Wednesday, 5 August 2015

மொரட்டுப்பாளைய மாணவர்

                                                 மொரட்டுப்பாளையத்தின் மாணவர்கள்…………………..




                   ஊர் பெயர்தான் மொரட்டுப்பாளையம்,ஆனால் மாணவர்கள் அனைவரும் மிக மிக மென்மையானவர்கள்………அங்கே படிப்பிலும்,மற்ற திறன்களிலும் எந்த மாணவர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர்.முதல் நாள் என்னை அனைவரும் ஆசையோடு வந்து விசாரித்தனர்.”டீச்சர்…நீங்க அடிப்பீங்களா?...இதுதான் ஆறாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து வந்த முதல் கேள்வி…..ஒரு சின்னச் சிரிப்பில் நான் அவர்களை சமாதானப் படுத்த முயற்சி செய்தேன்..
10 ஆம் வகுப்பில் இரண்டுடு பிரிவுகள்…நான் சென்றது ஜூலை மாதம் அல்லவா ! பத்தாம் வகுப்பு என்பதால் ஏற்கனவே பாமா என்ற ஆசிரியர் இரண்டு பிரிவுகளுக்கும் கணக்கு வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்க,தலைமை ஆசிரியர் எனக்கும் ஒரு வகுப்பைப் பிரித்துக் கொடுக்கத் திட்டமிட்டார்,அவர் வற்புறுத்தவில்லை, ஆனால் நான் ஆர்வமாக இருந்தேன்..ஏனெனில் இடைநிலை ஆசிரியராக இருந்த ஒவ்வொருவருக்கும் தெரியும்….பட்டதாரி ஆசிரியராகப் பதவிஉயர்வு என்பதே நெடுநாளையக் கனவாக இருக்கும்..அப்படிக் கிடைத்தவுடன்,எப்படி நம் பணியைச் செய்யாமல் இருப்பது?..ஆகையால்..நானாகக் கேட்டேன், எனக்கும் ஒரு 10 ஆம் வகுப்பு வேண்டும் என்று…..ஆனால் ……………..(நாளை சொல்கிறேன்)

No comments:

Post a Comment