பங்கு வகிப்பது ஆசிரியரும் மாணவரும் என்றால் அதுவும்  மிகையாகாது. 


ஆசிரியரும் மாணவரும் இணைந்தால் என்ன செய்யலாம் ?  எதை வேண்டுமானாலும் செய்யலாம் . ஆம் ,வகுப்பறையின் இறுக்கத்தைத் தளர்த்தலாம். பள்ளிகளின் முகங்களை மாற்றலாம். இந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கும்  பாதை அமைக்கலாம். புதிய உலகம் படைக்கலாம்.   மாணவர்களின் வாழ்க்கைக் கனவுகளுக்கு விதை விதைக்கும் ஆசிரியர்கள் தான்  குழந்தைகளின்    மனதில் எந்நாளும் மாறாத நிலை பெற்று நின்று விடுகின்றனர். பள்ளிக்குள் காலடி எடுத்து வைக்கும்  மாணவர்களின் முதல் ரசனைக்குரிய நாயகர்களாக அவர்களது ஆசிரியர்களே அமைந்து விடுகின்றனர்.


ஒரு மாணவன்/மாணவி தன் வாழ்வின்  நீண்ட பயணத்தை ஏறக்குறைய 12 ஆண்டு காலம் பள்ளி ஆசிரியர்களுடனேயே வாழ்கின்றனர்.. வீடும் பள்ளியும் அவர்களின் வளர்ச்சிக்கு சரிபாதி பொறுப்பு எடுக்க வேண்டியதுதான்  யதார்த்தம். எனில் , பள்ளியில் ஆசிரியரே இரண்டாவது பெற்றோராக அந்த மாணவருடன்  வாழ வேண்டியதாகி விடுகிறது.  கல்வி என்பது பாடப் பொருளை மட்டும் கற்றுக் கொடுத்து தேர்வில் மதிப்பெண் பெற வைப்பதல்ல என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் புரிந்து கொள்கின்றனர். வகுப்பறைக்குள் ஒரு மாணவன் தான் வாழும்  சமூகத்தையும் அறிந்து கொள்கிறான்.அதைக் கற்றுக் கொடுப்பதும்  ஆசிரியரது கடமையாகிறது.


வகுப்பறைக்குள்  தான் சந்திக்கும் மாணவர்களுக்கு வகுப்பறையைத் தாண்டிய உலகத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டியது ஆசிரியர்களது அன்றாடப் பணிகளுள் முதன்மைப் பணியாகிறது. .  

மாணவர்க்கு பாடப்பொருளை திறம்படக் கற்பிப்பவராக மட்டுமின்றி பல பரிமாணங்களைப் பெற்றவராக ஆசிரியர் தன்னை வளர்த்துக் கொள்கிறார்.  மாணவர்களை சமூகத்திற்கு ஏற்ற வாழும் மனிதராக வார்த்தெடுக்கும் பணிகளைச் செய்வதும் அவரது தலையாய கடமையாகிறது. 


மாணவரின் இயல்பை அறிந்து அரவணைத்து , கற்றலில் ஏற்படும் சிக்கலை உளவியல் ரீதியாக அணுகி வாழ்வில் வெற்றியாளர்களாக மாற்றுவது ஆசிரியரின் பொறுப்பாகிறது. ஆசிரியர் மாணவர்களுக்குக் கற்பிப்பவராக மட்டுமில்லாமல் அவர்களிடமிருந்து  கற்றுக் கொள்பவராகவும் மாறும் போது அனைத்தும் எளிதாகின்றது. 


ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு பாடப் பொருள் அறிவை விட குழந்தை உளவியல் அறிவு கூடுதலாகத் தேவைப்படுகிறது. ஒரு வளரிளம் பருவ மாணவியிடம் உனக்கு ஏன் இந்த ஆசிரியரை மிகவும் பிடிக்கிறது எனக் கேட்டால் , அவர் மட்டுமே தோழி போல எங்களிடம் பழகுகிறார் என்கிறார் . மேல்நிலை வகுப்பு மாணவரிடம் ஒரு குறிப்பிட்ட பாட வகுப்பை மட்டும் ஏன் நேசிக்கிறீர்கள் என்ற கேள்வியை முன் வைத்த போது , அந்தப் பாடத்தின் ஆசிரியர் எங்கள் மீது எதிர்மறை சொற்களை வீசுவதில்லை. ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார் என்ற பதில் தருகின்றனர்.  ஆக மாணவர் வளர வளர அவர்களது எதிர்பார்ப்புகள் ஆசிரியரிடம் நிறைவடைந்தால், ஆசிரியர் - மாணவர் உறவில்  மிக நல்ல விளைவுகள் உருவாகின்றன. எந்த வித வகுப்பறையானாலும் அதன்  வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான அளவீடு   ஆசிரியர் - மாணவர் உறவு எனலாம். 


ஆசிரியர்கள் வெறும் கோப்புகளுடன் (files) பணிபுரியவில்லை , உயிருள்ள குழந்தைகளுடன் வாழ்கின்றனர்.  அவர்களைக் கையாள்வதில் உள்ள சிக்கல்களைக் களைதல்  , கற்றல் சூழலை இனிமையாக்குதல் , மாணவர் மீது தனிக்கவனம் செலுத்துதல் , மாணவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துதல்  , தனித்திறன்களை வளர்த்தல் , குடும்ப சூழலை அறிந்து அணுகுதல் , மகிழ்ச்சியான கற்பித் தலை வழங்குதல் இப்படி ஏராளமான குணங்களை ஒரு ஆசிரியர்  தனக்குள்ளே வளர்த்துக் கொள்ள மாணவர்களே உற்ற கருவிகளாகின்றனர். 


ஒரு மனிதர்  தன்னை ஆசிரியராக அடையாளப்படுத்திக் கொள்ள தனக்குள்  வளர்த்துக் கொள்ளும் பண்புகளை மாணவர்களை மையமாக வைத்தே பெறுகின்றார்.. அனுதினமும் தன்னை நம்பி வரும்  மாணவர்களை அறிவிலும் மற்ற எல்லா கோணங்களிலும் கூர்மைப்படுத்தும்  பொருட்டு தன்னைத் தானே இழைத்துக் கொள்ளும் பண்பைப் பெறுகிறார் ஒரு ஆசிரியர் . ஒரு வகுப்பறையில் இரு கை ஓசைகளாகவே ஆசிரியர் மாணவர் இருவரும் வாழ்கின்றனர். மாணவர்க்காக ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்வதும் ஆசிரியர் வழிகாட்டுதல்படி தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் மாணவரும் அமைந்து விடும் போது அதன்  விளைவுகள் சொல்லில் அடங்கா நன்மையைத் தருகின்றன . 


அதே போல மாணவர் நிலையில்  தன்னை உணர்ந்து செயல்படும் ஆசிரியர்கள் மாணவர் மனதில் வெற்றி பெற்றவர்களாகி விடுகின்றனர். ஆசிரயர் - மாணவர் உறவின் இடைவெளி குறையக் குறைய இருவரது வெற்றிகளும் மகிழ்ச்சியும் அதிகமாவது கண்கூடாகத் தெரியும். கல்வி ஆசிரியரிடம் இருந்து அல்ல ; மாணவரிடமிருந்தே தொடங்குகிறது என்கிறார் மாண்டிசோரி . இதை மனதிலிருத்தி மாணவரை அணுகுவதும் அவசியமாகிறது. 


ஆசிரியர் பணி அறப்பணி , அதற்கே உன்னை அர்ப்பணி என்பதன் பொருள் உணர்வதும் அவசியமாகிறது. ஒரு ஆசிரியரர் தன்னிடம்  கல்வி கற்க வரும் ஒவ்வொரு குழந்தைக்கும் முழுப் பொறுப்பாகி விடுகிறார். அவர்களை   வாழ்வில் வெற்றி பெற வைக்கத் தேவையான பொறுப்புகள் அனைத்தும் ஆசிரியர்க்குரியதாகி விடுகிறது. பள்ளிக்குள்ளும் , வீட்டிற்குள்ளும் சமூகத்திற்குள்ளும் மாணவரை வளர்த்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் விரும்பியோ விரும்பாமலோ  ஆசிரியர்க்கே வந்தடைகிறது. ஆகவே தான் ஒரு ஆசிரியருக்கு , தனது விருப்பு, வெறுப்பு , பொழுதுபோக்கு என  மற்றெல்லாவற்றையும் புறந்தள்ளி மாணவரை மையப்படுத்தி  பணியாற்றும்  அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது . ஆசிரியரும் மாணவரும் இந்த கட்டமைப்பிற்குள் தங்களைப் பொருத்திக் கொள்ளும் போது தான் அதற்கு பொருள் உண்டாகிறது. ஆசிரியர்களின் வாழ்வில் மாணவர்களுடனான பயணம் என்பது  மிகச் சிறந்த அனுபவம் . அதை விவரிக்க இயலாது. உணர்ந்து நெகிழ்ந்து அனுபவிக்க மட்டுமே இயலும் ..


உமா

மாநில ஒருங்கிணைப்பாளர் 

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு (A3)

நூற்றாண்டு கடந்த பெருமை மிகுபெண்களுக்கான அரசுப் பள்ளி

நூற்றாண்டு கடந்த பெருமை மிகுபெண்களுக்கான அரசுப் பள்ளி


கோவை மாநகரத்தின் பிரதான சாலையில் ராஜவீதியில் அமைந்துள்ள பள்ளி தான் கோ.து. வ .ச. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி . இப்பள்ளி 1894 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 இந்த வருடம் 125 ஆண்டுகளைக் கடந்து கோவையின் முதன்மைப் பள்ளியாக  பெருமையுடன் வீற்றிருக்கிறது. 


ஆரம்ப காலத்தில் கோவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் என்று பெயர் கொண்டு விளங்கியது.   தற்போது  ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தனிப் பெயரிலும் மேல்நிலைப் பள்ளி தனிப் பெயரிலும் அமைந்து இயங்கி வருகிறது.  சாலையின் இருபுறமும் அமைந்த இரு கட்டிடங்கள். மிகவும் கம்பீரமாக,  புராதன அருங்காட்சியகம் போல அமைந்திருக்கும் சிகப்புக் கட்டிடம் தான் பள்ளிக்குப் பேரழகு என்கின்றனர் அங்கு படிக்கும் மாணவிகள் . கலெக்டர் பில்டிங் என அழைக்கப்படும்  இது ஆங்கிலேயர் உருவாக்கிய கால கட்டத்தில் நீதிமன்றமாகவும் , பின்பு கலெக்டர் அலுவலகமாகவும் இருந்துள்ளது. 


சாலையின் மற்றொரு புறம் உள்ள பழைய கட்டிடத்தில் தூக்கு மேடைக்கான இடம் , சிறைச்சாலை அறைகள் ஆகியன இருந்துள்ளன. நூறாண்டுகளாக இந்த அமைப்புகளுடனேயே பள்ளி செயல்பட்டு வந்துள்ளது . கடந்த 2014 ஆம் ஆண்டில் தான் இவை அழிக்கப்பட்டு புதிய முகம்  பள்ளிக்கு  கிடைத்துள்ளது. 


கட்டமைப்பிலும் சரி , ஆசிரியர்கள் எண்ணிக்கை , மாணவிகளின் எண்ணிக்கை, அவர்களது திறமைகள் வெளிப்பாடு   என எல்லாத் தளங்களிலும் மற்ற பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்து அனைவரையும் வியக்க வைக்கின்றது. கோவை துணி வணிகர் சங்க உறுப்பினர்கள் சில வருடங்களுக்கு முன்பு 30 லட்சம் மதிப்பில் இப்பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தந்து உதவியுள்ளனர். அவர்கள் பெயராலேயே சுருக்கமாக கோ.து.வ.ச . அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியாயிற்று. 


முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைப்  பெண் குழந்தைகள் படிக்கும் , கோவை மாவட்டத்தின் ஒரே அரசுப் பள்ளி இது தான் . பொதுவாக , தொடக்க , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை எனப் பள்ளிகளில் பிரிவுகள் இருக்கும் .ஆனால் அனைத்தும் இணைந்த ஒரே பள்ளியாக இயங்குவது தான் இதன் சிறப்பு . 5 வயதில் பள்ளிக்குள் வரும் பெண் குழந்தை தனது 17 ஆம் வயது வரை அதாவது  பனிரெண்டாம் வகுப்பு வரை இதே பள்ளியில் படிக்கலாம் எனில் மகிழ்ச்சி தானே. குழந்தைகள் விருப்பப் பட்டால் ஆசிரியர் பயிற்சியையும் முடித்த பிறகு வெளியே வரலாம். பள்ளியைச் சுற்றி 20 கிலோ மீட்டர் தொலைவு வரைவசிப்பிடமுள்ள மாணவர்கள் இங்கு வருகின்றனர்.  


முதல் 5 வகுப்புகளிலேயே 15 பிரிவுகளும் 500க்கும் மேற்பட்ட மாணவர்களும் படிக்கும் பிரம்மாண்டம். 6 முதல் 10 வகுப்பு மாணவிகள் 1300,மேல்நிலை வகுப்பு மாணவிகள் - 900 , என  அனைவரும் ஒரே வளாகம் . இரு கட்டிடங்களிலும் மூன்று இடங்களில் வழிபாட்டுக் கூட்டம் என , தினமும் திருவிழாவாகவே அமைகின்றதாம் காலை பிரார்த்தனைக் கூட்டம். 


 நூற்றுக் கணக்கான வருடங்களாக கோவை மாவட்டத்தின் ஆயிரமாயிரம் பெண் குழந்தைகளுக்கு ஒரு விடிவெள்ளியாக அமைந்துள்ளது. தற்போது சுமார்  2800 குழந்தைகள் படிக்கும் இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை எப்போதும் 3000 த்திற்குக் குறையாது என்கிறார் அதன் தலைமை ஆசிரியர் .காரணம் பள்ளியின் பாதுகாப்பான சூழல் , சிறந்த கற்பித்தல் முறைகள் , கல்வி இணைச் செயல்பாடுகள் , தொழில்நுட்ப வளர்ச்சிகளை அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தலில் பயன்படுத்துதல் என்று சொல்லிக் கொண்டே போகலாம் .ஆசிரியர்களோ 93 பேர் . அது தவிர மாற்றுப் பணி ஆசிரியர்கள் , பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக த்தால் நியமிக்கப்பட்டவர்கள் என மிகப் பெரிய ஆசிரியர்கள் வளம் இங்குண்டு என்கிறார். 


ஆம் , 41 வகுப்பறைக் கட்டிடங்களை புதியதாக சமீப காலத்தில் கட்டியுள்ளனர். அவற்றில் 27 அறைகள் வகுப்பறைகளாகவும் மற்றவை தனித்தனியான பயன்பாட்டு வகுப்பறைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன .இசைக்காக ஒரு அறை , ஸ்மார்ட் வகுப்பறைகள் , விர்ட்சுவல்  வகுப்பறை , அறிவியல் கணினி அறைகள் , மிகப் பெரிய அனைத்து வசதியும் கொண்ட விழா அரங்கம், என பரிபூரண வசதியுடன் வகுப்பறைகள் பயன்பாட்டில் உள்ளன .12 சிசிடி கேமராக்களுடன் குழந்தைகளது பாதுகாப்பையும் பள்ளி உறுதி செய்கிறது .


9ஆம் வகுப்பிலேயே மாணவிகள் விருப்பப் பட்டால் தேர்வு செய்யும் தொழிற்கல்விப் பிரிவு பாட அமைப்புகள் உள்ள பள்ளி இது. நெசவு , தையல் பல்திறன் வளர்ப்பு , லேத், வெல்டிங் , எலக்ட்ரிகல் - எலக்ட்ரானிக்ஸ் , சமையல் , தோட்ட வேலை என இவை பல தரப்பட்டவை. டிஜிட்டல் தையல் எந்திரங்கள் உட்பட அனைத்து உபகரணங்களும்  கற்றலுக்கு ஏதுவாக இங்கு உண்டு. இவை சுமார் ஐந்தரை லட்ச ரூபாய் மதிப்பில்  வாங்கப்பட்ட பொருட்கள் என்கின்றனர் ஆசிரியர்கள் . மத்திய அரசின் சிறப்பு தொழிற்கல்வி சான்றிதழ் பெறும் படிப்புகள் இங்கு நடைமுறையில் உள்ளன. 


அதே போல மேல்நிலை வகுப்புகளின் பாடப் பிரிவுகள் வேறெந்த பள்ளியிலும் இல்லாத சிறப்புடன் இங்குண்டு .ஆம் , தட்டச்சு (Typing) , அலுவலக மேலாண்மை (office Managemeut) , தையல் , நெசவு இப்படி ஏராளமான 10க்கும் மேற்பட்டப் பிரிவுகள் உண்டு. 


கற்றல் கற்பித்தலுக்கான அனைத்து வசதிகளும் நிறைவாகப் பெற்றுள்ள பள்ளி. அரசு அளித்த ஹை டெக் லேப் இப்போது உள்ளது என்றாலும் பல வருடங்களுக்கு முன்பிருந்தே 30 கணினிகள் இணைய வசதியுடன் இயங்குகின்றன. மொழிப் பாடங்களுக்கான கணினி ஆய்வகங்கள் , கணக்குப் பாட கணினி ஆய்வகம்,  பட வீழ்த்திகள்  (Projector) வசதி  இப்படி தொடர்ந்து இயங்கும் அருமையான கற்றல் களங்களை உள்ளடக்கியுள்ளது. மாணவிகளே உருவாக்கும் கூகுள் கோடிங் (software) அனிமேஷன் இவற்றின் பயன்பாட்டை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. ஆம் கணினி அறிவில் தேடலுடன் கூகுள் கோடிங் - தயாரிப்பில் இணைந்து சென்ற வருடம் 400 மாணவிகள் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். மூன்று வருடங்களாக பல நூறு எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனராம் .


ஏறக்குறைய 17000 எண்ணிக்கையிலான புத்தகங்களைக் கொண்ட நூலகம் அமைந்து மாணவிகளை வாசிக்கத் தூண்டுகின்றன. இதன் நீட்சியாகக் கவிதை , கதை ,கட்டுரை எனவும் இலக்கியப் போட்டிகளிலும் பரிசு பெறும் மாணவிகள் ஏராளமாம். 


சாரணர் படையில் இராஜ்ய புரஸ்கார் விருது பெறும் மாணவிகள் வருடா வருடம் உண்டு. இதர அனைத்து கல்வி இணைச் செயல்பாடுகளான JRC , பசுமைப் படை , சாலைப் பாதுகாப்புப் படை, நாட்டியம் , பாடல்  என அனைத்து வகையிலும் பிரித்து மேய்கின்றனர் மாணவிகள்.

 

அதோடு விளையாட்டுத் துறையில் இப் பள்ளிக்கு தனிச் சிறப்புண்டு. முழுமையான வடிவமைப்புடன் கூடிய கூடைப் பந்து மைதானம் உண்டு. மாணவிகள் மாநில அளவில்  , தேசிய அளவில் எப்போதும் விளையாட்டு வீராங்கனைகளாகத் திகழ்கின்றனர். இவர்களை உருவாக்க 2 விளையாட்டு ஆசிரியர்களுடன் இப்பள்ளியில் விளையாட்டு இயக்குநரும் உண்டு . மாற்றுத் திறனாளி மாணவியை தேசிய வீராங்கனையாகக் கபடியில் அடையாளப் படுத்தியுள்ளனர் விளையாட்டு ஆசிரியர்கள் . சமீப நாட்களில் கூடைப் பந்து விளையாட்டில் 2 முறை தேசிய அளவில் ஹரியானா சென்று வந்துள்ள மாணவிகள் பற்றியும் கூறுகின்றனர்.


பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலைகள் இங்கு வழமையாகக் கற்றுத் தரப்படுகின்றன. சிலம்பம் , டேக்வாண்டோ , கராத்தே என மாணவிகளின் திறன் வெளிப்பாடும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அளவிட முடியாதவையாம் .இதோடு கலை நிகழ்ச்சிகள் என்றால் , குடியரசு , சுதந்திர தின நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலக  நிகழ்வில் , இப்பள்ளியிலிருந்து 6 பேருந்துகளில் அரசு அழைத்துச் செல்லுமாம் . மற்ற பள்ளிகளில் 10 , 20 மாணவிகள் என்றால் இங்கு 300 , 400 மாணவிகள் கலந்து கொள்வார்களாம். இசைக்கான வகுப்புகள் அதற்குரிய பிரத்யேக அறையில் தன்னார்வ அமைப்பின் உதவியால் தொடர்ந்து நடப்பதுடன் இசைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. 


கல்வி சார் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கும் மாணவிகள் , ஊக்கம்படுத்தும் ஆசிரியர்கள் என மாணவிகளின் திறன் களுக்கு மற்றொரு வாயில் இப்பள்ளி . மாநில அளவிலான வினாடி வினாப் போட்டி மண்டல அளவிலான தொடர் வெற்றி . ஸ்கோப் , இம்பார்ட் என்ற பெயருடைய பிராஜக்ட்ஸ் , இவற்றிற்கான களப்பயணங்களுக்கு  மாணவிகள் செல்வது என்று தங்கள் அறிவை விரிவாக்கிக் கொள்கின்றனர். அதோடு 9 ஆம் வகுப்பிலேயே ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பது என தங்களை ஆராய்ச்சி மாணவர்களாக பள்ளிக் காலத்திேலயே உணருகின்றனர். 


பள்ளிக்கான யூ டியூப் சேனலை உருவாக்கி ஆசிரியர்கள் , மாணவர்கள் இருவரது வளங்களும் அதில் பதிவேற்றம் செய்யப் பட்டது குறித்து இதன் பொறுப்பாசிரியர் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ராஜேஷ் குமார் பகிர்ந்து கொள்வதோ மேலும் வியப்பைத் தருகிறது. 


ஆம் , இப்போது கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது , ஆன்லைன் கல்வி எனப் பேசி வருகின்றனர் .ஆனால் எங்கள் பள்ளியில் பல வருடங்களாக இது நடந்து வருகிறது. எங்கள் பள்ளி யூ டியூப் சேனலில் பள்ளி குறித்த விழாக்கள் , மற்ற செய்திகள் காணொலிகள் உண்டு. அதோடு ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாடங்களை சிறு சிறு காணொலிப் பாடங்களாக மாற்றி மாணவிகளுக்காகப் பதிவிட்டுள்ளனர் - கமென்ட் பகுதியில் மாணவிகள் கேட்கும் தலைப்புகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்திப் பதிவிடுவர். தேர்வு காலங்களில் மாணவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவே இதை சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தோம். தற்போது 300க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளன. இவை பெற்றோரிடமும்  வரவேற்பு பெற்றுள்ளன. 


கல்வித் துறையில் பல பணிகளை பள்ளி விபரங்கள் உட்பட இணைய தளத்தில் பதிவேற்றத் தேவை ஏற்படும் . அவற்றை பள்ளியில் செய்தால் கற்பித்தல் பாதிக்கப்படும் என்பதால் வீட்டில் செய்ய வழிகாட்டு காணொலிகளும் எங்கள் பள்ளிக்கான ஆசிரியர் குழுக்களில் பகிர்வோம் . அதைப் பின்பற்றி வீட்டிலேயே இணைய வழி கணினிப் பணியை முடித்து விடுவோம் என்கிறார். 


 பள்ளி பெற்றோர் ஊர் மக்களிடம் வரவேற்பு பெற்று சிறந்து விளங்குவதை பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களின் செயல்பாடுகள் , பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் வழியே மேலும் அறிந்து கொள்ள முடிகிறது. 


பெண்களுக்கான பிரத்யேகப் பள்ளியாக நூற்றி இருபத்தைந்து ஆண்டு காலமாக இயங்கி பல தலைமுறைகளை உருவாக்கிய இப்பள்ளி மக்களுக்கான அரசுப் பள்ளியே .போற்றப்பட வேண்டியது. 


உமா



இன்றைய சூழலில் கல்வி - 1

இன்றைய சூழலில் கல்வி - 1


இந்தியாவின் இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான துயரத்தின் ஒற்றை அடிப்படையாகக் கல்வியின்மை இருக்கிறது - தாகூர் 


அவரது கூற்று 150 வருடங்கள் கடந்து இன்றும் இந்தியாவைப்  பல வழிகளில் அழுத்திக் கொண்டிருப்பதை நம்மால்  உணர முடிகிறது. 


சமூக முன்னேற்றம்  என்பது கல்வியை அடிப்படையாகக் கொண்டே நிகழும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஒரு மனிதன் இந்த சமூகத்தில் தனக்கான  எல்லாவித சுதந்திரத்தையும் புரிந்து கொள்ள உதவுவது கல்வி தான். மடை திறந்த அறிவை வழங்குவதும் கூட கல்வியின் அடுத்தடுத்த விரி சிந்தனைகளே எனலாம். இத்தகைய அறிவின் வாயிலை அடைய அறியாமை என்ற சிறைக்கதவைத் தகர்ப்பதாக நமது கைகளில் தரப்படும் பலமான ஆயுதம் ஒன்று உண்டெனில் அது பள்ளிக் கல்வி தான். 


இன்றைய நாளில் பள்ளிக் கல்வியை ஆய்வு செய்தோமானால்   நாடு முழுவதிலும் கல்வி குறித்தான , பல பிரச்சனைகளை நம்மால்  தொகுக்க முடியும் . தமிழகப் பள்ளிக் கல்விக்கும் இவை அனைத்தும் பொருந்தும்.


இப்படியான பள்ளிக் கல்வியின் ஒரு முக்கிய தவிர்க்க முடியாத இடமாக, நம் அனைவராலும் பார்க்கப்படுவது பத்தாம் வகுப்பு . இதற்கான பொதுத் தேர்வு  ரத்து என்ற அறிவிப்பைத் தொடர்ந்து,  வரும் நாட்களின் கல்வி குறித்தும் நம்மை சிந்திக்க வைக்கிறது. 


பொதுத் தேர்வு ரத்து ... அடுத்து செய்ய வேண்டியது என்ன ?


தமிழகம் வேறெப்போதும் இல்லாத பேரிடர் காலத்தின் ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. 

தொற்று பரவி வரும் இச்சமயத்தில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் குழந்தைகளின் உயிரைக்  கருத்தில் கொண்டு , பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது அரசு. மாணவர் நலன் சார்ந்து எடுத்துள்ள  அரசின் முடிவை மகிழ்ச்சியுடன் அனைவரும் வரவேற்கிறோம். அதே சமயத்தில்  கல்வி முறையின் அடுத்த நகர்வு குறித்தும்  பரிசீலிக்க வேண்டும் . தேர்வுக்கான மாற்று ஒன்றை நாம் கண்டறியத் தேவை எழுந்துள்ளது. நீண்ட காலமாக நம்மிடையே நிலவி வரும் மதிப்பெண் சார்ந்த தேர்வு முறையை மாற்றும் காலகட்டமாக  இந்தக் கொரோனா துயரக்  காலம் பாடம் கற்றுக் கொடுக்கிறது. 


மதிப்பீட்டின் இடைவெளி


தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களை மதிப்பிடுவதும் அதன் அடிப்படையில் பள்ளிகளைக் கணிப்பதும் , பள்ளிக் கல்வியைச் சீரமைக்கும் போது சந்திக்கின்ற களப் பிரச்சனைகளில் முக்கியமானவை .தற்போது  பள்ளிக்கல்வித் துறையில் நடைமுறையில் இருக்கும் மதிப்பீட்டு முறை குறித்து பார்ப்போம். 


 கல்வி உரிமைச் சட்டத்தின் (2010) படி ஒரு குழந்தை ஒரு வகுப்பில் என்ன கற்றிருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல் , மேல் வகுப்பிற்குத் தன்னிச்சையாக (automatic) செல்லலாம். அதோடு இச்சட்டம் 8 ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வைத் தடை செய்கிறது. ஆனால் பள்ளித் தேர்வுகளைத் (வாரியத் தேர்வுகளுக்கு மாற்றாக )

 தடை செய்யவுமில்லை , அவற்றை ஊக்கப்படுத்தவுமில்லை .மாறாக  ஒரு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டைப் (Continuous and Comprehensive Evaluation)

பின்பற்ற வழி காட்டுகிறது. 


ஆனால் இம்முறையின் விவரங்களில் தெளிவு இல்லை. மதிப்பீட்டிற்கான இப்புதிய அணுகுமுறை நடைமுறையில் மதிப்பீடே இல்லாமல் போகிறது என சில மாநிலங்களில் கருத்துகள் உள்ளன . இவற்றில் உள்ள குறைகளைக் களைந்து இந்த முறையை அறிவியல் பூர்வமாக அணுகும் முறைகளைக் கண்டறிய வேண்டியத் தேவை மிக அவசரமாக நமக்கு ஏற்பட்டுள்ளது.


ஏனெனில் தேர்வு முறை பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்பதும் உண்மை. பல நேரங்களில் தேர்வுகள் என்பவை குழந்தைகள் மீதான அதிகப்படியான அழுத்தத்தைத் தருவதுடன் , மனப்பாடமுறையை வலுவாக்குகிறது. ஆனால் தேர்வுகளை முற்றிலும் அகற்றிவிடுதல் என்பதும் ஏற்புடையதாக இருக்காது. ஆகவே தேர்வுக்கான மாற்றை உருவாக்கும் தேவையுடன் இந்த மதிப்பீட்டு முறையை சீரமைப்பதும் இன்றியமையாததாகப் பார்க்கலாம். 


மாணவர்களின் அடைவு குறித்த விவரங்கள் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் உடனடியாகத் தெரிய வேண்டியது தேவை தான். ஆனால் அதே சமயம் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கூட அவை அவசியமானவை .ஆனால் பள்ளிகளின் நடைமுறை மதிப்பீட்டு முறைகளோ தேர்வு முறைகளோ பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. பள்ளிக் கல்வி முறையின் பொறுப்புணர்வின்மையை இதற்கானக் காரணமாகக் குறிப்பிடலாம். ஏனெனில் தங்கள் குழந்தைகள் பள்ளிகளில் என்ன படித்திருக்கிறார்கள் , என்ன படிக்கப் போகிறார்கள் என்பது பற்றிய புரிதலோ பெற்றோர்களுக்கு இல்லாமல் இருப்பதும் இந்த மதிப்பீட்டு முறைகளின் விமர்சனங்களாக உள்ளன . மதிப்பீட்டு இடைவெளி தான் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே தேர்வுக்கு மாற்று முறைகளை வடிவமைக்கும் தேர்வு சீர்திருத்தம் தேவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் 


தேர்வுக்கு மாற்று முறை


 கடந்த 8 ஆண்டுகளாக நமது பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வரும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை  வலுவாக்கப்பட வேண்டும். திறன்கள் அடிப்படையில் மாணவரை மதிப்பீடு செய்யும் நடைமுறையான இந்த CCE முறை  தான்   மதிப்பெண்கள் சார்ந்த  தேர்வுகளுக்கான சிறந்த மாற்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த CCE எனப்படும் (Continuous and Comprehensive Evaluation) தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை

ஏற்கனவே 9ஆம் வகுப்பு வரை நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.  இதே முறையை 

 10 ஆம் வகுப்பிற்கும் இனி வரும் காலங்களில்  நீட்டிக்கலாம் . அப்படிச் செய்தால்   பொதுத் தேர்வு என்ற இறுக்க மனநிலையை உடைத்து மாணவர்களின் சுதந்திரமான மகிழ்ச்சியான கற்றலுக்கு வழி வகுக்கும்  . 


அதே போல தேர்வுகளின் உள்ளடக்கம் மற்றும் இயல்பு குறித்த ஆழ்ந்த சிந்தனை ஆசிரியர்களுக்கும் துறை சார்ந்த வல்லுநர்களுக்கும் தேவைப்படுகிறது. உதாரணமாக குழந்தைகளின்  மனப்பாடம் செய்வதல்லாத பிற திறன்களையும் மதிப்பிடும் வகையில் தரமான தேர்வுகளை வடிவமைப்பது சாத்தியம் .அவ்வாறே மனப்பாடத்திலிருந்து திறன் அல்லது புரிந்து கொள்வதை நோக்கித் தேர்வுகளின் கவனத்தைத் திருப்புவதற்கு திறந்த புத்தக (Open Book) தேர்வுகள் உதவும். 


உடனடித் தேவை 


மேற்கூறிய மதிப்பீட்டு முறைகளும் தேர்வுக்கு மாற்று என்ற கருத்தும் சார்ந்த சீர்திருத்தங்கள் ஒரு பக்கம் நடக்கட்டும். ஆனால்  பள்ளி திறக்கும் நாட்கள் நம் கண்களுக்குத் தெரியவில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட ஆக வாய்ப்புள்ளது. 


மாணவர்களுக்கு வீடுகள் அவ்வளவு மகிழ்ச்சியைத் தராது என்பது கண்கூடு , ஏனெனில் இது ஒரு அசாதாரண காலம் . விடுமுறை தினங்களில் மட்டும் வீடுகளில் இருந்து பழகிய குழந்தைகள் மாதக் கணக்கில் வீட்டுக்குள் முடங்குவதை உளவியல் அழுத்தம் என்ற வார்த்தைகளால் கடந்து போக முடியாது. 


பள்ளிகள் சில , குறிப்பாக தனியார் பள்ளிகள் 

இணையவழிக் கல்வியைக் (Online Teaching) கையிலெடுத்துள்ளன. ஆனால் அது

குழந்தைகளுக்கு எவ்விதத்திலும் வகுப்பறைக் கற்றலைப் போன்று  நிறைவு செய்யாது என்பது யதார்த்தம் .


நோய்த் தொற்று பரவலாக இருக்கும் பகுதிகளைத் தவிர்த்து அதிகப் பரவல் இல்லாத மாவட்டங்களில்  அங்குள்ள கிராமங்களில் தகுந்த பாதுகாப்புகளுடன் மாணவர்களையும்  அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து ஆசிரியர்கள் உளவியல் சார்ந்த கலந்துரையாடல்களை  மேற்கொள்ளலாம். 


பள்ளி திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ள ஊர்களில் உள்ள பள்ளிகளில் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களை வரவழைத்து பகுதி பகுதியாக முறை வைத்து ( Alternative days -  Shift) மாணவரை வரவழைத்து அதே போல ஆசிரியர்களையும் வரவழைத்து  உரையாடல்கள் மேற்கொள்ளலாம். 

தேவைப்படின் எளிய வகைப் பாடங்களை மாணவர் மனநிலைக்கேற்ப அறிமுகப்படுத்தலாம்  .


 எல்லாவற்றையும் விட மதிய சத்துணவை நம்பி அரசுப் பள்ளிக்கு வரும் லட்சக்கணக்கான மாணவர்கள் இருக்கின்றனர் .அவர்களுக்கான அத்தனை நிதி ஒதுக்கீடுகளும் இருக்கும். பள்ளி சமையவறையில்  உணவு சமைத்து மாணவருக்கு  வழங்கி வந்த நடைமுறையைத் தொடர வேண்டியது பள்ளிகளின் உடனடிக் கடமைகளுள் ஒன்று.


இன்றைய சூழலில் பள்ளி கிடையாது , குழந்தைகளுக்கு வீடு மட்டும் போதாது , ஜான் ஹோல்ட் அழுத்தமாய் வலியுறுத்திய ‘குழந்தைகளுக்கான மூன்றாம் இடம்’ (Third place) நினைவுக்கு வருகிறது. வீடும் பள்ளியும் போக குழந்தைகளுக்கான மூன்றாம் இடம்! என்கிறார்  பேரா ச .மாடசாமி,  இதயங்களை மலர வைக்கும் மூன்றாம் இடம். சக்கையாய்ப் பிழிந்து இதுதான் என்று இலக்கணம் வகுத்து வடிவமைக்கப்படாத மூன்றாம் இடம். புதுப் புது வடிவங்களில், புதுப் புதுக்  கற்பனைகளுக்கு இடங்கொடுத்து மலரும் மூன்றாம் இடம்! இன்றைய தேவை என்கிறார் 

இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 


தொடர்ந்து உரையாடுவோம் 


இன்றைய சூழலில் கல்வி - 2


ஆசிரியர்களே தேவையில்லை என்கிறார்  ரூசோ ,பள்ளிக் கூடமே அவசியமில்லை என்கிறார்  ஜான்ஹோல்ட் .


நோய்த் தொற்றின் அச்சுறுத்தலும் ஊரடங்கும் 

இவர்கள் கூற்றை உண்மையாக்கியிருப்பது   யதார்த்தம் .


குழந்தைகளுக்கான மூன்றாவது இடத்தை சிந்திப்பது குறித்து  சென்ற இதழில் பேசினோம். ஆனால்  இன்று வேறொரு பிரச்சனை நம்மை திசை திருப்பியுள்ளது. 

ஆம் ,நமது கல்வி முறையில்

 பள்ளிக் கல்வியின் இறுதி வகுப்புகளாக  அமைந்துள்ள 11 , 12 ஆம் வகுப்புகளின் சேர்க்கையில் இந்தக் கல்வியாண்டு முதல் கொண்டு வந்துள்ள மாற்றம் தான் அந்தப் பிரச்சனை .


மேல்நிலைக் கல்விப் பிரிவுகள் குழப்பத்திற்கு வழி வகுக்கின்றனவா ?


தற்போதைய மேல்நிலைக் கல்விப் பாட அமைப்புகள் புதியதாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. இவை உயர் கல்வி வாய்ப்புகளில் சிக்கல்களை  விளைவிக்கும் வகையில் உள்ளன .


கோத்தாரிக் கல்விக் குழுவின் பரிந்துரையின் பேரில் நம் தமிழகப் பள்ளிக் கல்வியில்

1977- 1978  கல்வியாண்டு முதல்

 10+2 என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேல்நிலைக் கல்வியில் பகுதி 1 மற்றும் 2 இல் மொழிப் பாடங்கள் தரப்பட்டிருக்கும்  .இது  தவிர  பகுதி - 3 இல் சிறப்புப் பாடங்களாகக்  கணிதம் , இயற்பியல் , வேதியியல் , உயிரியல் , விலங்கியல் , தாவரவியல் , கணக்குப் பதிவியல் , விவசாயம் ,மனையியல் , பொருளியல் , வணிகவியல் , அரசியல் அறிவியல் , வரலாறு , புவியியல் 

இப்படி ஏறத்தாழ  30 பாடங்கள்  உருவாக்கப்பட்டன.  பகுதி 3 இல்

ஒவ்வொரு பாடப்பிரிவிலும் நான்கு பாடங்களை மாணவர் படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுடன் சேர்த்து அவர்கள் படிக்க வேண்டியது மொத்தம் 6 பாடங்கள் , 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் .

இதை அடிப்படையாகக் கொண்டே கல்லூரிகளில் உயர்கல்வி வாய்ப்புகளை மாணவர் பெறும் நடைமுறை இருந்து வருகிறது.


தமிழகத்தின் இந்த மேல்நிலைக் கல்வி முறை இந்திய மாநிலங்களிலேயே தனித்தன்மையுடன் திகழ்ந்து வருவதாகவும் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. ஏனெனில் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்தப் பாடப் பிரிவுகள் உயர்கல்வியில் வழங்கி வந்தன. 


புதிய அரசாணை 166


கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு புதியதாக  அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசானை  166 - பள்ளிக் கல்வித் துறை 18.09.2019 , இன் படி பகுதி 3 - இல் புதியதாக ஒரு முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஏற்கனவே ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஃபர்ஸ்ட் குரூப், செகன்ட் குரூப் என்ற வகையில்  நான்கு பாடங்களைப் படிக்கும் மாணவன் இந்தப் புதிய அரசாணையின் படி மூன்று பாடங்களை மட்டும் படித்தால் போதுமானது. மாணவர் மன அழுத்தத்தைக் குறைக்கும் பொருட்டும் , உயர் கல்வி வேலை வாய்ப்பு இவற்றை அதிகமாக்கும் வகையிலும் இந்தப் புதிய முறை மேம்படுத்தப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்  விருப்பப் பட்டால் மூன்று பாடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது பழைய முறையான  நான்கு பாடங்களுக்கான முறையையும் தேர்வு செய்து கொள்ளலாம்

எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.


 இந்த அரசாணை நடப்புக் கல்வியாண்டிலிருந்து பின்பற்ற வழிகாட்டப்பட்டுள்ளது. இதன்படி மாணவன் 3 பாடங்களைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டிய மொத்தப் பாடங்கள் 5 மட்டுமே. இதில் 500 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும் . அல்லது மாணவன் 4 பாட முறையைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டியது 6 பாடங்கள் , மொத்த மதிப்பெண்கள் 600. 


உண்மையில் என்ன நடக்கிறது 


இந்தக் கல்வி ஆண்டில் கோவிட் - 19 பொது முடக்கத்தால் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்தாகி விட்டது என்பதை நாம் அறிவோம்.

தேர்ச்சி முடிவுகள் அரசின் வழிகாட்டலால் கிரேடு முறையில் தரப்படும் என்பதை விரைவில் எதிர் பார்க்கலாம். தனியார் பள்ளிகள் + 1 சேர்க்கையை தங்கள் வழியில் ஆரம்பித்து விட்டன. அரசுப் பள்ளிகளில் அரசின் முறையான வழிகாட்டலுக்காக தலைமை ஆசிரியர்கள் காத்துக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து விபரம் கேட்டு வரும் பெற்றோர்களுக்கு இந்தப் புதிய முறை குறித்த விளக்கங்களை அளித்து வருகின்றனர். 

 

தலைமை ஆசிரியர்களிடம் பேசும் போது  புதிய 5 பாட முறைகளைக் குறித்தே விளக்கி வருவதாகவும் , அதை அடிப்படையாகக் கொண்டு தான் சேர்க்கை நடைபெறும் என்று பரவலாகக் கூறுகின்றனர். அதற்கு நியாயமான காரணங்களையும்  முன் வைக்கின்றனர். அருகாமைப் பள்ளிகளில் ஒரு பள்ளியில் 5 பாடங்கள் இருந்து மற்றொரு பள்ளியில் 6 பாடங்கள் இருந்தால் குறைவாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்கள் 5 பாடமுறை உள்ள பள்ளிக்கே செல்கின்றனர். ஆகவே மாணவர் சேர்க்கைக் குறைவதால் நாங்களும் 5 பாடங்களைக் கொண்ட பாடப் பிரிவையே அறிமுகப்படுத்துகிறோம் என்கின்றனர். 


அதே போல 6 பாடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் இருந்தாலும் குறைந்த அளவில் மட்டுமே மாணவர் இருந்தால் அந்தப் பாடப் பிரிவை நடத்த பள்ளிகளால் இயலாது , கண் முன்னாலே காலாவதியாகும் பாடப்பிரிவுகளும் பள்ளிகளும் .


ஒரு பாடத்தைக் குறைப்பது   உயர்கல்வி வாய்ப்புகளுக்கான  பல வழிகளை அடைக்கும் 


நான்கு பாடங்களை உள்ளடக்கிய  முறையில் உதாரணமாக 

கணக்கு , இயற்பியல் ,வேதியியல் , உயிரியல் எனப் படிக்கும் போது ஒரு மாணவனுக்கு பொறியியல் , மருத்துவம் , விவசாயம் , உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர் கல்வியல்  வாய்ப்புகள் கிடைக்கும் . ஆனால் தற்போது  உயிரியல் பாடத்தை நீக்கி அது மூன்று பாடமாகக் குறையும் போது பொறியியல் துறை மட்டுமே படிக்க இயலும். வேறு மருத்துவம் சார்ந்த உயிரியல் பாடப் பிரிவை சார்ந்த நிறைய வழிகளை அடைத்து ஒரு வழிப் பாதையாக மாற்றும் போது அங்கும் மாணவன் தன் வாய்ப்புகளை இழக்கிறான் .


அதே போல இயற்பியல் , வேதியல் , உயிரியல் மட்டும் உள்ள பாடப் பிரிவை  புதியதாக அறிமுகம் செய்துள்ளது. இதில் கணக்குப் பாடமே இல்லாமல் ஒரு மாணவன் இயற்பியல் , வேதியியல் பாடங்களில் இடம்பெறும் கணக்குகளைத் தீர்ப்பது சவாலான ஒன்று. 

நீட் தேர்வு எழுதும் மாணவருக்காகவே இந்தப் பாடப் பிரிவு என்பது போல தோன்றுகிறது. நீட் தேர்வில்  சிபிஎஸ்ஸி பாடத்திட்டத்தில் தான் வினாக்கள் இடம்பெறும். அப்படி வினாக்கள்  அமையும் போது அதில் இடம் பெறும் இயற்பியல் , வேதியியல் வினாக்களைத் தீர்ப்பது என்பது ,ஒரு அரசுப் பள்ளிப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே அடிப்படைக்  கணக்குகள்  படித்த மாணவனுக்கு 

இயலாத காரியம் .


அதே போல அறிவியல் பாடப்பிரிவில் (science Group) மட்டுமே கணினி அறிவியலை தற்போதுள்ள பாட முறை தருகிறது . இவர்கள் மட்டுமே கணினி சார் கல்லூரிப் படிப்புக்கு செல்ல முடியும். கலைப்பிரிவு (ஆர்ட்ஸ் குரூப் ) மாணவர்களுக்கு கணினி பாடம் தற்போது இல்லை. எனில் ஆர்ட்ஸ் குரூப் தேர்வு செய்யும் மாணவர்கள் கணினி சார்ந்த உயர் கல்வியைக் கல்லூரிகளில் பெற முடியாது. அதே போல கணிணியும் இயற்பியல் வேதியல் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வியில் பொறியியல் , கணினி துறைகள் மட்டுமே வாய்ப்பு உண்டு. கணக்கே இல்லாமல் இவர்கள் மேல்நிலைக் கல்வி முடிப்பர். 


இவ்வாறு பல குழப்பங்களை இப்புதிய அரசாணை விளைவிப்பதோடு உயர்கல்வியில் மாணவர்களுக்கான எல்லா வழிகளையும் அடைப்பதற்கான ஆபத்துகளைத் தருகிறது. 


இது மட்டுமா ? இன்னும் விளைவுகள் 


நமது மாணவர்களை , கணக்கும் அறிவியலும் என இரண்டும் படிப்பதை நிறுத்தி நீ ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய் என அரசாணை  அவர்களது விருப்பத்தைத் தடை செய்கிறது. கணக்குப் பாடமே இல்லாமல் உயர்கல்விக்கு ஒரு அறிவியல் பாடப் பிரிவைப் பயின்ற மாணவன  அனுப்பும் முறை மாணவர்களிடம் தேக்கத்தையும் அச்சத்தையும் தான் உண்டு பண்ணும். 


இரண்டு வகையான முறைகளையும் தானே தருகிறோம் என்று ஒரு பதில் அரசு சொல்லலாம். ஆனால் இதே போலத்தான் தமிழ் வழி , ஆங்கில வழி எனக் கொண்டு வந்து விருப்பம் போல பாட வழிகளைத் தேர்வு செய்யலாம் என்ற நடைமுறை , இன்று தாய் மொழி வழிக் கல்வியை இல்லாமல் செய்து விட்டதை இங்கு பொருத்திப் பார்க்கலாம் .


அதோடு 15 வயது மாணவன் கணக்கை மட்டும் தேர்வு செய்து உயர் கல்வி செல்லும் போது புரிதல் வந்த பிறகு அறிவியலும் படிக்கலாம் என விருப்பப்படும் போது இது உதவாது. பழைய முறையில் +2 படித்து பாலிடெக்னிக் செல்ல விரும்பும் மாணவர் லேட்டரல் என்ட்ரியில் 2 ஆம் வருடம் சேர்வர். புதிய முறையில் இதுவும் கூட  தடைபடும் .


மூன்று பாடங்களை மட்டும் தேர்வு செய்யும் மாணவர் இழக்கும் உயர் கல்வி வாய்ப்புகளை வேறு மாநில மாணவர் எட்டிப் பிடிப்பர். இங்கு இந்த முறையில் படிக்கும் மாணவர்கள் வெளி மாநிலக் கல்லூரிகளில் சேர்வதற்குக் கூட வாய்ப்புகள் அற்றுப் போகலாம். 


தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை ஒன்று நீட் கோச்சிங் அல்லது ஜேஈஈ, ஐஐடி என குழந்தைகளை ஒற்றையடிப் பாதைக்கு அழைத்துச் செல்ல திட்டமிடும்  வழி இது. கோச்சிங் சென்டர் நடத்துபவர்களுடன் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் , பிரின்ஸ் பால் ஒப்பந்தம் செய்து கொண்டு மாணவர்களிடம் பணம் பறிக்கும் கொள்ளைக்கும் இது எதிர்காலத்தில் வழி வகுக்கும். 


மூன்று பாடம் வரும் போது ஆசிரியர் பணி இடங்கள் குறைக்கப்படும். அறிவியல் பிரிவில் தாவரவியல் , விலங்கியல் பிரிவுகளுக்கான ஆசிரியர்களில் யாரேனும் ஒருவர் இருந்தால் போதும் என ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்படும். கணினி பாடப்பிரிவுகள்  குறைவதால் கணினி ஆசிரியர்கள் 

எண்ணிக்கை குறைப்பதோடு ,நியமனமே எதிர்காலத்தில் இருக்க வாய்ப்புகளில்லை என்ற நிலை உருவாகும். .

இது மறைமுகமாக ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் நிலைக்கு வழிகோலும் . 


இவ்வாறு மக்கள் மத்தியில் குழப்பங்களை விதைப்பதோடு எதிர்கால சமுதாயத்தின் உயர்கல்வியை கேள்விக்குள்ளாக்கும் ஆபத்தை இந்த அரசாணை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. பன்முக வழிகளை அடைக்கும் இந்த அரசாணையை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. எப்போதும் போல 600 மதிப்பெண் பாட முறை தான் மாணவரது உயர் கல்வி , வேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டும் .


என்ன செய்யலாம் 


வாழ்வியல் சார்ந்த  சமூகத்தைப் புரிந்து கொள்ளும் கல்வியைக்  கற்றுக் கொடுக்கும்  ஆய்வுக் கூடங்களாகப்  பள்ளிகள் மாற்றம் பெற  வேண்டும். மேல்நிலைக் கல்வியில்  பயிலும் பாடப் பிரிவுகள் சம வாய்ப்பு முறையில் பரவலாக்கப்பட வேண்டும் .வாழ்க்கையோடு தொடர்புடைய மண் சார்ந்த பாடங்களைத் தொழிற்கல்விப் பிரிவுகளில் அறிமுகப்படுத்தலாம். 


தமிழகத்தின் எல்லா ஊர்களின்   மேல்நிலைப் பள்ளிகளிலும் விவசாயம் , தொழிற்கல்வி , அறிவியல்  , கணக்கு , அரசியல் அறிவியல், நெசவு, வரலாறு , புவியியல் , இலக்கியம் , இசை , உளவியல்  இப்படி ஏராளமான துறைகளை உருவாக்கிட வேண்டும். விரும்பும் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்யும் உரிமை எல்லாக் குழந்தைகளுக்கும்  கிடைக்க இது உதவும். இவ்வாறான கல்வி சீரமைப்பு காலமாக இந்தக் கொரோனா காலம் மாற்றம் பெறுவதே சிறப்பு .


உமா



இன்றைய சூழலில் கல்வி - 3


ஆன்லைன் கல்வியும் ஆஃப் லைன் கல்வியும் 


ஜூலை  மாதம் முடியப் போகிறது. வழக்கமான கல்வியாண்டு என்றால் பள்ளிகள் இயங்கி பாடநூல்கள் வழங்கப்பட்டு கற்றல் - கற்பித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால் பள்ளிகள் திறக்கப் படாமல் போனதால் , அதற்கு மாற்றாக ஆன் லைன் வகுப்புகளை  கையிலெடுத்தன    தனியார் பள்ளிகள் .


கடந்த ஏப்ரல் , மே மாதங்களிலேயே NEET வகுப்புகளுக்காகவும் , 12 ஆம் வகுப்புகளுக்காகவும் ஆன் லைன் வகுப்புகளை துவக்கி மாணவர் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் மன அழுத்தத்தை உருவாக்க ஆரம்பித்தன தனியார் பள்ளிகள் . 


தற்போது முதல் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை பள்ளி நடைமுறை போலவே காலை முதல் மாலை வரை ஆன் லைன் வகுப்புகள் ஊரெங்கிலும் பிரபலமாகி வருவது ஒரு புறம். 


கல்வி என்பதை ஒரு டிவைஸ் வழியே தர முடியுமா ? ஆசிரியர் - மாணவர் நேரடிக் கற்பித்தல் இல்லை என்றால் கற்றல் நடைபெறுமா ? இப்படி ஏராளமான கேள்விகள் ஒருபுறம். வீடுகளே குழந்தைகளுக்  பள்ளிக் கூடங்களாகவும்  பெற்றோருக்கு வேலை பார்க்கும் அலுவலகங்களாகவும் மாறிப் போய் மனதளவில் சிக்கல் உருவாகி இயல்பான உறவை சிதைக்கும் வன்முறை மறுபுறம். பெற்றோர்கள் புலம்பலையும் மாணவர் சலிப்புகளையும்  காது கொடுக்க முடியவில்லை. 


பல பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகளுக்கான இணைப்புகளைத் தராமல்  குழந்தைகளது கல்விக் கட்டணம் முழுமையாகக் கட்டப்பட்டால் தான் சேர்த்துக் கொள்ளும் நிலை , இதையொட்டிய செய்திகள் , புகார்கள் என ஒரு புறம் பூதாகரமாகப்  பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன .


இந்த ஆன் லைன் வகுப்புகளால் தொடர்ந்து பல விபரீதங்கள் , தனக்கு ஆன் லைன் வசதியில் கற்றல் சூழல் கிடைக்காததால் கேரளாவில் 14 வயது மாணவி தற்கொலையில் ஆரம்பித்து தமிழகத்திலும் இப்படியான நிகழ்வுகள் நம்மை பயமுறுத்தின. அது மட்டுமா , கோவையில் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் ஃபோனில் ஆன் லைன் வகுப்புகளை கவனிக்காமல் பாலியல் காணொளிகளைக் கண்டு நிஜ வாழ்க்கையில் பரிசோதிக்க அவர்கள் வீட்டின் மாடியில் குடியிருந்த குடும்பத்தில் ஒரு மாணவியை நாசம் செய்த செய்திகள் வரை நம்மை செய்வதறியாது திகைக்க வைக்கின்றன. அடுத்து,ஆன் லைன் வகுப்புக்காக  தனது மகனிடம் ஸ்மார்ட் ஃபோன் தந்து பப்ஜி விளையாட்டின் அப்டேட்டுக்காக தனது வாழ்நாள் சேமிப்பான 16 லட்சம் ரூபாயை இழந்த தந்தையின் துயரம் பற்றி சொல்லவே  வேண்டாம். 


கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் ஆன் லைன் வகுப்புகளைத்  தடை செய்த நீதிமன்ற வழக்குகளும் நாம் கவனிக்க வேண்டியவை .


ஓரளவு வசதி பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் கைகளில் அலைபேசி / கணினி வசதி இருப்பதால் பள்ளிகளுடன் மாணவர்கள் தொடர்பில் உள்ளனர் என்று இதை நேர்மறையாக எடுத்துக் கொள்வதா (அ) இதன் மோசமான விளைவுகளை வைத்து இணைய வகுப்புகளை ஆபத்து என எதிர்மறையாக அணுகுவதா என்று குழப்பத்தில் பெற்றோர்கள் இருக்கின்றனர். 


அரசுப் பள்ளிகளில் இணைய வழி வகுப்புகள்  சாத்தியமா 


தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் 90% குழந்தைகள் பெரும்பாலும் ஆன்ட்ராய்டு வசதியுள்ள அலைபேசி , கணினி என எந்த வசதியும் இல்லாதவர்கள். அப்படியே வைத்திருந்தாலும் 

இணைய வழிக் கல்விக்கு தினம் அவர்களது பெற்றோர்களால் ரீசார்ஜ் செய்ய பொருளாதார வசதி இருக்கிறதா என்பது கேள்விக்குறி. ஊரடங்கால் அன்றாடம் வேலையே இல்லாமல் வருமானமின்றி இருக்கும் குடும்பங்கள் இந்த வசதிகளை எப்படி ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது எல்லோரும் முன் வைக்கும் வினா. 


அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் பேசும் போது பெரும்பாலும் தங்களை குழந்தைகளிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருவதாகக் கூறுகின்றனர். வாட்ஸ் அப் வழியே பாடத் தொடர்புடையவற்றை அனுப்பி கற்றலில் ஈடுபடுத்தும் பணியைச் செய்து வருவதாகவும் கூறும் இவர்கள் , அந்த வசதி வெறும் 20% குழந்தைகளே பெற்றுள்ளனர் என்பதையும் வருத்தத்துடன் பகிர்கின்றனர். 


சத்துணவுக்காக பள்ளிக்கு வரும்  பல லட்சம் குழந்தைகள்  , மலைவாழ் பழங்குடியினப் பள்ளிகளில் படிக்கும் மலைப் பகுதி குழந்தைகள் , ஊரடங்கால் குழந்தைத் தொழிலாளராக மாறியுள்ள குழந்தைகள் என பல தரப்பட்ட குழந்தைகளை உள்ளடக்கிய அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன் லைன் கல்வி எப்படி சாத்தியம் என்பது திரும்பத் திரும்ப நம் முன் எழும் சந்தேகங்கள்.


உலக நாடுகளில் பின்லாந்து , கனடா , அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் தற்போதைய சூழலில்  ஆன் லைன் கல்வியை முன்னெடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் ஊரடங்கு சட்டம் போடுவதற்கு முன் திட்டமிட்டு  அதற்கான ஏற்பாடுகளை செய்து ஒரு நாளில் சில மணி நேரங்களில் மட்டும் ஆன் லைன் வழியே குழந்தைகளை கற்றல் - கற்பித்தலில் ஈடுபடுத்தியுள்ளனர். முக்கியக் காரணம் அங்கு ஒரே கல்வி முறை -பாடத்திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். அதனால் இணைய வழிக் கல்வி வெற்றி பெற்றுள்ளது. 


இந்தியாவில் கேரள மாநிலம் தொலைக்காட்சி முறை வழியே இணையவழிக் கல்வியை முன்னெடுத்துள்ளது. ஆனால் நமக்கு மாநில அரசுப் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் , மத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் , பன்னாட்டு பாடத்திட்டத்தைப்  பின்பற்றும்  பள்ளிகள்  என  பல பிரிவுகளானப்  பள்ளிகள் அங்கு பயிலும் குழந்தைகள் என வேறுபட்ட சூழலில் ஆன் லைன் கல்வி மிகப் பெரும் பிரச்சனையாக உள்ளது.


இப்படிப்பட்ட சூழலில் தான் கடந்த 8 ஆம் தேதி நமது கல்வி அமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். வரும் 13 ஆம் தேதி முதல் அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளது என்ற அறிவிப்பு. உடனடியாக ஊடகங்களின் பேசு பொருளாக மாறியது. இதை  அடுத்து 9 ஆம் தேதி அறிவிப்பு மாறுகிறது .ஆன்லைன் வகுப்புகள் அல்ல , தொலைக்காட்சி சேனல்கள் வழியாக பாடங்கள் கற்பிக்கப்படும் என்ற செய்தி பரவுகிறது. 


ஆசிரியர்கள் கருத்து 


9 ஆம் தேதி வரை இந்த அறிவிப்பு குறித்து பள்ளிகளுக்கு எந்தவிதமான அலுவலகத் தகவலும் வரவில்லை என்பதே ஆசிரியர்களின் ஒட்டு மொத்த பதில் .அதோடு எந்த வகுப்பிற்கு எந்த தொலைக்காட்சி சேனலில் எந்த நேரத்தில் வகுப்பு எடுக்கப்படும் என்று தெரியவில்லை என்கின்றனர்.  அதன் பிறகு 10 ஆம் தேதி வருவதாக எடுத்துக்  கொண்டாலும் இவற்றின் விபரங்களை மாணவரிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி .


அனைவருக்கும் ஆன்லைன் கல்வி சாத்தியமாகாது. ஆனால் தொலைக்காட்சிக் கல்வி   அனைவருக்கும் சாத்தியம்,பள்ளி நேரம் போல் நீண்ட நேர வகுப்புகள் பயன்தராது. அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் இருக்கலாம் என்ற கருத்தும் ஆசிரியர்களிடம் நிலவுகிறது. 


அதே போல் பாடம் கற்றுக் கொள்ள மாணவர்கள் முன்வருவார்களா என்ற உரையாடலில் வந்து விழுந்த பதில்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. 


உணவுக்கே வழி இல்லாத குழந்தைகள் தொலைக்காட்சி வழியாக எதனைக் கற்க முன்வருவார்கள் ? தங்கள் பெற்றோர்களோடு வேலைக்குச் செல்லும் மாணவர்கள் வீட்டில் டிவி பார்த்து பாடம் கற்றுக் கொள்வது இயலாத காரியமே . டிவி வழியே கார்ட்டூன் / திரைப்படங்கள்  பார்ப்பதும் கல்வி கற்பதும் ஒன்றல்ல இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.


ஏற்கனவே அரசின்  கல்வித் தொலைக்காட்சிகள்  வழியாக நீட் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தனது வாழ்நாள் லட்சியமாக மருத்துவக் கனவைக் கொண்டிருக்கும் குழந்தைகள் கவனமுடன் அவற்றைப் பார்த்து கற்றலில் ஈடுபடுவது எதிர்பார்க்கலாம். ஆனால் முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடங்களை கவனிக்க வைப்பதற்கான எந்தத் திட்டமிடலும் நம்மிடம் இல்லை. இது பயன் தக்க வகையில் கொண்டு செல்வது நமக்கு மிகப் பெரிய சவால் தான் என்கின்றனர். 


பாடங்கள் தயாராக இருக்கின்றனவா 


கடந்த ஒன்றரை  வருடங்களாக கல்வித் தொலைக்காட்சிக்கான பணிகள் பல லட்ச ரூmய் செலவில் தமிழகம் முழுக்க மாவட்ட வாரியாக குழுக்கள் அமைத்து நடந்து வருகின்றன. அவை சரியான முறையில் செயல்பட்டு மாணவர்களிடையே முறையாகப் பார்க்கும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் தற்போது சற்று இந்த வழிமுறையில் ஓரளவு வெற்றி கிட்டும். இதற்காக உழைத்து வந்த  ஆசிரியர்கள் சில நாட்கள் முன்பு வருந்திய செய்தி ஊடகங்களில் வலம் வந்தது. ஒரு திட்டமிட்ட நடைமுறையில்  தயாராக பணியாற்றி வந்த ஆசிரியர்களை இப்பணியில் தொடர அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வு நடந்தது . பாடங்கள் தயாராகவில்லை என்கின்றனர் கல்வித் தொலைக்காட்சியில் செயல்பட்ட ஆசிரியர்கள் . 


டி என் . டிஜிட்டல் ரெபாசிட்டரி (TN Digital Repository) என்ற வாட்ஸ் அப் குழு மே மாத ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு ஆர்வமுள்ள ஆசிரியர்கள் இணைக்கப்பட்டு கற்றல் வளங்களை (Digital Lessons) உருவாக்கி வந்தனர். ஆனால் அவர்களிடையேயும் சரியான வழிகாட்டல் இல்லாமல் பணி தொய்வடைந்ததாகக் கூறுகின்றனர். 


கடந்த வாரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சிறு குழுக்களாக ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பாடத் தலைப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கேற்ப காணொளிப் பாடங்கள் உருவாக்கும் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. 


ஏற்கனவே டிஜிட்டல் ரிசோர்ஸ் உருவாக்கும் குழு ஆசிரியர்கள் 11 ஆம் வகுப்பு பாடங்களுக்கு சிறந்த காணொளிகளை உருவாக்கி SCERT யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளதை இவ்விடத்தில் நாம் நினைவூட்டுகிறோம். 


மாநிலம் முழுவதும் ICT  பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வமாக இப்பணிகளில் ஈடுபட்டும் , தங்கள் பங்கை சரியான முறையில் கொடுக்கவும் தயாராகவே உள்ளனர். ஆனால் அவற்றை ஒருங்கிணைத்து, தொலைக்காட்சி ஊடகம் வழியே  மாணவரிடம் கொண்டு சேர்க்க இன்னும் கூடுதல் திட்டமிடல் தேவையாக இருக்கின்றது. 


ஆக இன்னும் முழுமையான திட்டமிடேலா 

செயல்பாட்டுக்கான வழிமுறைகளோ இல்லாததால் இந்த தொலைக்காட்சி சானல் வழியே ஒளிபரப்பப்படும்  பாட வகுப்புகளின் புரிதல் அனைத்து தரப்பிலும் முழுமையாக சென்றடைவதில் சிக்கல் நிலவுகின்றது. 


கற்றல் - கற்பித்தல் நிகழ்வு தொலைக்காட்சி வழியே சாத்தியமா 


கற்பித்தலும் கற்றலும் நிகழ உயிரோட்டமான வகுப்பறை மிகவும் அவசியம் என்பதை அனைவரும் அறிவோம் .இங்கு கற்பித்தல் மட்டுமே நிகழும் .


கல்வியைக் கற்கும் போது அது கேள்விக்கு உட்படுத்தப் படும் நிலைக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்கிறார் தோம் சாம்ஸ்கின் என்ற கல்வியாளர். 


அப்படி எனில் மாணவர்கள் பேசாத வகுப்பறைகளே இந்த ஆஃப் லைன் வகுப்புகளான தொலைக்காட்சி வகுப்பறைகள் . கற்றலின் படி நிலைகள் ஏதுமின்றி எந்திரத் தனமாக ஒருவர் பேசி வகுப்பு எடுப்பதை எவ்வளவு நேரம் மாணவர் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. ரிமோட் கன்ட்ரோலில் சண்டை போடும் வீடுகள் பெருகியுள்ள கொரோனா காலத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட சேனலில் பாடம் பார்ப்பானா அல்லது பிடிக்கவில்லை என்றால் ரிமோட் டில் மாற்றி சினிமாப் படத்தைப் பார்ப்பானா என்பதெல்லாம் அடுத்த வினாக்கள்.


ஒவ்வொரு பாடத்திற்கும் வேறு வேறு கற்பித்தல் முறைகள் , கற்றல் படிநிலைகள் உண்டு. சந்தேகம் வரும் மாணவனுக்கு சற்று புரிய வைத்து பாடம் நடக்கும் நிஜ வகுப்பறைகள் தான் கற்றலுக்கு வழி வகுக்கும் .இந்த பிம்ப வகுப்பறைகளை  ஏதோ யாருமே பார்க்க வில்லை என்றாலும் படம் ஓடும் தொலைக்காட்சி வகுப்பறைகளாகவேக் கருதலாம். 


புரிதல் , உட்கிரகித்தல் , குழுப் படிப்பு , தேடுதல் , ஆய்வு மனப்பான்மை , மாணவர் -ஆசிரியர் பகிர்வு இவற்றை உள்ளடக்கிய வகுப்பறைகளுக்கு மாற்றாக மேற் சொன்ன வகுப்பறைகளைப் பார்க்கவே முடியாது. 



மத்திய அரசின் வழிகாட்டுதலில் நாடு முழுவதும் ஆன் லைன் வகுப்பறைகள் உருவாகி வருவதன் மற்றொரு பரிமாணமே இந்த தொலைக்காட்சி வகுப்பறைகள் என்கின்றனர் கல்வியாளர்கள்.   எதிர்காலத்தில் ஆசிரியர் பணியிடங்களை துடைத்து வளரும் வர்த்தகக் கல்வியாக மாறிவிடும் அபாயத்தின் ஆரம்பமாகப் பார்க்கின்றனர். 


ஒக்லஹாமா பல்கலைக் கழக உளவியல் வல்லுநர் டக் வாலன்டினா  கூறும் முடிவுகளுடன் கட்டுரையை நிறைவு செய்யலாம் .மாதக் கணக்கில் ஆன்லைன்/ ஆஃப்லைன் வகுப்பறையில் கல்வி கற்கும் குழந்தையின் மனதில் , பின்வரும் மூன்று முடிவுகள்  உருவாகின்றன என்கிறார். 


 வாழ்க்கை என்பது தனக்கும் கருவிகளுக்குமானது. மனிதர்களுக்கும்  எனக்கும் சம்மந்தமில்லை என்ற நிலைப்பாட்டை ஒரு குழந்தை எடுக்கிறது. ஆகவே பெற்றோரிடம் பேச வேண்டுமென்றால்  டெக்ஸ்ட் மெஸேஜ் வழியாகப் பேசலாம் எனத் தோன்றி. வெளியுலக மனிதரிடம் தனது தொடர்பை விரும்பாமல் போகும் மனநிலை உருவாகிறது. இது ஒருவிதமான  மனநிலை, இதனால்   மரணத்தில் கூட அவர்களது வாழ்க்கை முடியும் அபாயம் உள்ளது. 


அடுத்து ஆன்லைன் கல்வியைத் தொடரும் ஒரு குழந்தை, தானா எல்லாம் நடந்து கொண்டுள்ளது.  நம்மால் இதை நிறுத்தவே முடியாது , ஆசிரியரிடம் பேசவோ கேள்வி கேட்கவோ  முடியாது , அதே போல் தான் சமூகமும் போல , தனக்கு நடக்கும் எதிலும் தான் தலையிட முடியாது என்ற முடிவுக்கு வந்து விடுகிறது.  குழுவாக இயங்க முடியாமல் சமூகமாக வாழக் கற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இது மிகப்பெரும் ஆபத்து. 


மூன்றாவது முடிவாக மாதக் கணக்கில் ஆன் லைன் கல்வியில் கற்கும் சூழலில் கற்றல் - எதிர்ப்பு (Anti Education) மனநிலைக்கு அக்குழந்தை தள்ளப்படுகிறது . இதனால் எதையுமே கற்றுக் கொள்ளாமல் எல்லாவற்றின் மீதும் குழந்தைக்கு சலிப்பு ஏற்படுகிறது. 


இவற்றை எல்லாம் இன்றைய ஆன்லைன் / ஆஃப்லைன் கல்வி முயற்சியில் மனதில் இருத்த வேண்டி உள்ளது. 


தொடர்ந்து பேசுவோம் 

உமா