Wednesday, 5 August 2015

பள்ளி வளாகம் - 4



மொரட்டுப்பாளையத்தின்                                       மாணவர்கள்………………….(3)





எனக்கும் ஒரு 10ஆம் வகுப்பு வேண்டும் எனக் கேட்டவுடன், தலைமையாசிரியர் சரி என்று கூறி, எந்த வகுப்பு வேண்டுமோ அதை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள் என பாமா டீச்சரிடம் சொல்லிவிட்டார். அவர்களும் என்னைக் கூட்டிக் கொண்டு வகுப்பறைக்கு சென்றார்.. மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்..பச்சை நிற வண்ண சீருடையில் மாணவிகளும்,வெள்ளை,காக்கி நிற சீருடையில் மாணவர்களும் ஒரே வகுப்பறையில் அமர்ந்திருக்க,இவர்கள் நமது புதிய கணக்கு ஆசிரியர் என்று பாமா டீச்சர் என்னை அறிமுகப்படுத்த,அவர்களது முகங்களின் உணர்ச்சி அப்படியே மாறிப்போனது...ஆம் 10ஆம் வகுப்பு என்றாலும் புதியவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு அவர்களிடம் இல்லை என்று, எனக்குப் பார்த்தவுடன் புரிந்துவிட்டது...என்ன செய்வது????(யோசிக்கலாம்.)

No comments:

Post a Comment