Friday, 27 July 2018

கற்க மேத் லேப்

இன்றைய நாளின் சிறப்பு :26.07.2018
***************************************

உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துதல் :
----------------------------------------------------------------
சென்னையைப் பொறுத்தவரை தொழில்நுட்பம் தான் உள்ளூர் வளமாக விரவி இருக்கிறது.

பள்ளிகள் எல்லாம் கற்பித்தலில் புதுமையை நோக்கிச் செல்லும் காலகட்டமாக இருக்கும் இவ்வேளையில் , கணக்குப் பாடத்தை கணினி வழிக் கற்க எம் பள்ளி மாணவிகளுக்கு கணினி ஆய்வகம் எனப் பொருள்படும் Computer lab இன்று திறக்கப்பட்டது.

வளர்ச்சியடைந்த நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தாலும்  , அதிக சிந்தனையும் மீத்திறனும் பெற்ற மாணவிகளாக இருந்தாலும் ,தனிப் பட்ட முறையில் அரசுப் பள்ளி என்றாலே அங்குள்ள மாணவர்கள் சற்று பொதுவான பார்வையில் ஏளனமாகத் தான் பார்க்கப்படுகின்றனர். அவர்களது குடும்ப சூழல் நாடு முழுவதும் ஒரே நிலையே.

வாய்ப்புகள் கிடைக்காமல் , ஒதுக்கப்படும் சூழல் , பாகுபாடு என இங்கு ஒரு தலைமுறைக்கு முன்பிருந்த பள்ளி சூழல் தான் இன்றும் பல ஆயிரம் பள்ளிகளில் நிலவுகின்றன.

ஒரு தனியார் நிறுவனம் தாம்பரத்தில் அமைந்துள்ளது , எமது பள்ளிக்கு உதவ முன்வந்து அணுகி பல முறை வந்திருக்கின்றனர். பெரிய பள்ளி , பணிச்சுமை அதிகம் என்பதாலும் மேலும் சில காரணங்களாலும்  தானாக வந்த வாய்ப்பு ஏற்கப்படாமலிருக்க ,

நான் இப்பள்ளிக்கு வந்து மிகச் சில மாதங்களே ஆகியிருந்த வேளையில் ,  சமீபத்தில் தான் நான் பள்ளிக்கு வந்திருந்தாலும், குழந்தைகளுடன் ஒட்டிக் கொண்டு , அவர்களோடே இருப்பதைப் பார்த்த தலைமை ஆசிரியர் எனக்கு ஒரு வாய்ப்பு தந்தார்.

ஆம் , அந்த தனியார் நிறுவனம் மீண்டும்  வந்த போது என்னை அழைத்து இது பற்றி பேச , இரு கரம் கூப்பி வாங்க வாங்க ... எதுவாக இருந்தாலும் குழந்தைகளுக்காக செய்வோம் எனக் கூறி , எனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க ,

அவர்களோடு தொடர்ந்து 5 மாதப் பயணம் ,இன்று எனது பள்ளியில் 53 மேசைக் கணினிகள் அடங்கிய கணக்கு கணினி  ஆய்வகம் ... இன்று ஆரம்பமானது .

6, 7, 8 ஆம் வகுப்புக் குழந்தைகளில் (தற்போதைக்கு) ஆங்கில வழி மாணவிகள்  ஒவ்வொன்றிலும் இரு வகுப்புகளுக்கு இந்த 'கற்க மேத் ' லேப் பயன்படுத்தப்படும் ,

இதற்காக ஒரு நிறுவன மேலாளர் ,ஒருங்கிணைப்பாளர் கொண்ட பெரிய குழு தொடர்ந்து உழைத்தது. உபகரணங்கள் வழங்கியதோடு அந்த பெரிய வகுப்பறைக்கு வண்ணமடித்து , மாதம் தோறும் சம்பளம் தந்து ஒரு கணினி ஆசிரியர் நியமித்து அத்துணை பெரிய உபகாரத்தைச் செய்துள்ளனர் ,

கற்பித்தலுக்கான மென்பொருள் , வழிகாட்டல் இவை அனைத்தும் கிருத்தி வாசன் என்ற நபர் (AItius foundation) , கான் அகாடமி வீடியோஸ் முதற்கொண்டு பயன்படுத்தி வடிவமைத்துள்ள ஒரு குழு , அவர்களின் தலைமை இவர் , இவரது சந்திப்பு , விளக்கங்களைத் தொடர்ந்து மே மாத விடுமுறையில் இதற்கான வகுப்புகளை எம் பள்ளி  கணக்கு ஆசிரியர்களை அழைத்துச் சென்று தீர்மானமாக ஏற்றுக் கொள்ள ஒரு சந்திப்பும் நடந்தது.

இதற்கு ஆரம்பமாக ஏற்கனவே கிருத்தி வாசன் வழிகாட்டலில் இயங்கும் எக்மோர் அருகே ஒரு பள்ளியைப் பார்வையிடச் சென்றோம் நானும் மற்றொரு ஆசிரியர் புவனாவும் , அந்த சந்திப்பின் போது  நான் பேசியதும் , காட்டிய ஆர்வமும் , கொடுத்த வாக்குறுதியுமே இந்த ப்ராஜக்ட் எம் பள்ளிக்கு வருவது உறுதியானது.

எல்லாம் முடிந்து கல்வி அலுவலர் அனுமதி பெற்று மற்றுமுள்ள சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவடைந்து ஆசை ஆசையாய் இதோ எனது பள்ளிக் குழந்தைகள் பரவசத்துடனே ...

இதற்கான நடைமுறை மிகப் பெரிய சவால் , ஆசிரியர்களுக்கு .. ஆம் இதற்கான கால அட்டவணை நேரம் அனைத்தும் மாற்றி , அறிவியல் பாடம் எடுத்த எனது மாணவர்களுக்கு இன்று முதல் இந்த ப்ராஜக்ட்டால் கணக்குப் பாடம் எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளேன்.

முதலில் 6 ஆம் வகுப்புக் குழந்தைகள் 94 பேர் (இரு பிரிவுகள் ) தேர்வு செய்து ,இதற்காக அடிப்படை கணக்கு செயல்பாடுகளில் தேர்வு வைத்து , மாணவர் நிலை அறிந்து அவர்களுக்கான பாடப்பொருளை ஒவ்வொரு கணினியிலும் உள்ளீடு செய்து , தனித்தனியாக கணினி எண் தந்து , இன்று அவர்களுக்கு வரிசையில் நிற்பது முதல் உள்ளே வந்து அமர்வது , நோட்டுகளை வரிசை மாறாமல்  எடுப்பது , திரும்ப வைத்து விட்டு வெளியே செல்வது , கணினியில் அமர்ந்து அதை இயக்கப் பழக்குவது , தங்களது User Name , Password பயன்படுத்தி ,log in , log Out செய்து முடிப்பது என அனைத்தும் பயிற்சி தருவதாக  அமைந்தது இன்றைய தொடக்க நாளில் .

பள்ளியின் குழந்தைகள் ,ஆசிரியர்கள் அனைவருக்கும் Dairy Millk தந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது Urjta நிறுவனமான இந்த ப்ராஜக்ட் தந்த நிறுவனம் .

அனுமதித்து உள் வர உதவிய தலைமையாசிரியர்  , குழந்தைகளுக்காக கற்பித்தல் முறையில் மாற்றம் தர ஏற்றுக் கொண்ட கணக்கு ஆசிரியர்கள் , பள்ளிக்கு இதை எடுத்துச் செல்ல அனுமதி தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் , 3 மாதமாக ஆய்வகத்தைத் தயார் செய்த பணியாளர்கள் , விரும்பி ஏற்ற மாணவர்கள் , மென்பொருள் தந்த Altius foundation , கிருத்தி வாசன் குழு , மொத்தமாய் பல லட்சம் ரூபாய்களை வாரிக் கொடுத்த ஊர்ஜிதா நிறுவன மேலாளர் ,ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும் மாணவர்கள், பள்ளித் த.ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களின் சார்பாக .

சிறப்பு நன்றி ஒருங்கிணைப்பாளர் ரோஸ்லின் அவர்களுக்கு ...

மிகப் பெரிய கூட்டு முயற்சியால் விதைக்கப்பட்டுள்ள இந்த நற்செயல் இன்னும் சில வருடங்களில்  மிகப் பெரிய விருட்சமாகும் என்பதில் பெரிய நம்பிக்கைக் கொள்கிறேன்.

அன்புடன்
உமா

No comments:

Post a Comment