07.07.2015
இன்றுடன் 6 வருடங்கள் முடிந்து ஏழாம் வருடம் தொடங்குகிறது,எனது கணிதப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கிடைத்து பணியில் சேர்ந்த நாள்…இந்நாள்.
……2001 ஆகஸ்ட் மாதம் 20ஆம் நாள், இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்த பொழுது இருந்த மனநிலையை விட சற்று பக்குவம் அடைந்து,கல்வியின் பொருள்-கற்பித்தல்-மாணவர்கள்-அவர்களது திறனின் உறுதி-நமது கடமை, ஒரு மாணவனுக்கு பாடத்திட்டத்தை விட முக்கியமாகக் கற்றுத் தர எவ்வாறு வழிநடத்துவது …...என ஒரு ஆரோக்கிய சிந்தனைப் போக்கு மனதின் ஊடே பிரயாணப் பட்டுவந்த நாட்கள்….
2009 இன் இதே நாள் ஜுலை 7-இல் தற்போதைய திருப்பூர் மாவட்டம்..(அன்று ஈரோடு மாவட்டம்) ஊத்துக்குளி என்ற வெண்ணைக்குப் பெயர்போன ஊரின் அருகே….மொரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராகப் பணியேற்கச் சென்றேன். அவ்வூருக்கு பேருந்து வசதி எப்போதாவதுதான்.11 என்ற எண்ணுள்ள அரசுப் பேருந்து மட்டுமே இருக்கும்.ஒரு வழியாக முதல் நாள் பள்ளியை சரியான நேரத்தில் அடைந்தேன்…அங்கு நான் கண்ட மாணவர் வெள்ளம்,அவர்களின் வெள்ளை உள்ளம்,சிரிப்பு, தெளிவு,தைரியம்,ஆவல்,குறும்பு….எதற்கும் எல்லையில்லை……….அவர்களோடு நானிருந்த நாட்கள் அற்புதமான தருணங்கள்..10ஆம் வகுப்பு கணக்குப் பாடம் கற்பிக்க என்னைத் தயார் படுத்தினேன்….
நிறைய அனுபவங்கள்..உங்களோடு பகிர்ந்து கொள்ள கடலளவு இருக்கின்றது….

No comments:
Post a Comment