Tuesday, 29 January 2019

போராட்டம்

ஆசிரியர் போராட்டமும் மக்களின் அறியாமையும் ...

இங்கு பேசுபவர்கள் அனைவரும் அவரவர் பார்வையில் சரியாகவே பேசுகின்றனர் .

அரசையும் கேள்விகள் கேட்க வேண்டும் , கல்விக்காகப் பெறப்படும்  வரிப்பணம் முழுவதும் கல்விக்காக செலவிடப்படுகிறதா ?

GDP  டெல்லி அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் சற்றேறக்குறைய  28% ஒதுக்கும் போது நாம் முறையாக ஒதுக்க வேண்டிய 6% . கூட ஒதுக்குவதில்லையே

தொடக்கப் பள்ளிகளில்  25 பாடங்கள் (5 வகுப்புகளுக்கு 5 x 5 ) சொல்லித் தர 2 ஆசிரியர்கள் போதுமா ?

கழிப்பறை வசதிகளே ெசய்து தராத அரசுப் பள்ளிகளே பெரும்பான்மை

பொதுப் பள்ளி முறையை ஏன் செயல்படுத்தக் கூடாது ?

தமிழ் வழியை ஒழித்து ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றியுள்ள லட் சக்கணக்கான பள்ளிகளில் ஆங்கில வழியில் பயின்ற , பயிற்சி முடித்த ஆசிரியர்களை ஏன் நியமிக்க வில்லை ?

விளையாட்டுத் திடல் இல்லாத பள்ளிகளுக்கு குழந்தைகளின் உடல் திறன் குறித்த நிலை என்ன ?

முறையான ஆசிரியர்கள் , மற்ற வசதிகள் எதுவுமே இல்லாத மெட்ரிக் பள்ளிகளுக்கு எதற்கு அனுமதி வழங்குகிறது ?

அது போன்ற மேட்டிமைப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதும் மற்றவர் தெரிந்தவர் உறவினர் குழந்தைகளைப் படிக்க வைக்கப் பரிந்துரை செய்யும் உயர் மட்ட கல்வி அதிகாரிகள் முதல் மந்திரிகள் வரை கோழிப்பண்ணை பள்ளிகளை வளர்ப்பது ஏன் ? அப்புறம் அரசுப் பள்ளிகளை மூடுவது தவிர வேறு என்ன செய்ய முடியும் ?

ஆசிரியர் போராட்டம் விமர்சிக்கப்படும் அதே அளவு மக்களின் கல்வி சுரண்டல் , இலவசக் கல்விக்கு எதிரான வியாபாரப் போக்கு இதுவும் கேள்விகளுக்கு உள்ளாக்கப் பட வேண்டும் .

ஆசிரியரே இல்லாத வகுப்பறைகளில் தனது குழந்தைகளை எந்தப் பெற்றோரும் சேர்க்க  விரும்புவார்களா ?

அப்படி ஒரு சூழலை இந்த அரசாங்கம்  அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தி வைத்துள்ளது.

இருக்கும் 2 ஆசிரியர்களுக்கும்  1008 வேலைகளைக் (பதிவேடுகள் தயாரிப்பு , அவசர மீட்டிங் , தபால் - பதில் , சர்வே இப்படி ) கொடுத்து விட்டு , அவர்கள் அரசு அதிகாரிகளுக்கு பயந்து கற்பித்தவை கடைசி option ஆக வைத்தால் எந்தப் பள்ளிகள் சுகிக்கும் ?

இதில் முப்பருவக் கல்வி முறை வந்த பிறகு .... கற்பித்தலே சுத்தமாக நின்று செயல்பாடுகள் எனக் கூறி மாணவர்களை முற்றிலும் புரிதலற்ற நிலைக்கு வழி வகுக்கும் வகுப்பறைகளை உருவாக்க ஆசிரியர்களை நிர்ப்பந்திக்கும் அரசு ....

இப்படி உள் இருக்கும் பிரச்சனைகளை மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.

இன்னும் நிறைய பிரச்சனைகள் உண்டு

No comments:

Post a Comment