#தினம்_ஒரு_மாணவர்_மதிப்பீடு : 3
#மீள்
நம்முள் சில ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் மட்டுமே நடத்தி பழக்கப்பட்டு விட்டது, சில மாணவர்கள் புரிதலில் பாடம் தாண்டி வகுப்பறை உரையாடல்கள் கூட தவறு என புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு உதாரணம் இதோ ....
எனது வகுப்பறையில் பிடிக்காததைச் சுட்டிக் காட்டியுள்ள இக்கடிதத்தில் நீங்கள் இதை மாற்றிக் கொள்ள வேண்டும் என மனம் திறந்த இக்குழந்தையின் கடிதம் இதோ ... (பிழையைத் திருத்தாமலேயே இங்கு தருகிறேன் )
- அன்பும் நிறைந்த பாசம் நெகிழ்ந்தா உமா மகேஸ்வாரி ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய பாசமிக்கா வணக்கம்
மிஸ் நீங்க நல்ல Lesson எடுக்கறிங்கா டைம் ஆதிகமாக இருக்குது அன நிங்க பேசும் போது பாதி டைம் முடிச்சு, நிங்க நாடத்தும் போது நடுவிலே ரெம்ப பேசறிங்க , அதை விட்டு நீங்க பாடத்தில் கவணிக்க வேண்டும் நிங்க கவணிக்காவன எங்களுக்கு தூக்கம் தான் வருது. நீங்க அதை மட்டுமே மாத்திடுங்க நிங்க நல்ல ஆசிரியர் நிங்க எனக்கு மட்டும் அல்ல இந்த பள்ளிக்கே அசிரியார் ரக வர வேண்டும் என்று அசை உங்கள் போல் ஒரு ஆசிரியார் கிடைப்பதற்கு எங்கள் வகுப்பறை கொடுத்து வென திருக்க வேண்டும்
நன்றி இப்படிக்கு பாசம் மிக்க
அன்புள்ள மாணவி
வி.ஜனனி 6 ஆ 2 பிரிவு
தொடரும்
அன்புடன்
உமா
No comments:
Post a Comment